Wednesday, May 3, 2017

உடல் எடையைக் குறைக்க எளிய வழி

உடல் எடையைக் குறைக்க எளிய வழி

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சில செயல்களை அன்றாடம் செய்து வர வேண்டும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 தேக்கரண்டி (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கால் தேக்கரண்டி (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு முக்கால் மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும்.

காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும்.  மதியம் புழுங்கலரிசி சோற்றை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1,2 குவளை (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1 தேக்கரண்டி (5 மி.லி.) தேன் கலந்து பருகவும்.

மாலையில் 1 குவளை (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.

மன அழுத்தம் நினைவுத் திறனை பாதிக்கலாம்

அதிகப்படியான மன அழுத்தம் நினைவுத் திறனை பாதிக்கலாம் என்று கண்டறியப் பட்டுள் ளது. அதாவது, தொடர்ந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக நடந்து கொண் டிருக்கும் போது, அதனால், நினைவுத்திறன் பாதிக்கப் படுகிறது என்றும், மூளைக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தும் திறன் மங்குவ தாகவும் விஞ்ஞானிகள் தாங்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, ஒரு சம்பவத்தை நினைவில் வைத்து தேவையான போது ஞாபகத்தில் கொண்டு வரும் திறன், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு எதிர்காலத் திலும் அந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்பு ஏற்படு கிறது. எனவே மனதை அழுத்தம் இல்லாமல் லேசாக வைத்துக் கொள்ளும் வழிகளை தேடுங்கள். நினைவுத் திறனை காக்கலாம்.

--

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...