Wednesday, May 3, 2017

35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்

35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்

மிரள வைக்கும் காரணம்


அழகு என்பதற்கு எதிர்பதமாக இன்றளவும் இருந்து வரும் ஆபத்தின் உச்சகட்டமாக ஒதுக்கப்பட்ட ஆள்நடமாட்டமில்லா ஒரு அழகிய நகரின் கதையே இன்றைய தேடல்…
பல மாநிலங்களாக பிரிவுற்றிருந்த இத்தாலியை தனி நாடாக பத்தொன்பதாம் நு}ற்றhண்டில் உருவாக்கிய அரசியல் சமூக செயற்பாடே இத்தாலிய ஐக்கியம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது. இத்தாலி ஒரு தீபகற்பம் அதாவது ஒரு புவியியற் பிரதேசம். இப்பிரேதசத்தில் அழகிய நகரங்கள் பல இருந்தாலும் அனைவரைiயும் மிரள வைக்கும் நகரம் ஒன்றும் உள்ளது. ஆம், இத்தாலியில் கடந்த 35 ஆண்டுகளாக அங்குள்ள பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான பெனவென்றேh மாகாணத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரந்தான் பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் பேய்வீடு போன்று காட்சி அளிக்கிறது. இதற்கு ஒரு மிரள வைக்கும் காரணமொன்றும் உள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ஐசிinயை நிலநடுக்கத்தையடுத்து அங்கு குடியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரை மொத்தமாக காலி செய்துவிட்டு உயிர் தப்பினர். சுற்றுலாவுக்கு பெயர் போன இந்நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பெரும்பாலான கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்தன. மறுபடியும் வந்து அந்நகரில் குடியிருக்கும் எண்ணம் அங்குள்ள குடிமக்களுக்கு வராததன் முக்கிய காரணமாக கருதப்படுவது பீதியே. அதாவது, மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம்… தங்களின் வாழ்வாதாரம் மொத்தமும் மீண்டும் சீர்குலையலாம்… என்ற அச்ச உணர்வே இதுவரை இந்நகரில் மக்கள் குடியேற மறுத்து வந்ததன் காரணமாக கருதப்படுகிறது.
அதன் பின்னர் இதுவரை கடந்த 35 ஆண்டுகளாக அவர்கள் இங்கு குடியிருக்கும் நோக்கில் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது இந்நகரம் சிறுகச் சிறுக பொதுமக்களால் உயிர் பெற்று வருவதாக அந்நகரின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அழகு நகராக இருந்தாலும், ஆபத்து என்றhல் அனைவரையும் அதிர வைக்கும் என்பதில் அதிசயமேதுமில்லை… என்பதற்கேற்ப இப்பேய் நகரம் எப்போது அனைவரையும் வசிகாPக்கும் சொர்க்க பு{மியாக மாறும் என்பதே இந்நகரைப் பற்றி அறிந்த அனைவரின் கேள்வியும்…

பயணம் தொடரும்…

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...