Wednesday, May 3, 2017

வெனிஸ்

கடலில் மிதக்கும் கம்பீர நகரம் - வெனிஸ்

மத்திய தரைக்கடலின் மகாராணி

அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும் என ஆங்கிலக்கவிஞர் சாமுயல் ரோஜர்ஸ்-ஆல் விவரிக்கப்பட்டுள்ள அந்த கம்பீரமான நகரம் தான் வெனிஸ்.
மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நு}ற்றhண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள வெனிஸ் நகரம் இன்று பலருக்கும் தெரிந்த நகரம். இந்நகரத்தின் வணிகன் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் பற்றியும் அதில் வரும் ஷைலாக் எனும் வட்டிக்காரன் பற்றியும் பலரும் அறிந்திருப்பர்.   அதுமட்டுமில்லாமல் நீரின் மேல் இந்நகரம் கட்டப்பட்டதா? அல்ல.. நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழ்ந்ததா? என புருவங்களை உயர வைக்கும் இந்நகரிலுள்ள தண்ணீர்த் தெருக்களில் செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனம் படகுகளே... படகை இங்குள்ளவர்கள் கண்டோலா எனவே அழைக்கின்றனர். இங்கு வீடுகளுக்கு விதவிதமான வண்ணங்கள் அதில் குடியிருப்பவர்கள் பூசுகிறhர்கள். அதனால் நகரமே வண்ணமயமாக உள்ளது. மேலும், இங்கு பிரமாண்டமான, நவீனமான கட்டிடங்களைக் கட்டினால் அந்நகரின் பழமையான தோற்றம் போய்விடும் என்று அம்மக்கள் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பாரம்பரிய வரலாறு கொண்ட வெனிஸ் நகரம் முழுவதும் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கிறன.
வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நு}ற்றhண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். அந்தளவிற்கு இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம்.
பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு.  கண்கவர் காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும் இந்த வெனிஸ் நகரில், தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் துரிகை பிடிக்கத் தூண்டுகின்றன.
இங்கிருக்கும் முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒரு சேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது  ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நாம் உணரக்கூடும்.
கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. ஆம்.. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருக்கின்றன. ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் சுதந்திரமாக நடந்து சென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறhர்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிலடங்கா கடைகள் இங்கு உள்ளன. கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது.  மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம் தான்.
கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாக நிற்பர். பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்த வெனிஸ் நகரம், லாஸேரே நிசீமா என அழைக்கப்படுகிறது. அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதே அதன் அர்த்தம். “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நு}ற்றhண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-ம் நு}ற்றhண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்த போது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை. ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை. ஒன்றhகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றhகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.
 “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றhகவே இருக்கும்.”

பயணம்  தொடரும்…



No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...