Wednesday, May 3, 2017

ஆழியில் ஓர் ஆலயம் (கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்)

ஆழியில் ஓர் ஆலயம்

அமைதியின் உருவாய் ஆக்ரோஷத்தின் மறுவடிவாய் அழகின் அடையாளமாய் இயற்கையின் கொடையாய்  இந்த உலகை Nழ்ந்திருக்கும் நான்கில் ஒரு பகுதி நீர்பரப்பில் பெரியது ஆழி. இந்த பரம்மாண்ட ஆழியின் நடுவே ஓர் ஆலயம் என்றhல் அது ஆச்சர்யமே.. ஆம் ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷ அலைகள் இடையே எழுந்தருளியிருக்கும் மகாதேவரின் ஆற்றலை உணர்த்தும் சிவலாயமே கோலியாக் நிஷ்கலங் மகாதேவ் ஆலயம்…
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இந்த கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நிஷ்களங் மகாதேவ் ஆலயம்.
நிஷ்களங் மகாதேவ் என்றhல் பாவத்தைப்  போக்குகிறவர், எந்தவித களங்கமும் இல்லாதவர் என்று பொருள்.
கரையிருப்பவர்களுக்கு சிறு புள்ளி போல தெரியும்.. கடலின் நடுவே அமைந்திருக்கும் இக்கோவிலும், அதன் பட்டொளி வீசும் கொடிமரமும்.. இந்த ஆலயத்தை முழுமையாக காண்பதோடு அங்கு சென்றும் தரிசிக்க இந்த கடலே இரு புறகும் விலகி வழி ஏற்படுத்தி தருகிறது. தனது ஆர்ப்பரிக்கும் அலைகளை அமைதியாக சுருக்கி சிவனை தரிசிக்க பக்தர்களுக்கு மெல்ல வழிவிடுகிறது.
தினந்தோறும் பகல் ஒரு மணி முதல் இரவு பத்து மணி வரை இவ்வாறhக கடல் உள்வாங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கல் தூண் மற்றும் கொடிக்கம்பம் தௌpவாகத் தெரிவதுடன், ஒரு பெரிய சமவெளியில் சிறிய இடைவெளியில் 5 சிவலிங்கங்களும் காட்சி தருகின்றன. பக்தர்கள் நிதானமாக கடல் உள்வாங்கிவிட்ட மணல் பரப்பில் நடந்து சென்று ஆலயத்தை அடைகிறhர்கள். இந்த ஆலயத்தில் பாண்டவர்கள் வழி பட்டதன் நினைவாக ஐந்து சிவலிங்கங்கள் சுயம்புவாக அமைந்துள்ளன. அதன் முன் நந்தியும் உள்ளன. இதனருகே ஒரு குளமும் உள்ளது. பாண்டவர்கள் இறைவனை பூஜpப்பதற்கு முன் குளியலாட பயன்படுத்திய இந்த குளத்தில் பக்தர்கள் தங்கள் பாதங்களை கழுவி விட்டு அங்கிருக்கும் சிவனுக்கு தங்கள் கொண்டு வந்த பூ மற்றும் பால், தயிர் ஆகியவற்றhல் அங்குள்ள ஒவ்வொரு லிங்கத்தின் மேலும் அபிஷேகம் செய்து வடநாட்டினருக்கு உரிய பாணியில் பஜனை செய்கிறhர்கள்.
ஆம்… மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள் வெற்றிமிதப்பில் களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறhக, யுத்தத்தில் நிகழ்ந்த இறப்பினால் உண்டான தோஷம் கருதி துயரம் அடைந்தனர். தங்களின் ரட்சகனான கிருஷ்ணரிடம் பாவ விமோசனம் தீர வழி கேட்டனர். அவர் ஒரு கரிய நிற தண்டமும், கருப்பு மாடு ஒன்றையும் வரவழைத்து, இக்கருப்பு தண்ட்த்தினை கையிலெடுத்துக் கொண்டு, இம்மாட்டினைப் பின் தொடருங்கள். இவ்விரண்டும், எங்கு வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, அங்கு, இறைவனை மனம் உருகி வழிபடுங்கள். உங்களின் போரினால் உருவான பாவங்கள் விலக இறைவன் அருள் புரிவான் என்றார். அதன்படியே, அவர்கள் மாட்டினைப் பின்தொடர, கோலியாத்தில் தண்டமும், மாடும் வெள்ளை நிறம் அடைந்த்து. அவ்விடத்திலே ஒரு குளம் வெட்டி, நீராடி, ஐவரும் இறைவனைக் குறித்து தியானித்தனர். ஐவருக்கும் ஐந்து சிவலிங்கம் ந்ந்தியுடன் சுயம்புவாக எழுந்தருளி, பாவ விமோசனம் அளித்தான் இறைவன். இது புராண வரலாறு.
நேரம் நெருங்க நெருங்க அமைதி காத்த கடல்மறுபடியும், ஆர்ப்பரிக்க சிறிது சிறிதாக கரையை நோக்கி முன்னேற ஆரம்பிக்க பக்தர்களும் கரையை நோக்கி விரைந்து வருகின்றனர். சில நிமிடங்களில், கடல் மீண்டும் அந்த கோவிலை முழுமையாக ஆக்கிரமிக்கின்றது. அக்கோயிலின் பட்டொளி வீசும் கொடி மரமும், கல் தூணும் மட்டுமே மறுபடியும் புள்ளியாகத் தெரிகின்றது.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடலில் உள்வாங்கல் அதிகமிருக்கும் . இந்த நாட்களில் மக்களின் கூட்டமும் அதிகமாகவே இருக்கின்றது. இவ்வாலயத்திலுள்ள சிவனை தரிசிப்பதை ஒரு பாக்கியமாக கருதி, பாவ விமோசனம் தேடி பெருவாரியான மக்கள், குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வருகின்றனர்.
இருப்பினும், ஆவணி மாதம் சிவனுக்கு உரிய மாதம் என்பதால் இம்மாதத்தில் கோலியாக்கில் திருவிழாக்கோலம் தான்.
எத்தனையோ புயல் சீற்றம் கொண்ட போதிலும், பூகம்ப நிகழ்வு நடந்த போதிலும், இந்த ஆலயத்தின் கொடி மரமோ, கல் தூணோ பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் செய்தி.
இதுபோன்ற கடல் உள்வாங்கும் நிகழ்வு இந்தியாவிலேயே அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் நிகழ்கிறது. ஆங்கிலத்தில் இஸ்துமஸ் (ஐளவாரஅரள) என அழைக்கப்படும் இந்நிகழ்வை பல இடங்களில் நிகழலாம். ஆனால், அந்தக்கடல் நடுவே ஒரு புராதனமான சிவன் கோவில் இருப்பது இங்கு மட்டுமே.. அதுவே இந்த இடத்தின் சுவாரஸ்யம்..
இறை நம்பிக்கையின் சாட்சியாக இன்றளவும் திகழும் இந்த கோலியாக் சிவனை நாமும் வணங்கி பயன் பெறுவோம்.

பயணம்  தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்..

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...