Wednesday, May 3, 2017

சுற்றுலா சொர்க்கம்… (Tour Special)

பசுமையால் போர்த்தப்பட்ட தேனி

மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் செல்லக்குழந்தையாய் வனப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டம், தமிழ்நாட்டின் வளமான மாவட்டங்களில் ஒன்று.
ஐந்திணைகளில், மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சி, காடும், காடு சார்ந்த நிலமுமான முல்லை, வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதம் ஆகிய மூன்றையும், ஒருங்கே அமையப் பெற்ற அற்புத இடம் தான் தேனி.
வைகை அணை, சுருளி அருவி, முல்லைப் பெரியாறு அணை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை, போடி மெட்டு, கம்பம் பள்ளத்தாக்கு, வெள்ளிமலை போன்றவை தேனி மாவட்டத்தின் அழகை நமக்கு பறைச்சாற்றும் இடங்கள். பல புகழ் பெற்ற திருத்தலங்களும் இந்த மாவட்டத்தில் நிறைந்து இருக்கின்றன.

மேகங்கள் தவழும் மேகமலை – மாசில்லா மேகமலை

மேகங்கள் தவழும் மலை என்பதால், மேகமலை’ என்று பெயர் வந்திருக்கலாம். திடீர் மழை, தரையில் தவழும் மேகங்கள், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன், எப்போவாவது கேட்கும் இன்ஜpன் உறுமல் சத்தம்... மாசற்ற பூமி மேகமலை. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், ஒரு பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும், இன்னொரு பக்கம் வருஷநாடு மலைத் தொடராலும் இணைந்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு பக்கமும் கரை கொண்ட வாய்க்கால் போல மலைகள் உயர்ந்து நிற்க... இரு மலையின் முகடுகள் வரை மேவி நிற்கின்றன தேயிலைச் செடிகள். இந்த மலைச் சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. சிங்கிள் ரோடு என்பதுடன் பக்கவாட்டுத் தடுப்புச் சுவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எதுவும் சாலையில் இல்லை. எனவே, கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்த காரை எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம்.

இரு மலைத் தொடர்களுக்கு நடுவே, ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர்த் தேக்கங்கள் இருக்கின்றன. இந்த நீரை ஒருங்கிணைத்து சிறிய அளவில் சுருளியாறு மின்சாரத் திட்டம் செயல்படுகிறது. மஹhராஜh மெட்டு என்ற இடத்தில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இங்கிருந்து முல்லைப் பெரியார் நீர் தேக்கத்தையும், கண்ணகி கோவிலையும் பார்க்க முடியும். மஹhராஜh மெட்டின் மேற்குப் பகுதியில் தான், மூல வைகை ஆறு உருவாவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேகமலை பகுதியில் தூவானம் அணை அமைந்துள்ளது. இந்த அணை சுருளி அருவியின் உற்பத்தி ஸ்தானங்களில் ஒன்று.

ஹைவேவிஸ் குடியிருப்புப் பகுதியில் இருந்து தூவானம் என்று கூறப்படும் இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டர். மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கம் மலையின் முகட்டில் இருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் தான் கீழே உள்ள சுருளி அருவிக்குச் செல்கிறது. மலை முகட்டில் இருந்து வெளியேறும் நீர், பள்ளத்தாக்கில் இருந்து மேல்நோக்கி வரும் காற்றில் சிதறடிக்கப்பட்டு மேகப் பொதியாக மாறி நீர்த்துளிகள் காற்றில் மிதக்கின்றன. அதனால் இந்த இடத்துக்கு தூவானம் என்று பெயர். மேகமலையில் யானைகள் நடமாட்டமும் உண்டு.

மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மஹhராஜh மெட்டு, இரவங்கலாறு என தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்கும், எஸ்டேட் டிவிஷன்களுக்குமான பெயர்களைத் தாங்கி இருக்கிறது இந்த மலைப் பகுதி.

இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் மலைப் பகுதியான மேகமலையில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, வரிப்புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம் பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லாங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளையும் காணலாம்.

மேகமலையின் பின்பகுதியில், ராயப்பன்பட்டியில் பாய்ந்தோடும் சண்முகா நதியின் குறுக்கே சண்முகா நதி அணை கட்டப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் கிராமங்களான ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், பூசாரிகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை மற்றும் சுக்கங்கால் பட்டி ஆகியவை இந்த அணைக்கட்டின் நீர்த்தேக்கத்தால் பலன் பெறுகின்றன. இந்த அணைக்கட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சண்முகா கோயில் அமைந்துள்ளது.
தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிறைந்தது, இந்த மேகமலை. மேகமலை அருவி, வருசநாடு வனப்பகுதியில் கோம்பைத் தொழு அருகே  அமைந்துள்ளது.
சுருளி அருவி
இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. சுருளி அருவியில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் நீர்வரத்து அதிகமாக காணப்படும் அச்சமயங்களில் இவ்விடம் இரட்டிப்பு அழகுடன் காணப்படும்.

தென்னகத்து காஷ்மீர் - போடி மெட்டு

தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு செல்லக்கூடிய வழியில் தமிழக, கேரளாவை இணைக்கும்படி அமைந்துள்ளது போடிமெட்டு. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமம் போடிமெட்டு. இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது. எப்போதும் குளிர்ச்சி, பசுமையுடன் காணப்படும். 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஏலம், தேயிலை, காபி (குளம்பிக்கொட்டை), மிளகு போன்ற பணப்பயிர்களின் பயிரிடுவதையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4, 644 அடி உயரத்தில் வீற்றிருக்கும் போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். கேரளா மற்றும் போடிமெட்டு மலைப்பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மலை முகடுகளில் வெள்ளியை உருக்கிவிட்டார் போல நீர் வீழ்ச்சிகள் ஆங்காங்கே காணப்படும். போடியிலிருந்து போடிமெட்டு செல்லும் பாதையில் புலியூத்து எனும் இடத்தில் மழை நீரானது நீர்வீழ்ச்சியாய் விழுந்து கொண்டிருக்கும். மழை இல்லாத காலங்களில் கொஞ்சமாக நீர் விழும் . இதனைக்காண தேனி மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வருவர். அதில் குளித்து மகிழ்ந்து இயற்கை அழகை ரசிப்பர். அவர்களை கவரும் வகையில் கொடைக்கானலை போல ஜpல்லென்ற காற்றும், மலை முகடு, மக்களையும் தழுவி செல்லும் பனிமூட்டமும் மனதிற்கு இதமாகவும், அமைதியான சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது. மாசு இல்லாமல் மூலிகை செடிகளின் வாசனையை நுகர்வதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
அழகிய சுற்றுலா தலமான போடி மெட்டு ஒவ்வொரு வருடமும் நு}ற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. பல்வேறு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை உடைய போடி மெட்டு பகுதி வன உயிர் மற்றும் தாவரங்களை அதிகமாக பெற்றுள்ள இடமாகும்.
தேனியில் இருந்து 22 கிலோ மீட்டர்., சமவெளியில் சென்றhல் போடி-முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதியை கடந்து 22 கிலோ மீட்டர், சென்றhல் போடிமெட்டு மலைப்பகுதி. தமிழக, கேரள விவசாயிகள், மக்கள் பயன் அடையும் வகையில் போடிமெட்டு செல்வதற்கான மலைப்பாதை 1961 ல் அமைக்கப்பட்டது. 2004ல் 12 அடி ரோடு 18 அடி அகலமாக மாற்றப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகமானதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் 17 கோடி ரூபாயில் 22 அடியாக ரோடு அகலப்படுத்தப்பட்டது.
தேனியிலிருந்து போடிமெட்டு வழியாக 88 கிலோ மீட்டர் தூரத்தில் மூணாறு உள்ளது. அங்கு போடிமெட்டு வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் உயரமான மலையின் உச்சி, பனிமூட்டம், இயற்கை எழில் கொஞ்சும் பசுமையை கண்டு ரசித்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல், குளிர்ந்த காற்று, மனதிற்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்க கூடிய போடிமெட்டு மலைப்பகுதி பலரும் ரசிக்கும் வகையில் இயற்கை அமைந்துள்ளது.
இங்கு ஏராளமான பயணிகள் வருவதால் அவர்கள் தங்கி செல்ல விடுதி வசதி ஏற்படுத்தி, குடிநீர், கழிப்பறை, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாதலமாக்க மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் கோரிக்கையும்.. எங்களின் கோரிக்கையும் கூட..

குளு குளு கொழுக்குமலை

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் ஒன்றhன கொழுக்குமலை தான் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்ட இடம் என்றhல் அது மிகையாது..
நம்ம ஊரில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் .நம்ம ஊருக்கு போன நல்ல ஒரு இடத்திற்கு போய் சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைபவர்கள் நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக அந்த சந்தோசத்தை கொடுக்கும் .
உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான்
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை. மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.
தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நௌpந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.
தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது. அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.
இங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜPப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை.
சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூட்டம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கமமாகும்.
அழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை. இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம். வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
இந்த கொளுக்கு மலைக்கு செல்வதென்றhல், தேனி - போடி - போடிமெட்டு - கொழுக்குமலை பேருந்து வசதி உண்டு. ஜPப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு
வைகை அணை 
ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது வைகை அணை. இதுவும் தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும்.
ஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உண்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது. அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது.
ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது. ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா ஞடவைவடந செiனேயஎயஞே என்றே அழைக்கப்படுகிறது.
இந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜெhலிக்கிறது.
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வதோடு, படகுச் சவாரி செய்யும் வசதியும் இருப்பதால் பிரசித்திப்பெற்ற பொழுதுப்போக்கு ஸ்தலமாகவும் வைகை அணை அறியப்படுகிறது.
இங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை. எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம். எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.
எழில் கொஞ்சும் தேக்கடி***
தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.
வனவிலங்கு சரணாலயம்-
எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.
யானை சவாரி-
யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.
குமுளி-
தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷhப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறhர்கள்.
முல்லைப் பெரியாறு அணை-
தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்கு தான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றில் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.
இதே போல தேக்கடியில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.
இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்..
களைகட்டும் பண்டிகைகள் - பந்தயங்கள்
தேனி மாவட்டத்தில் பொங்கல், சிவராத்திரி மற்றும் மாசிமகம் ஆகிய பண்டிகைகள், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சின்னமனு}ர் அருகே உள்ள சுக்கங்கல்பட்டி எனும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயமும் மிகவும் பிரசித்தம்.
பிரசித்தி பெற்ற சந்தைகள்
தேனியில் திருவிழா நடக்கும் நாட்களில் கோயில் யானை திருவிழாச் சந்தைக்கு வரவழைக்கப்படுகிறது. தேனி-அல்லிநகரம் வாரச்சந்தை, தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை, இந்த வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
பிரபலங்களின் பிறப்பிடம்
பல பிரபலங்களையும், படைப்பாளர்களையும் தந்த மாவட்டம், தேனி. தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராnஜந்திரன்(எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன்  மற்றும்  தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜh, கஸ்தூரி ராஜh, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இயக்குனர்களாகவும், இளையராஜh, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜh, கார்த்திக் ராஜh மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத்துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றுள்ளனர்.
மின் உற்பத்தி நிலையங்கள்  -
தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு, மூன்று மின் உற்பத்தி நிலையங்கள்  அங்கு செயல்பட்டு வருகின்றன. அவை
1. பெரியார் நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
2. சுருளியாறு நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
3.  வைகை நுண் புனல் மின் நிலையம்.
இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம் மற்றும் போடிநாயக்கனு}ர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றhலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இயற்கையின் பொக்கிஷமாய் திகழ்ந்து வரும் தேனியின் முக்கிய தொழில், விவசாயம் தான்.  மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கிமான கிரீன் டீ ஆகியவை தேனியின் புகழை எடுத்துரைக்கும் பொருட்கள். வாழை உற்பத்தியிலும் தனக்கென தனியொரு இடத்தை, பெற்றுத்திகழ்கிறது, தேனி மாவட்டம்.
இயற்கை அழகின் பொக்கிஷமாய் விளங்கும் தேனியின் அழகை காண இரு கண்களும், போதாது** எடுத்துரைக்க ஒரு நாவும் போதாது***

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...