தடையை தகர்த்தெறியுமா ..? சண்டை சேவல்
ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றhக இருக்கும் இந்த சேவல் சண்டைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றhலும், இந்த சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் பலர் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறhர்கள்.
2000 ஆண்டுகள் பழமையான இந்த சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வௌ;வேறு இடத்துக்கு ஏற்ப வௌ;வேறு விதிகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. இந்த கோழிச்சண்டையை ஒரு விளையாட்டாக புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்து வந்ததாகவும் பின்னர் நாளடைவில் அது போட்டியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சேவல் சண்டையானது மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
சேவல்களை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
சேவல் சண்டையில் வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை என்றும், கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை என்றும் இருவகை உண்டு. இந்த இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வௌ;வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்து விடும்.
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலு}ர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்களே.
வெப்போர் சேவல்களை அசில்(Aளடை அல்லது Aளநநட) என்றேஅலைகின்றனர். காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே. அதன் அர்த்தம் “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்பதே. இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சேவல் சரியாக சண்டையிடும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்பர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று பயிற்சியின் போது கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.
சேவல் சண்டை என்பது ஒரு மணி நேரம் 45 நிமிடம் நடைபெறுகிறது. இதில் 15 நிமிடங்களுக்கு இடைவேளை. அதனைத் தான் தண்ணிக்கு எடுப்பது என்பர். அப்போது சேவலின் காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம், குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் தெம்பூட்டப்படுகிறது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. அதே போல, சேவலின் அலகு அதாவது மூக்கு மண்ணில் பட்டுவிட்டாலும், எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சேவல், லட்ச ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற சேவலை, போர் வீரனைப் போல் கொண்டாடுவர்.
இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக ரேஜh என்றழைக்கப்படும் குள்ளமான சேவல்கள், கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. இவை மட்டுமின்றி பேட்டை போன்று காட்சியளிக்கும் “பேட்டை மாதிரி” தாடியுடன் இருக்கும் “கல்வா” ஆகிய வகைகளும் உள்ளன.
வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜhக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு ஆக்ரோஷமாக்கி சேவல்களை மோதவிடுகின்றனர். கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. வால் நீளமாக இருக்கும் கத்தி சேவல்களில், பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நு}லாவள்ளுவர், ஆந்தை, மயில் என்பன.
கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல். கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள். கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.
வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம்;. சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள்.
கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் என சேவல்களில் பல இரகமுண்டு. அதேபோலக் கால்களைப் பொறுத்தும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் என நீண்டு கொண்டே போகிறது அதன் பட்டியல்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதன் பெயரே நடவு போடுதல்;. நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. பின்னர், சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். இதுவே முகைய விடுதல் என்பதாகும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதனையே “கோச்சை” எனபர்.
இத்தகைய வீர விளையாட்டாக கருதப்படும் சேவல் சண்டை அண்மை காலமாக Nதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், பண்டைய இலக்கியங்களில் 64 கலைகளுள் சேவல் சண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இத்தனை பெருமைக்குரிய அறிய விஷயமான சண்டை சேவல்களையும், அக்கலையையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.
தேடல்கள் தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.
ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றhக இருக்கும் இந்த சேவல் சண்டைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றhலும், இந்த சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் பலர் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறhர்கள்.
2000 ஆண்டுகள் பழமையான இந்த சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வௌ;வேறு இடத்துக்கு ஏற்ப வௌ;வேறு விதிகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. இந்த கோழிச்சண்டையை ஒரு விளையாட்டாக புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்து வந்ததாகவும் பின்னர் நாளடைவில் அது போட்டியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சேவல் சண்டையானது மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
சேவல்களை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
சேவல் சண்டையில் வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை என்றும், கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை என்றும் இருவகை உண்டு. இந்த இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வௌ;வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்து விடும்.
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலு}ர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்களே.
வெப்போர் சேவல்களை அசில்(Aளடை அல்லது Aளநநட) என்றேஅலைகின்றனர். காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே. அதன் அர்த்தம் “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்பதே. இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சேவல் சரியாக சண்டையிடும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்பர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று பயிற்சியின் போது கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.
சேவல் சண்டை என்பது ஒரு மணி நேரம் 45 நிமிடம் நடைபெறுகிறது. இதில் 15 நிமிடங்களுக்கு இடைவேளை. அதனைத் தான் தண்ணிக்கு எடுப்பது என்பர். அப்போது சேவலின் காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம், குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் தெம்பூட்டப்படுகிறது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. அதே போல, சேவலின் அலகு அதாவது மூக்கு மண்ணில் பட்டுவிட்டாலும், எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சேவல், லட்ச ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற சேவலை, போர் வீரனைப் போல் கொண்டாடுவர்.
இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக ரேஜh என்றழைக்கப்படும் குள்ளமான சேவல்கள், கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. இவை மட்டுமின்றி பேட்டை போன்று காட்சியளிக்கும் “பேட்டை மாதிரி” தாடியுடன் இருக்கும் “கல்வா” ஆகிய வகைகளும் உள்ளன.
வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜhக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு ஆக்ரோஷமாக்கி சேவல்களை மோதவிடுகின்றனர். கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. வால் நீளமாக இருக்கும் கத்தி சேவல்களில், பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நு}லாவள்ளுவர், ஆந்தை, மயில் என்பன.
கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல். கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள். கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.
வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம்;. சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள்.
கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் என சேவல்களில் பல இரகமுண்டு. அதேபோலக் கால்களைப் பொறுத்தும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் என நீண்டு கொண்டே போகிறது அதன் பட்டியல்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதன் பெயரே நடவு போடுதல்;. நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. பின்னர், சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். இதுவே முகைய விடுதல் என்பதாகும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதனையே “கோச்சை” எனபர்.
இத்தகைய வீர விளையாட்டாக கருதப்படும் சேவல் சண்டை அண்மை காலமாக Nதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், பண்டைய இலக்கியங்களில் 64 கலைகளுள் சேவல் சண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இத்தனை பெருமைக்குரிய அறிய விஷயமான சண்டை சேவல்களையும், அக்கலையையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.
தேடல்கள் தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.
No comments:
Post a Comment