புருவத்தை உயர்த்தும் அசத்தல் கண்டு பிடிப்பு, வெளியில் தெரியாமல் போன சிரிஜேசின் திறமை!
சிரிஜேஷ் என்ற இளைஞர் வானில் விட்டெறிந்தால் நான்கு புறமும் சுற்றி தன்னிடமே வரும் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை ஆங்கிலத்தில் boomerang எனக் கூறுவார்கள். இது போன்ற காட்சிகள் சினிமாக்களில் தான் இடம் பெறும், அதை அவர் நிஜமாக்கியுள்ளார்.
கோடாறி போன்ற ஒரு அமைப்பில் இதை அவர் உருவாக்கியதே இவரின் தனி சிறப்பு
boomerang என்ற பெயரில் இதே போன்று வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், அது சிரிஜேஷ் உருவாக்கியது போன்று கனக்கட்சிதமாக செயல்டுமா என்பது சந்தேகமே. மேலும் அதற்கும் சிரிஜேஷ் உருவாக்கியதற்கும் ஏரமாளான வித்தியாசங்கள் உள்ளது.
மேலும் இவர் இதை ப்ளாஸ்டிக் மரக் கட்டை என பல பொருட்களில் இருந்து உருவாக்குகின்றார்.
வீட்டில் பின் புறம் கூட இதை பறக்க விட்டு தன்னிடம் கொண்டு வருகின்றார். சிரிஜேஷ் திறன் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விட்டது.
அவரின் இந்த கண்டுபிடிப்புகள் பார்ப்பவர்களின் புருவதை உயர்த்த வைக்கின்றது. இவர் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர். அங்கு கசராகோட் மாவட்டத்தில் வசிக்கின்றார்.
யாருக்கேனும் இது போன்று தேவை எனில் இவர் உருவாக்கி தருவார் அல்லது உருவாக்குவதற்கான வழிமுறைகளை கற்று தருவார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment