கம்பீரமாக நிற்கிறது… கல்லணை
உலகிலுள்ள அணைகளிலேயே மிகவும் பழமையானதும், தற்போதும் புழக்கத்தில் உள்ளதுமான அணை என்றhல் அது நம் தமிழ் மன்னனாகிய கரிகாற் சோழன் கட்டிய கல்லணையே.. காலத்தை வென்று கம்பீரமாக காட்சியளிக்கும் கல்லணையை பற்றிய சிறு தொகுப்பே இது…திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உலகின் மிக பழமையான அணைகளில் ஒன்றhன கல்லணை. இந்த அணை பழமையானது என்பதைக்காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள ஒரு அணை என்ற பெருமைக்குரியது.
கி.பி.இரண்டாம் நு}ற்றhண்டில் கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக பழந்தமிழனனின் கட்டிடக்கலையை, பாசன மேலாண்மையை பறைசாற்றுகிறது.
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தவர்கள் சோழர்கள். அந்த சோழர்களின் வழி வந்த பிற்கால சோழர் என அழைக்கப்படும் கரிகாற்பெருவளத்தான் கட்டிய அணையே கல்லணை.
காண்போரை கவர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை கரை புரண்டு ஓடும் நீரின் குறுக்கே எப்படி கட்டியிருப்பார்கள்…
ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கரையோர விளைநிலங்களை நீர் அடித்து சென்று கடலில் வீணாக கலந்தது. விவசாயிகள் வேதனைக்குள்ளாயினர். இதனால் அக்காலகட்டத்தில் நாட்டில் நிலவும் வறுமை, மக்களின் துயர் கண்டு காவிரியின் குறுக்கே ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தார் கரிகாற் சோழன். ஆனால், அது சாதாரன விஷயம் அல்ல.. இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். அது என்ன வழி?.. நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். அதன்படி, காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறெhரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணை தான் கல்லணை.
கல்லணைக்கு கட்ட தேவைப்பட்ட பெரிய கற்களையெல்லாம் திருவெறும்பூர் பகுதியிலிருந்து கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.வடக்கு புறத்திலுள்ள கொள்ளிடத்தையும், காவிரியையும் இணைக்கும் உள்ளாற்றில் அமைந்தது கல்லணை.
இந்த கல்லணை காலத்தின் போக்கில் நீரோட்டமின்றி மணற்மேடுகளாக காட்சியளித்த காலங்களும் உண்டு.. அக்காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியான வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். கல்லணையை பல ஆண்டு காலம் ஆராய்ந்த இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் இவர் மணற்திட்டை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்தும் நோக்கில், கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்து மணற்போக்கிகளை அமைத்தார். அப்போது கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போது தான் ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு பல ஆண்டு காலம் கழித்து விடை கிடைத்தது. காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து பழந்தமிழரின் அணைகட்டும் முறையையும், பாசன மேலாண்மையையும் உலகிற்கு எடுத்து கூறினார். கல்லணைக்கு தி கிராண்ட் அணைக்கட் என்ற பெயரையும் Nட்டினார். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. பிரிந்த காவிரி ஆறு கல்லணையை வந்தடைகிறது. இவ்வாறு வந்தடையும் காவிரியை கல்லணையானது காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள இந்த கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில ஆறுகள் மீண்டும் ஒன்று சேர்கின்றன. அவ்வாறு சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
இன்றைக்கு உருவாகும் அணையின் ஒவ்வொரு கல்லும் உலகின் தொன்மையான அணைகளில் ஒன்றhன கல்லணையின் பிரதிபிம்பமே. இத்தகைய பிரம்மாண்ட அணையை கட்டிய கரிகாற்சோழனுக்கு அந்த அணைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் மணிமண்டபத்தால் சோழ மன்னிற்கு கூடுதல் பெருமை. இம்மண்டபத்திலுள்ள யானை சிலையின் மீது அமர்ந்திருக்கும் கரிகாற்சோழனது சிலை காலம் கடந்து நிற்கும் கல்லணையின் பெருமையையும், தமிழர்களின் கட்டுமான திறமையையும் கம்பீரமாக பறை சாற்றுகிறது…
தேடல்கள் தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்…
No comments:
Post a Comment