“சிவமூலிகைகளின் சிகரம்” வில்வம்
இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட இந்த வில்வ இலை திரிNலத்தின் குறியீடாக கருதப்படுவதோடு, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்தியதாக ஐதீகமும் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்... அருள் பெறுவோம்...
வில்வத்திற்கு கூவிளம், கூவிளை, மாதுரம், சிவத்துருமம், நின்மலி என்ற மற்ற பெயர்களும் உண்டு. இதனை “சிவமூலிகைகளின் சிகரம்ஞ எனவும் அழைப்பர்.
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களில், பூiஜக்குப் பயன்படுத்துகிற மூன்று இதழ் கொண்ட வில்வத்தை, Nரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
ஆம்.. ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. ஞசரக்கொன்றை மரத்திலும் வில்வத்திலும் சிவபெருமானே இருக்கிறhர்ஞ என வடமொழிச் சுலோகம் கூறுகின்றது. பல சிவன் கோயில்களில் இவை ஸ்தல விருட்சமாக வளர்கின்றன. திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன.
தற்போது அரிதாக காணப்படும் இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வ மரமானது எல்லா இடங்களிலும் வளரும் தன்மையுடையது என்றhலும், இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜPலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது.
சிவபெருமானுக்குப் பிடித்த இந்த மங்களகரமான வில்வ மரத்தின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை என அனைத்து பாகங்களும் நோய்தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுகின்றன. இத்தனை அரிய தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது என்பதே உண்மை.
வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.
இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும்.
வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
வில்வம் பழச்சதை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும். குடல்புண் மற்றும் குடல் புழுக்களால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வம் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி செய்கின்றன.
பாதியளவு பழுத்த வில்வம் பழங்கள், பசியையும், ஜPரண சக்தியையும் அதிகமாக்குகின்றன.
பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். அதுமட்டுமில்லாமல், வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும். வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும்.
பூ மந்தத்தைப் போக்குவதோடு, வாய் நாற்றத்தையும் போக்கும். அதுமட்டுமில்லாமல் விஷத்தையும் முறிக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நு}று வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறhர்கள்.
மிகச் சிறந்த மூலிகை மரமான வில்வம் தானாக வளர்வது அரிது என்பதால், அதன் விதை களை நடவு செய்து தான் இதனை வளர்க்க வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த சில மூலிகைப் பண்ணைகளில் வில்வ மரங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன.
வில்வ இலையை மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். பூiஜக்கு உகந்ததான மூன்று இலைகள் சேர்ந்த வில்வ தளத்தை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.
ஆப்பிள், மாதுளை, பழங்களில் இருக்கும் அளவு சத்தை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பதை அறிய வியப்பாக உள்ளது. அதிலும், வில்வ மரத்தின் இலை, பழம், வேர் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறhக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.
No comments:
Post a Comment