Wednesday, May 3, 2017

ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்...

ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்...

சால்மலாவில் சஹஸ்ர லிங்கம்...


லிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம்.. அதிலும் வடிவம் உடைய, வடிவம் அற்ற என்ற இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட அருவுருவமற்ற நிலை இது. லிங்க வழிபாடு என்பது இந்தியாவில் மிகவும் பழமையானது. அதிலும், சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ்வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என பல சான்றுகள் கிடைத்துள்ளன.
அந்த லிங்கம் ஓடும் நதியிலிருக்கும் பாறைகளில் இருக்கின்றன என்றhல் ஆச்சர்யமும்.. அதிசயமுமாகவே தோன்றுகிறது நம்மில் பலருக்கு.. அதிலும் ஒரு லிங்கம் கூட அல்ல சஹஸ்ர  லிங்கங்கள்.. அதென்ன சஹஸ்ர லிங்கங்கள்.. சஹஸ்ர என்றhல் ஆயிரம் என பொருள்.. ஆம்.. ஆயிரம் லிங்கங்கள் ஆற்றிற்குள் தனக்குத்தானே ஜலாபிஷேகம் செய்துக் கொண்டிருக்கின்றன. அந்த அதிசயம் நிறைந்த நதி எங்கிருக்கிறது.. அந்த நதியிலுள்ள லிங்கள் எங்கு இருக்கின்றன என்பதை இந்நிகழ்ச்சியில் நாம் காணலாம்…

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் உள்ள சால்மலா ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் இந்த சஹஸ்ர லிங்கங்கள் இருக்கின்றன.
ஆம்.. கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். அந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் தான் ஆயிரம் லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில் தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன.
இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆலயங்களில் உள்ள லிங்கங்களுக்கு நடத்தப்படுவது போல் இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம் தான். இது தான் இங்குள்ள சஹஸ்ர லிங்கங்களின் சிறப்பாகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இந்த இடத்திற்கு வருவது ஒரு வித மன அமைதியையும் கொடுக்கிறது. சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றன. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை, இந்தப் பகுதியில் இருக்கும் போது நாம் உணர முடிகிறது.
இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்கின்றனர், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.
இதே போல கம்போடியா நாட்டில் ஓடும் ஒரு ஆற்றிலும் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில் அங்கோர்வட். இங்கிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில் தான் இந்த ஆயிரம் லிங்கங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. ஆனால் இந்தப் பகுதிக்குச் செல்ல சபரிமலையைப் போன்று, காடுமேடுகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். கபால் சியான் என்றhல் ‘பாலம்’ என்று பொருள். இங்கு இயற்கையாக அமைந்த கல் பாலம் ஒன்று இருக்கிறது. இதன் வழியாகத்தான், சஹஸ்ர லிங்கம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். ஆறு மட்டுமின்றி இங்கு 50 அடி உயரம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.
இந்தியாவின் ஒரு கரையில் உள்ள கர்நாடக மாநிலத்திலும், பல மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டிலும் ஒரே போன்று ஆயிரம் லிங்கங்கள் வடிக்கப்பட்டிருப்பதும், அதுவும் அவை அனைத்தும் ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளிலேயே செதுக்கப்பட்டிருப்பதும், இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

தேடல்கள் தொடரும்..
இரா.ஜhன்சிராணி கண்ணன்

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...