கிராமங்கள் போற்றும் கிராமியம்
அழிவின் விளிம்பில் கிராமிய கலைகள்
பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிரும் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றhலும் நம் மூத்தோர்களின் உணர்வுகளையும், உணர்வின் வெளிப்பாடுகளையும், யாரால் மறைக்க முடியும்? பழந்தமிழரின் உள்ளத்திலே ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, கோபம், துக்கம், கவலை, ஏக்கம், காதல், கனிவு, போட்டி என உணர்வுகள் பலவும் வௌ;வேறhனாலும் உண்மை, நீதி, அன்பு, சமத்துவம் என உரிமைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்றhரிடமிருந்து உணரும் போது தான் எதிர்ப்பு கிளம்பி போர்க் குணமாகப் பரிணமிக்கிறது. அத்தகைய பரிணாமங்கள் தான் நம் மூத்த குடிகளின் கைவரிசைகளாகவும், இம் மண்ணின் கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கிராமியக் கலைகளில் இருந்தே நம் சாஸ்திரிய நடனமான பரதநாட்டியம் தோற்றம் பெற்றுள்ளது என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. இக்கிராமியக் கலைகள் ஒரு சில கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கலையை காசுக்காக ஆசைப்பட்டு கலை சேவை செய்வதாக சிலர் நம் மண்ணில் கலைகளை கடைச்சரக்காகவும் கையாளுகின்றhர்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழர் வாழ்வையும் அவர்தம் உரிமை மொழியும் கலைவழி மீட்டெடுக்க இந்த மண்ணில் கலைகளையே ஆயுதமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவொரு கலை வடிவமும் அது உயிர் வாழ்வதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை தான் உயிர் வாழும். சமூகக் காரணங்கள் மாறும்போது அக்கலைகள் தானாகவே அழிந்துவிடும். எனவே, இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக கிராமியக்கலைகள் தென்னிந்தியாவில் மட்டுமன்றி மேலை நாடுகளிலும் சில சமூக ஆர்வலர்களாலும், கலைஞர்களாலும் கொண்டு செல்லப்பட்டது. இக்கலைகளின் பிரிவுகளாக கும்மியாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், லெசீம் ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் என பல ஆடல் வகைகள் உள்ளன. இக்கிராமியக் கலைகள் அனைத்திலும் ஆண்கள் தார்ப்பாச்சி, மஞ்சள் நிற ஜpப்பா சட்டை அணிந்து கொள்வார்கள். பெண்கள் சாரியை கிராமத்து முறையில் கட்டிக் கொள்வார்கள். காலில் சலங்கைகள் கட்டி ஆடுவார்கள். இந்த கிராமியக்கலைஞர்களுக்கு இன்று முறையான அங்கீகாரம் என்று எதுவும் முறைப்படி கிடைக்கவில்லை. அதிலும் இக்கலையில் ஈடுபடும் பெண்களுக்கு பெரும்பாலும் பாதுகாப்பு கிடையாது என்பதே வேதனைக்குரிய நிஜம். அரசின் பல அமைப்புகள் கலைஞர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொண்டாலும், கலை நிகழ்த்தும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்திற்கு யார் பாதுகாப்பு அளிக்க முடியும். இப்படியான Nழ்நிலையில், கிராமியக்கலைஞர்கள் தங்கள் வாரிசுகளிடம் கலை அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகவே கூறி வருகிறhர்கள் என்பது தமிழராகிய நம்மை கூனி குறுக வைக்கிறது. நடிகைக்குக் கோயில் கட்டுகின்ற, நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்கள் வாழ்கின்ற மாநிலத்தில் தான் இந்த கிராமியக் கலைஞர்களும் வாழ்கின்றனர் என்பதுதான் வினோதமானது. இந்த கிராமியக் கலைஞர்களும், அவர்களது கலையும் பொலிவுறுமா…? போற்றப்படுமா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…பயணம் தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.
No comments:
Post a Comment