Wednesday, May 3, 2017

சுற்றுலா சொர்க்கம்… (Tour Special)

முகில்கள் விளையாடும் மூணாறு

மூணாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில்.

முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றhறு என்றிருந்து மூணாறhகியுள்ளது.

சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நௌpந்து செல்லும் பாதைகளும் கண்கொள்ளாக் காட்சி இங்கு.

உதகமண்டலம், கொடைக்கானலுக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றhவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே.

ஜhன் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்பதே உண்மை.

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியே இங்கு இருந்தது.

பின்னர், ஆங்கிலேயரின் வசமிருந்த மூணாறில், தேயிலை விவசாயத்தைத் தொடங்கினர் ஆங்கிலேயர்கள். அத்தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்தே ஆட்களை வரவழைத்ததாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியையும் ஏற்படுத்தியிருந்திக்கிறhர்கள்.

இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து  ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதியில் பயணம் செய்வோம் நாம் இன்று..
அதற்கு  முன்னர், இந்த எழில் கொஞ்சும் மூணாறு பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வோமா..
இன்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி என உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள மூணாறு, 90 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக அழிந்து, பின் புது ஜென்மம் எடுத்துள்ளதாக வரலாறு கூறுகிறது நமக்கு.. ஆனால், இது பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

ஆம், கடந்த 1924 ஜூலை 6ம் தேதி முதல், ஒன்பது நாட்கள் பகலும், இரவும் இடை விடாமல் பெய்த பேய் மழையினால், இந்நகர் மட்டும் இன்றி, இங்கு சரக்குகளை கையாளுவதற்கு அமைக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த ரயில் பாதைகள், ரோப் வே போன்றவைகளும் அழிந்தனவாம்..

அதுமட்டுமில்லாமல், மூணாறு பகுதிக்கு பூஞ்சார் ராஜh மற்றும் ஆங்கிலேயர் போன்றேhர் வரும் முன், இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்கள் பாண்டியர், சோழர் மன்னர்களிடையே நடைபெற்ற போரின் போது, மதுரையில் இருந்து தப்பி வந்த வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், காலப்போக்கில் மலை வாழ் மக்கள் வசம் இருந்த மூணாறு, அஞ்சுநாடு பகுதிகளை 1252ல் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் தங்கள் வசமாக்கியுள்ளனர். அதன் பின்னர் சுமார் 100 ஆண்டுகள் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் இப்பகுதியில் அதிக்கம் செலுத்த வழிகாட்டியாக அமைந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன் ஆகியோரின் நினைவாகவே, கண்ணன்- தேவன் ஹில்ஸ் என இன்று வரை அங்குள்ள மலைப்பகுதி அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல… மைசூர் திப்பு சுல்தான் மன்னர், திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக மூணாறுக்கு வந்திருக்கின்றனர். மதுரையில் இருந்து ஆங்கில படைகளுக்கு தலைமை வகித்து வந்த கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி 1790ல், கம்பம்மெட்டு வழியாக மூணாறுக்கு வந்துள்ளார். ஆங்கிலேயர்களின் இந்த வருகை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவாலாக விளங்கிய திப்பு சுல்தான் மன்னனை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டதாகவே இருந்துள்ளது. பின்னர் அவர்களுக்கிடையேயான யுத்தத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூருக்கு சென்று விட்டபோதிலும், ஆங்கிலேயர் மூணாறை விட்டு செல்லவில்லையாம்..

பூஞ்சார் ராஜhவால் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தை தொடங்கியுள்ளனர். முதன் முறையாக 1880ல், ஆங்கிலேயர் ஏ.எச். ஷார்ப் தேயிலை செடிகளை நட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு இங்கு நிலவிய இயற்கை எழிலில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்திருக்கின்றனர். அத்துடன் இந்த தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்திருக்கின்றனர். திருச்சியில் இதற்கான சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வு நடந்திருக்கிறது. ஆக, இவர்களின் உழைப்பாலேயே, மூணாறு என்ற நகர் உருவாகியதாக எல்லோராலும் கூறப்படுகிறது.

ஆம், மூணாறை, சுற்றிலும் 16 தேயிலை தொழிற்சாலைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்திருக்கின்றனர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாளுவதற்கு, பிரிட்டனில் இருந்து 500 காளை மாடுகளையும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு டாக்டர் இடம் பெற்ற மூன்று பேர் குழுவையும் அழைத்து வந்திருக்கின்றனர். ஆனால், நாளடைவில், தேயிலைத் தோட்டங்கள் அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததால், காளை மாடுகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் சரக்குகளை கையாள இயலாத நிலை ஏற்பட்டிருந்திருக்கிறது. இதனையடுத்து சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தியிருந்திருக்கின்றனர். ஆம், கடந்த 1902ல் மூணாறில் ரயில்கள் ஓடத் தொடங்கியிருந்திருக்கிறது..

ஆம், மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லையான டாப் ஸ்டேஷன் வரை இந்த ரயில் பாதையானது அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதாவது, இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை டாப் ஸ்டேஷன் வரை ரயிலிலும், அங்கிருந்து ரோப் வே மூலம் போடிக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்திருக்கிறது. அங்கிருந்து தூத்துக்குடி துறை முகம் வழியாக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது என்றhல் அது மிகையாகாது. அதுமட்டுமில்லாமல், ஆங்கிலேயர்களால் மூணாறில் அமைக்கப்பட்ட ரயில் மற்றும் ரோப் வே போன்றவை உலக அளவில் சிறந்ததாக திகழ்ந்தது. இத்தனை சிறப்பு வாய்ந்த ரயில் வசதி தொடங்கிய 5ம் ஆண்டிலேயே, மூணாறில் டெலிபோன் வசதியும் ஏற்படுத்தப்பட்டதாம்.

ஆனால், மலை மீது அமைந்த இந்நகரின் சிறப்பும் வரலாற்றில் ஒரு நாள் புரட்டி போடப்பட்டுள்ளது.

ஏற்றம், இறக்கம் என்பது எல்லாவற்றிலும் உண்டு தானே. அந்த வகையில் தான், 90 ஆண்டுகளுக்கு முன் 1924ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கேரளா முழுவதும் கன மழை பெய்தது. அப்போது மூணாறில் 9 நாட்கள் பகலும், இரவும் இடைவிடாமல் பெய்த பேய் மழையினால், மலைகளில் இருந்து பெருக்கெடுத்த நீர், பிரளயத்தை ஏற்படுத்தியது. கரை புரண்டு ஓடிய தண்ணீரால், மூணாறு நகர் உள்பட 10 கிலோ மீட்டர், சுற்றளவு நீருக்குள் மூழ்கியது. மலை மீது அமைந்துள்ள நகர் என்ற கர்வம் அழிந்து, மூணாறு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உருத் தெரியாமல் அழிந்தது. நகர் மட்டும் இன்றி, சரித்திர புகழ் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் பாலங்கள், ரோப் வே மற்றும் டெலிபோன் மற்றும் மின் கம்பங்கள், ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போயின.

தண்ணீர் வற்றுவதற்கு இரண்டு வாரங்கள் ஆனது. நீர் ஓட்டத்தினால், ஆறுகளின் போக்கு மட்டும் இன்றி, ரோடு மார்க்கமான வழித் தடங்களும் மாறின. அதன் பின் கட்டடங்கள், ரோடுகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, ரோப் வே போன்றவைகள் சீரமைக்க இயலாமல் அழிந்து விட்டதாம். ரயில்கள் இயக்கப்பட்டதற்கு அடையாளங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் உள்ளன. ஆனால், ரயில் பாதையாக அல்ல, ரயில் தண்டவாளங்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட மின் கம்பங்களாகவே அந்த அடையாளங்கள் நமக்கு காட்சியளித்து வரலாற்றிற்கு சாட்சி பகர்ந்து வருகின்றன. மூணாறுக்கு அழிவை ஏற்படுத்திய போது, ஜூலையில் மட்டும் 485 சென்டி மீட்டர், மழை பெய்ததாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ள வரலாற்று புத்தகங்கள் சாட்சியளிக்கின்றன.

கன மழைக்கு நு}ற்றுக்கணக்கானோர் இறந்தனர். பலரது உடல்கள் கட்டடங்களுக்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டன. வீடுகளும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப் பெருக்கின் போது, மூணாறில் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 19 வயது பெண்ணும், 6 வயது சகோதரரும் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், எஞ்சிய அவர்களும், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும், மூணாறு மீண்டது தனி வரலாறு.

மூணார் கடல் மட்டத்திலேந்து 6000 அடி மேல இருக்கு, பருவநிலை எப்போதுமே ரொம்ப ரொமேண்டிக்கா இருக்கும், சுத்தியும் பச்சை மலைகளும் டீ எஸ்டேட்களும் அருவிகளும் ரொம்ப அருமையா இருக்கும் அதுனால தான் ஹனிமூன் தேசங்கள் ரொம்ப முக்கியமான இடத்தை பிடிக்குது மூனார் மூணார் எப்போ வேணா போகலாம் அப்படி ஒரு இடம், வழியில் பல அழகான சிறு சிறு ஓடைகளில், நீர் ஓடுவது நமது கண்களுக்கு விருந்து. கொஞ்சம் மழைய பொருட்படுத்தாத ஆளுங்களுக்கு மூணார் ஒரு சொர்க்கம் மூணார் போறவங்க நல்ல குளிர் தாங்கும் உடைகளையும், மழை நேரத்துக்கு தேவையான உடைகளையும் எடுத்து செல்வது நல்லது, டெம்பரேச்சர் 0உ - 25உ வரைக்கும் இருக்கும்.

கண்போரை தன் எழில்மிகு தோற்றத்தால் சுண்டி இழுக்கும் இந்த மூணாறில் நாம் காண வேண்டிய பகுதிகள் ஏராளம்… காண கண்கள் போதாது.. ஆம், அத்தனை அழகு..

மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு பார்த்தல் ..

ஓங்கி வளர்ந்த மலைகள், குகைகள், செடிகள், மரங்கள், பூக்கள், மலைமண் வாசனை எல்லாம் சேர்ந்து நம்மை புது உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது மூணாறு. நான்கு பக்கமும் குவிந்த மலைக்கு நடுவில் சம தளத்தில் உள்ள சிறிய ஊர் என்றhலும் தன் அழகால் சுற்றுலா வாசிகளை சுண்டி இழுக்கும் வல்லமையால் இது பெரிய ஊரே..

நமது பயணத்தில் முதலில் பார்க்கப் போவது எநைற pடிiவே. பாதையில் செல்ல செல்ல, காடுகள் மறைந்து தேயிலை தோட்டங்கள் வரவேற்கத் தொடங்குகிறது. காணக் கண் கோடிகள் போதாது.

அடுத்ததாக, நாம் பார்க்கப்போவது மூணாறிலிருந்து 11கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாட்டுப்பட்டி  அணை. மாடுப்பெட்டி அணையின் மற்றுமொரு சிறப்பு, நீர் மின் நிலையம். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்தே காணப்படுகின்றன.
மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கும் இந்த அணை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது இங்கே இந்தியா - சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது. மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறhர்கள்.

மாடுப்பெட்டி அணையின் முடிவில் “நுஉhடி Pடிiவே” அமைந்துள்ளது. அங்கு நின்று அவரவர்களுக்கு பிடித்த நபர்களின் பெயரால், ஏற்படும் எதிரொலியை கேட்டு மகிழலாம்.. இது சிறுவர்-சிறுமிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.


மாடுப்பெட்டி அணை சுமார் ஆறு கி.மீ. அளவிற்கு நீண்டுள்ளது. இங்கு யானை மற்றும் படகு சவாரி செய்யும் வசதியும் உள்ளது.

அடுத்தது.. போத்த மேடு… போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப ஏற்றது.
மூணாரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தேவி குளம் பகுதியிலுள்ள சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி வசடிரவ கiளாiபே-ற்கு மிகவும் சிறந்தது.
தொடர்ந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிவாசல் தான் கேரளாவின் முக்கியமான ழலனசடி நுடநஉவசiஉ Pசடிதநஉவ
அடுத்ததாக, மூணாரிலிருந்து 9 கி.மீ தொலைவிலிருக்கும் அட்டுக்கல் மூணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ள ஒரு அழகு நிறைந்த பகுதி. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை . இன்னும் மூணாரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் செயல்படும் இரவிக்குளம் தேசிய பூங்கா மட்டுமல்லாது சித்திராபுரம், லாக் ஹhர்ட் கேப், ராஜமலா என ஏராளமான இடங்கள் காண்பதற்கு உள்ளன.
தொடர்ந்து நாம் பார்க்க போவது, குண்டாடா அணை. இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. படகு சவாரிக்கும் சிறந்த இடம். அதுவும் இங்குள்ள பெடல் போட்டில் ஒருமணி நேர பயணம் செய்யும் போதுதான், இயற்கையை எவ்வளவு நாம் கெடுத்து வைத்துள்ளோம் என்பது நமக்கு புரியும்.

குண்டாடா அணையிலிருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் பாதை காண்பதற்கு அருமை. ஆம், தேயிலை தோட்டங்கள், அவற்றைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள் எனக் கண்கொள்ளாக் காட்சி கண்முன் விரிகிறது. இத்தனை அழக நிறைந்த அப்பகுதியில் ஒரு போட்டோ சூட் நடத்தாமல் எப்படி அந்த இடத்தை விட்டு நகர மனம் வரும்..? ஆம், புகைப்பட பிரியர்களுக்கு மூணாறில் இது சிறந்த பகுதியே..

அடுத்ததாக, டாப் ஸ்டேஷன் அடைந்தோமேயானால் அங்கு நண்பகல் நேரம் என்றhலும், அங்கு அதற்குண்டான வெயில், வெப்பம், எதுவும் இல்லாமல் இதமான சூழலே அழகு நடம் புரிகிறது நாள்தோறும். இந்த இடம் தமிழக கேரள எல்லையாகும். இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகையும் தேனி மாவட்டத்தின் பெரும் பரப்பையும் ரசிக்க முடிந்தது. டாப் ஸ்டேஷன் என்பது மூணாறில் உயரமான சிகரமாகும். அங்கு செல்ல ஒரு அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

டாப் ஸ்டேஷனில் இருந்து கொடைக்கானலுக்கு போக்குவரத்து மலைப்பாதை இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது சுற்றுலா வாகனங்கள் செல்ல ஏற்றது அல்ல என்றும் அவர்கள் சொல்கிறhர்கள்.

வழியில் பல அழகான சிறு சிறு ஓடைகளில், நீர் ஓடுவது நமது கண்களுக்கு விருந்து.

1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் மலைமேல் உள்ள தெய்வங்களின் சாட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல.. இந்த இடம் தான் “அபியும் நானும்” திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷh பேசிக்கொண்டு அமர்ந்து இருக்கும் கோவிலும் கூட..

தொடர்ந்து மூணாறிலிருந்து கொச்சி செல்லும் பாதையில் பயணித்தோமேயானால், நம் கண்ணுக்கு விருந்தாக காத்திருப்பது சாலையோர அருவிகளும் சிற்றேhடைகளுமே…

மூணாறில் சுற்றுலாத் தலங்கள் என்று நிறைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைவிட இந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் மனதைக் கவரும் வண்ணம் இருக்கின்றன.

இவ்வழியில் தான்  நாம் பல திரைப்படங்களில் பார்த்த நெரியமங்கலம் பாலம் உள்ளது. 1935 ல் திருவாங்கூர் மன்னரால் திறந்து வைக்கப்பட்ட பாலம் இது. இதுபோன்ற இடங்கள் திரைப்படத் துறையினருக்குக் கசக்கவா செய்யும்?

இங்கிருந்து நாம் பார்க்க போகும் இடம் அதிரப்பள்ளி அருவி..

வழியில் இன்னும் நாகரிகம் என்ற பெயரால் அநாகரிகம் வளராததும் இயற்கை சூரையாடப்படாமல் இன்னும் உயிருடன் இருப்பதுமான பகுதிகளின் வழியே அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலையும் வாழ்க்கை முறைகளையும் ரசித்தபடி செல்லலாம்..

அதுமட்டுமல்ல, ரப்பர்த் தோட்டங்களும் அடையாளம் இன்னதென்று தெரியாத மரவகைகளும் நிறைந்த பாதை வழியே சென்றதால் இடைவிடாத பசுமையைக் காண முடிகிறது இங்கு. கேரளம் மலைவளம் மட்டுமல்ல மழைவளமும் நிறைந்த பிரதேசமானதால் வீடுகளின் மேற்கூரைகளின் மேலும் சுற்றுச் சுவர்களின் மேலும் கூடப் பாசி படிந்து அதில் பசுமையான தாவரங்கள் வளர்ந்திருக்கும் அழகை எங்கும் காணமுடிகிறது.

அதிரப்பள்ளியின் சிறப்பே அருவியும் மேகமூட்டம் போல் தூவும்  அதன் சாரலும் மனதை அள்ளும் அதன் அழகும்தான். ராவணன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டதாம். இந்த அருவி பெரும்பாலான திரைப்படங்களில் நடித்திருப்பதாகவே கொள்ளலாம். ராவணன், பையா, பேராண்மை….இப்படிப்பல..

மேலிருந்து வெறும் கண்களால் ரசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அருவியின் தூவானத்தில் குளியல் போடலாம் என்கிற அளவு உற்சாகம் பெருக்கெடுக்கும்.
இங்கு குளிப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால், அதற்கானத் தேவையும் நமக்கு இல்லை. ஏனெனில் கொஞ்ச நேரம் அருகில் நின்றhலே பனிப்பூவைப் போன்ற மென்மையான சாரல் நம்மைக் குளிப்பாட்டிவிடும். சிரமப்பட்டு இரண்டொரு ஷhட் படமெடுப்பதற்குள் கேமராவை நனைத்துவிடக்கூடிய அளவு அருவி நமக்குசாரலால் கிச்சுக்கிச்சு மூட்டியபடி இருக்கும்.

மலையேற விரும்புவோருக்கு இங்கு அதற்குண்டான வசதி வனத்துறையினரால் வளங்கப்படுகிறது என்பது மலையேற்றப் பிரியர்களுக்கு உற்சாகமூட்டும் கூடுதல் செய்தியாகும்.

அதுமட்டுமல்ல, இயற்கையை ரசிக்கும் அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலம், மூணாறு என்றhல் மாற்றுக்கருத்து இல்லை.

ஆண்டு முழுவதும் இயற்கை காட்சிகளை காணத்தகுந்த தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த சிறப்பு மிகு அழகிய சுற்றுலா நகரமான இது, தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரமாகும்.

சுயதயஅயடயi (Pயசவ டிக நுசயஎமைரடயஅ Nயவiடியேட Pயசம)
மூணாறு மலைப்பகுதியிலுள்ள  ராஜமலை தொடரில், அழிந்து வரும் இனமான “வரை ஆடு” என்ற “மலை ஆடு”களை பார்க்கலாம்.  ராஜமலை தொடரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  மலரும் குறிஞ்சிப்பூக்களை பார்க்கலாம். ஊட்டி போன்ற “குளு குளு” குளிர்ச்சியை இங்கு உணரலாம்.  இங்கு ஏராளமான சினிமா  படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

இதன் சுற்று வட்டத்திலுள்ள 2,695 அடி உயரமான ஆனைமுடி சிகரம்,  உள்ளிட்ட  மலை சிகரங்களும் இங்கு கண்கொள்ளா காட்சி. மாட்டுப்பட்டி கால்நடை பண்ணை,  குண்டலா ஏரி,  டாப் ஸ்டேஷன்,   ராஜமலை,  தேயிலை கண்காட்சி,  மரையூர் சந்தன காடுகள்,  அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மலர் பூங்கா,  சின்னாரு வன விலங்கு சரணாலயம்,  லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை, மூணாறில் பார்த்து மகிழ வேண்டிய முக்கிய இடங்கள்.

அடுத்ததாக கேரளாவில் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் என்றhல் நம் நினைவிற்கு வருவது பீப் பிரைதான். அடுத்து கட்டஞ்சாயா, கொண்டைக்கடலை புட்டு. கேரள சேச்சிகள் சேட்டன்கள்.

அதுமட்டுமா அம்மாநில பாரம்பரியத்தை இன்றளவும் பறைசாற்றும் படகு இல்லம், செண்டை மேளம், கதக்களி நடனம் போன்றவற்றையும் கூட எவராலும் மறக்க முடியாது.

மூணாறையொட்டிய போடி மெட்டு என்ற இடம் தான், தமிழ்நாடு-கேரளா எல்லையாகும். தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு திண்டுக்கல் வழியேயும், போடி நாயக்கனு}ர், உடுமலைபேட்டை வழியேயும் பேருந்து மற்றும்  காரில் செல்லலாம்.

மறையூரில் இருந்து மூணாறு வரை இயற்கை காட்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கு நோக்கினும், பச்சை பசேலென்று, பச்சையின் ஆட்சிதான்.  மலைப்பகுதியில் முழுவதும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆபத்தான  சாலைகளும் நம்மை எதிர்கொள்கின்றன.

ரயில் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றhல், திண்டுக்கல்லில் இறங்கி, வாகனங்கள் மூலம் மூணாறு செல்லலாம்.  சென்னையில் இருந்து நேரடியாக அரசு பேருந்துகளும் தினமும் செல்கின்றன.

பயணம் தொடரும்..





No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...