Wednesday, May 3, 2017

அங்கம் சிலிர்க்க வைக்கும் அங்கோர் வாட்…

அங்கம் சிலிர்க்க வைக்கும் அங்கோர் வாட்…

தமிழர் வரலாற்றை தாங்கி நிற்கும் கம்போடியா…


உலகிலுள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்றhல் அது கம்போடிய நாட்டிலுள்ள அங்கோர் வாட் ஆலயம் தான். கம்போடியா நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டியதும் இந்த ஆலயம் தான். அதிலும், இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம், அவர் தான் நம் தமிழ் மன்னன் இரண்டாம் சூர்யவர்மன்.
ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன், இப்பிரம்மாண்ட ஆலயத்தை இங்கு கட்டினான் என்பது வரலாறு. இக்கோவில் அமைந்துள்ள இடம் தான் அவனின் தலைநகரமாகவும் இருந்துள்ளது. சுமார் 200 ஹெக்டேர்  நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலானது சுற்றிலும் அகழியால் Nழப்பெற்றது.
அதாவது, ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழ்ந்துள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினு}டாக முதலாவது வெளி மண்டபத்தை காணலாம். முதல் மண்டபத்தின் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (உநடைiபே) தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடு கூடிய பால்கணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றhல் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அங்குள்ள அனைத்து  மண்டபங்களிலுள்ள சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழி மூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இதன் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள சிங்கச்சிலைகளுடன் கூடிய படிக்கட்டு வாயிலாகவே அங்கு செல்ல முடியும். இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகளும் ரம்யமாக காட்சியளிக்கின்றன. மூன்றhவது மண்டபம், உயர்ந்த வநசசயஉந இன் மீது அமைந்துள்ளதோடு ஒன்றேhடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அழகுற அமைந்துள்ளது.
பெரும்பாலும், மண்டபங்களிலுள்ள கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் சிறிய கோவில் போன்ற அமைப்புகளுடன் இரண்டு நு}லகங்கள் உள்ளன.
அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்களும் உள்ளன.
இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3 புள்ளி 6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது எனக் கூறப்படுகிறது. இதனை கற்பனை செய்து பார்த்தோமேயானால் அதன் பிரம்மாண்டம் நம்மை புருவம் உயர்த்த வைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது வரை நாம் அறிந்த தமிழர்களின் சாதனைகளிலேயே மிக சிறந்தது இதுவென்றhல் அது மிகையாகாது.
பன்னிரெண்டாம் நு}ற்றhண்டில் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்கள் கழித்து நிறைவு பெற்றதாம். இந்த ஆலயத்தை கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தது என்ற மூதாதையர் மொழிக்கேற்ப இரண்டாம் Nரியவர்மன் கட்டிய வைணவ கோவிலை அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆறhம் ஜெயவர்மன் புத்த கோயிலாக மாற்றியதாக வரலாறு கூறுகிறது. அதுமட்டுமில்லாமல், இன்றளவும் அந்த ஆலயம் புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது என்பதே உண்மை.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இக்கோவில் அமைந்திருப்பதினால் பதினாறhம் நு}ற்றhண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலக பயன்பாட்டிற்கு வந்தது எனவும் கூறப்படுகிறது.
பின்னர் ழநசேi ஆடிராடிவ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தனது புத்கத்தில் இக்கோவிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத் தொடங்கியது. அதன் பின்னரே, இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகளின் வாயிலாகவே, இது தமிழர்களாகிய நாம் கட்டியது என தெரிய வந்தது.
இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என இன்றைய பொறியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த கால கட்டத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றhல், நம் தமிழர்கள் கட்டிய இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய அரசு அந்நாட்டின் தேசியக்கொடியில் அங்கோர் வாட்-ஐ தேசிய சின்னமாக பொறித்துள்ளது.
இதில் பெருமைக்குரிய விஷயம் என சொன்னால், வைணவத் தளமான இந்த புத்த ஆலயமானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே பெரியது என்பது.
கலை பொக்கிஷமாக திகழும் இக்கோவிலின் திரும்பிய திசைகள் எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்.
பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இக்கோவிலின் அதிசயத்தக்க சிறப்பு என்றhல், அது... 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட, இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை என்பது தான். அதாவது, பூமியிலிருந்து 1000 அடிக்கு மேல் வானில் பறக்கும் விமானத்திலிருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே..
இப்படி பல வரலாறுகள் தமிழனின் கலையை தாங்கியவாறே வலம் வருகிறது. ஆம்.. வரலாற்றில் தமிழனின் கலை குறிப்பிடப்பட்டுள்ளதா..? அல்ல… தமிழனின் கலைகள் நிறைந்தது தான் வரலாறh..? என்பதும் நாம் அறியாத நிஜமே…

பயணம்  தொடரும்…

மேலும் பல தகவல்களுக்கு.. இணைந்திருங்கள்

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...