கோடை வந்தாலே, கொண்டாட்டம் தான். அன்றhடப் பிரச்னைகளைத் தற்காலிகமாக மறந்து, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து - சுற்றுலா.
தமிழகத்தில் சுற்றுலா என்றhல் ஊட்டி, கொடைக்கானல் தான் நம் நினைவுக்கு வரும். இந்த இடங்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பெரிய அளவில் பிரபலமாகாத, அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களை இந்நிகழ்ச்சியில் கண்டு மகிழ்வோம்.. சென்று புத்துணர்ச்சி பெறுவோம்…
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் பல்வேறு சிறப்புகள் கொண்ட இடங்கள் பல உள்ளன. பொதுவாக, புதிய இடங்களுக்குச் செல்வது. புதிய மனிதர்களைச் சந்திப்பது. புத்துணர்ச்சி தரும். அந்தவகையில் தமிழகத்தில் நம் முதலில் பார்க்க வேண்டிய இடம் என்னவென்றhல்…
அது பூலோகத்தின் 7-வது சொர்க்கம் என அழைக்கப்படும் நமது தமிழகத்தின் செல்லமகள் வால்பாறை.. தான்..
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி
மலைகளின்… மகள்…
இயற்கையால் Nழப்பட்ட சிறிய நகரமான வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கோவை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி வால்பாறை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள். கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து 500 அடிகள் உயரமுடையது. தமிழகத்தில் மலைகளின் அரசி உதகை என்றும், இளவரசி கொடைக்கானல் என்றும் கூறுவர். அந்த வகையில், வால்பாறையைத் தமிழக மலைகளின் செல்ல மகள் என்று கூட அழைக்கலாம்…
வால்பாறை அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.
தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம் பெற்ற இடம். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சுகிறது.. நம் ரசனையை விஞ்சுகிறது…
மாவட்ட தலைநகரான கோவையிலிருந்து ஒரு மணி நேரத்தில், பேருந்தில் பொள்ளாச்சியை அடையலாம். பொள்ளாச்சியிலிருந்து பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆழியாறு அணைத்தேக்கம் உள்ளது. கேரளத்திற்குச் சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த அந்த அணை கட்டப்பட்டது. ஆழியாறு அணைக்கரையில் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையழகில் மன அமைதி பெறுவதற்காக, சிலர் ஆசிரமங்களை அமைத்து, மனவளக்கலை வளர்க்கின்றனர்.
ஆழியாறு அணையைச் சுற்றி, சாலைகள் யாவும் வால்பாறையை நோக்கி மலையேறுகின்றன. பொள்ளச்சியிலிருந்து 62 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வால்பாறை. ஆழியாறு கீழிலிருந்து 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றhல், வால்பாறை மலைப்பகுதியை அடையலாம்.
தமிழகத்தில் புலிகளுக்கான சரணாலயம் வால்பாறை வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்திரா காந்தி தேசிய வன உயிரியல் பூங்கா என்று அதற்குப் பெயர்.
மலையேறும் போது, ஆழியாறு அணையின் பேரழகை மேலிருந்து ரசிக்க முடியும். வழியெங்கும் நீர்ச்சுனைகளும் ஓடைகளும் சலசலத்து ஓடும். அவற்றைக் கடந்து சென்றhல், குரங்கு அருவி என்ற அருவிப்பகுதி வருகிறது. தண்ணீர் நன்கு கொட்டும் போது, குரங்கு அருவியில் குற்றhல அருவிக்கு நிகரான குளியல் போடலாம். குரங்குகள் மிகுந்திருக்கும் பகுதி என்பதால், குரங்கு அருவி என பெயர் வந்தது. ஆனால், குரங்கு அருவியில், எப்போதும் தண்ணீர் இருக்கும் என சொல்ல முடியாது.
கொண்டையூசி வளைவுகளில் ஏறிச்சென்றபடியே இருந்தால். அதில் ஒன்பதாம் கொண்டை ஊசி வளைவில் காட்சி முனை அதாவது வியூ பாயிண்ட் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஆழியாறு அணையை முழுவதுமாக பார்க்கலாம்.
மலைவிளிம்பிலிருந்து மண்ணைக் காண்பது தானே மகத்தான காட்சியின்பம்…
அப்பகுதிகளில் யானைகளின் குறுக்கீடுகளும் இருக்கும். மலையேறி முடிந்ததும், அட்டகட்டி என்ற சிற்று}ர் வருகிறது. அட்டகட்டியில் வால்பாறைத் தேநீரை கொஞ்சம் பருகிவிட்டு, மேலும் ஏறினால், மலைமுடி(உச்ச) தீர்ந்து மலைமடிப்புகளில் செல்ல வேண்டும். ஓரிடத்தில் ஆங்கிலேயக் கனவான் கார்வர் மார்ச் என்பவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவர்தான் வால்பாறையைத் தேயிலைத் தோட்டம் ஆக்கியவர். காலமாற்றத்தால், இன்று அவர் காட்டின் அழிப்பாளராகக் கருதப்படுகிறhர். அந்த சிலைக்கு அருகிலிருந்து பார்த்தால், மலைத்தொடர்களுக்கு அப்பால் உள்ள பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்தைக் காணமுடியும்…
மலைத்தொடர்களிலேயே, தொடர்ந்து சென்றhல், வால்பாறை நகரம் வருகிறது. ஒரு திரையரங்கு கூட இல்லாத தமிழக தாலுகா வால்பாறை தான். இன்றும் வால்பாறையில் ஒன்றிரண்டு எரிநெய் சாவடிகளே(பெட்ரோல் பங்க்) உள்ளன. வால்பாறை நகராட்சியானது குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டது. அங்கே மூன்று பேருந்துகள் மட்டுமே நிறுத்தத்தக்க சிறிய பேருந்து நிலையம் உண்டு. தற்போது தங்குவதற்கு எண்ணற்ற விடுதிகள் தோன்றியிருக்கின்றன.
இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். அத்துடன், இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
அந்த அணில்களின் படங்கள் கூட அரியதாக இருக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது. வால்பாறை அழகை ரசித்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி இறங்கும் மலைப்பாதை 30க்கும் அதிகமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. ஒரு இருபது வளைவுகளைக் கடந்த பின்னர் கீழேயுள்ள ஆழியாறு அணையின் எழிலைக் காணலாம். அற்புதமான காட்சி அது.
ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு, அங்கு ஓர் அருவி உள்ளது. அது தான் குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றhலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.
வால்பாறை மலைத்தொடர்களில், நீராறு அணை, தூணக்கடவு அணை, பரம்பிக்குளம் அணை, சின்ன கல்லாறு அணை, சோலையாறு அணை என பல அணைகள் உள்ளன. இவற்றுள் நீராறு அணை, உள்ளார்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் அழகிய அணை ஆகும். சுற்றிலும் பச்சைத்தாவரங்கள் பல்கிப் பெருகியிருக்க அவ்வணையின் தோற்றமே ஒரு மாயவனத்தில் அமைந்திருப்பது போல் இருக்கும். அப்பகுதியில் அட்டைகள் மிகுதியாக ஊர்ந்து திரியும். அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க, புகையிலைத்தூளைக் கால்களில் தடவிக்கொள்கிறhர்கள். புகையிலை வாசனைக்கு அட்டைகள் கிட்டே நெருங்காதாம்.
வால்பாறையில் எண்ணற்ற நீரோடைகள் இருக்கின்றன. வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் அமைந்திருப்பது, சோலையாறு அணையாகும். ஆசியாவின் மிக உயரமான அணைக்கட்டுகளில் இதுவும் ஒன்று. இவ்வணை முழுக்கொள்ளளவோடு இருக்கையில் காண்பத என்பது வாழ்வில் மறக்க முடியாத காட்சியாகும்.
7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயிலை, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாச சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
இத்தனை எழில் நிறைந்த வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது. இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது. வால்பாறையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. அனைத்துமே பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்.
வால்பாறை என்பது, சிறு மலைமுகடுகளால் ஆன அழகிய மலைத்தொடர். அணைகளும் மலைமுகடுகளும் மேகத்தவழ்வுகளும் ஓடைகளும் என அப்பகுதியின் காட்சியின்பத்தை நேரில் கண்டுதான் உணர முடியும். அந்த அளவிற்கு ரம்மியமான காட்சி முனை வால்பாறை.. வால்பாறை தரும் பச்சை பசேல் பயண அனுபவம் என்பது வயதையும், மனதையும் இளமையாக்கும்..
இப்படி இங்கு ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், மனதை மயக்கும்.. பார்க்க தவறக்கூடாத இடங்களை பற்றி தற்போது நாம் காணலாம்..
பாலாஜp கோயில் பூங்கா
வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்றhல் பாலாஜp கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது.
அக்காமலை புல்வெளி
பாலாஜp கோயிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியது போன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
வெள்ளமலை குகை
கருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சிறுகுன்றh சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.
அருவிகள் : தலநார் என்ற இடமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் கவர்க்கல் என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் சிற்றருவிகளும், இயற்கை காட்சிகளும், சோலைகளும், தவழும் மேகமூட்டமும், தொடர்பனியும் நிறைந்த பகுதியாக இது காட்சி அளிக்கிறது.
லோயர் நீராறு வால்பாறையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் லோயர் நீராறு அணை உள்ளது. இயற்கை கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த லோயர் நீராறு அணை, தற்போது நிறைந்த கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த லோயர் நீராறு அணை நு}ற்றுக்கணக்கான நிலங்களையும் செழிக்கவைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.
சித்தி விநாயகர் கோயில் : வால்பாறையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் முழுவதும் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளை விநாயகர் திருக்கோயில் என்றும் பெயர். கோவிலை சுற்றிலும் அழகிய ரோஜh செடிகளால் பூங்கா அமைத்துள்ளனர். இந்த விநாயகர் ரோஜh மலர் பூங்காவுக்கு நடுவில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறhர்.
நல்லமுடி பள்ளத்தாக்கு நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சியில் மலைவாழ் மக்களான முதுவர் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகிறhர்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு நீர்வீழ்ச்சியும், புல்வெளியும், எழில்கொஞ்சும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. இது தவிர எண்ணற்ற சுற்றுலா தலங்கள் வால்பாறை பகுதியில் உள்ளன.
சின்னக்கல்லார் அணை வெள்ளமலை குகையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னக்கல்லார் அணை. வெள்ளமலை குகையின் நுழைவாயிலும் இங்கு தான் உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம்.
சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி
சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. மர தொங்கு பாலம் வழியாக தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது.
கீழ்நீராறு அணை
சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அடர் வனப்பகுதிக்குள் அமைந்த இந்த அணை.
கூழாங்கல் ஆறு
கீழ்நீராறு அணையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த ஆறு. இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வால்பாறையை அடையலாம்.
வில்லோனி பள்ளத்தாக்கு
வால்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதையையும் கூட காணலாம். ஆனால், அதற்குள் செல்ல அனுமதி இல்லை.
மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்
வில்லோனியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது இந்த நீர் மின் உற்பத்தி நிலையம். சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீரை கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறhக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.
சோலையார் அணை மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். ஆக்டோபஸை போல் 75 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது சோலையார் அணை.
தமிழகத்திலேயே உயரமானது. 345 அடி உயரமுள்ள அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.
அதிரப்பள்ளி அருவி
சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி இதுவே. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை.
நல்லமுடி பூஞ்சோலை
சோலையார் அணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது இந்த பூஞ்சோலை. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.
ஹை பாரஸ்ட் நம்பர் பாறை காட்சி முனை
நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த காட்சி முனைப்பகுதி. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.
புதுத்தோட்டம்
வால்பாறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது இத்தோட்டம். காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.
கவர்க்கல்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.
வாட்டர்பால்ஸ்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜpனல் டீ கிடைக்கும்.
டைகர் காட்சி முனை
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.
லோம்ஸ் வியூ
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையை மட்டுமல்ல பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.
மங்கி ஃபால்ஸ்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க மற்றும் புகைப்படம் எடுக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். அருவியில் குரங்குகள் அதிகம்.
ஆழியார் அணை
வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வெளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.
மாசாணியம்மன் கோயில்
பொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.
பரம்பிக்குளம் அணை
பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம்.
அடுத்ததாக… புறப்படுங்கள்.. டாப்சிலிப்
பொள்ளாச்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் சமதளத்திலும், 13 கிலோ மீட்டர் மலைப்பாதையிலும் சென்றhல் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். வனத்துறையின் வாகனத்திற்கு கட்டணம் செலுத்தி சுற்றி பார்க்கலாம். இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.
தமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.
இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.
டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலா வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றhல் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றhல் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.
ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றெhன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.
இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.
வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நின்று நிதானமாக அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.
வால்பாறை சுற்றுலா தலமாக தமிழ்நாடு வரை படத்தில் அறிவிக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதிக்கு தாவரவியல் பூங்காவும், சிறிய படகு இல்லமும் இருந்தால் வால்பாறை சுற்றுலா துறையில் தன்னிறைவு பெறும்...
இரா.ஜhன்சிராணி கண்ணன்
தமிழகத்தில் சுற்றுலா என்றhல் ஊட்டி, கொடைக்கானல் தான் நம் நினைவுக்கு வரும். இந்த இடங்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பெரிய அளவில் பிரபலமாகாத, அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களை இந்நிகழ்ச்சியில் கண்டு மகிழ்வோம்.. சென்று புத்துணர்ச்சி பெறுவோம்…
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் பல்வேறு சிறப்புகள் கொண்ட இடங்கள் பல உள்ளன. பொதுவாக, புதிய இடங்களுக்குச் செல்வது. புதிய மனிதர்களைச் சந்திப்பது. புத்துணர்ச்சி தரும். அந்தவகையில் தமிழகத்தில் நம் முதலில் பார்க்க வேண்டிய இடம் என்னவென்றhல்…
அது பூலோகத்தின் 7-வது சொர்க்கம் என அழைக்கப்படும் நமது தமிழகத்தின் செல்லமகள் வால்பாறை.. தான்..
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி
மலைகளின்… மகள்…
இயற்கையால் Nழப்பட்ட சிறிய நகரமான வால்பாறையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. கோவை மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி வால்பாறை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேடு பள்ளங்களாக அந்த மலைப்பகுதியில் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று கம்பளி போர்த்தப்பட்டது போல தேயிலைத் தோட்டங்கள். கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து 500 அடிகள் உயரமுடையது. தமிழகத்தில் மலைகளின் அரசி உதகை என்றும், இளவரசி கொடைக்கானல் என்றும் கூறுவர். அந்த வகையில், வால்பாறையைத் தமிழக மலைகளின் செல்ல மகள் என்று கூட அழைக்கலாம்…
வால்பாறை அதிகாலையில் பனி மூட்டம் மூடியிருக்கும் வேளையிலும் மழைக்காலங்களில் மேகங்கள் உருவாகி தேயிலைத் தோட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி கண்ணுக்கு விருந்து, நெஞ்சிற்கு சுகம், கற்பனைக்கு ஊற்று.
தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஓடும் ஒரு நதி, பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் இடம் பெற்ற இடம். அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சுகிறது.. நம் ரசனையை விஞ்சுகிறது…
மாவட்ட தலைநகரான கோவையிலிருந்து ஒரு மணி நேரத்தில், பேருந்தில் பொள்ளாச்சியை அடையலாம். பொள்ளாச்சியிலிருந்து பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆழியாறு அணைத்தேக்கம் உள்ளது. கேரளத்திற்குச் சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த அந்த அணை கட்டப்பட்டது. ஆழியாறு அணைக்கரையில் அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையழகில் மன அமைதி பெறுவதற்காக, சிலர் ஆசிரமங்களை அமைத்து, மனவளக்கலை வளர்க்கின்றனர்.
ஆழியாறு அணையைச் சுற்றி, சாலைகள் யாவும் வால்பாறையை நோக்கி மலையேறுகின்றன. பொள்ளச்சியிலிருந்து 62 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வால்பாறை. ஆழியாறு கீழிலிருந்து 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றhல், வால்பாறை மலைப்பகுதியை அடையலாம்.
தமிழகத்தில் புலிகளுக்கான சரணாலயம் வால்பாறை வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்திரா காந்தி தேசிய வன உயிரியல் பூங்கா என்று அதற்குப் பெயர்.
மலையேறும் போது, ஆழியாறு அணையின் பேரழகை மேலிருந்து ரசிக்க முடியும். வழியெங்கும் நீர்ச்சுனைகளும் ஓடைகளும் சலசலத்து ஓடும். அவற்றைக் கடந்து சென்றhல், குரங்கு அருவி என்ற அருவிப்பகுதி வருகிறது. தண்ணீர் நன்கு கொட்டும் போது, குரங்கு அருவியில் குற்றhல அருவிக்கு நிகரான குளியல் போடலாம். குரங்குகள் மிகுந்திருக்கும் பகுதி என்பதால், குரங்கு அருவி என பெயர் வந்தது. ஆனால், குரங்கு அருவியில், எப்போதும் தண்ணீர் இருக்கும் என சொல்ல முடியாது.
கொண்டையூசி வளைவுகளில் ஏறிச்சென்றபடியே இருந்தால். அதில் ஒன்பதாம் கொண்டை ஊசி வளைவில் காட்சி முனை அதாவது வியூ பாயிண்ட் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஆழியாறு அணையை முழுவதுமாக பார்க்கலாம்.
மலைவிளிம்பிலிருந்து மண்ணைக் காண்பது தானே மகத்தான காட்சியின்பம்…
அப்பகுதிகளில் யானைகளின் குறுக்கீடுகளும் இருக்கும். மலையேறி முடிந்ததும், அட்டகட்டி என்ற சிற்று}ர் வருகிறது. அட்டகட்டியில் வால்பாறைத் தேநீரை கொஞ்சம் பருகிவிட்டு, மேலும் ஏறினால், மலைமுடி(உச்ச) தீர்ந்து மலைமடிப்புகளில் செல்ல வேண்டும். ஓரிடத்தில் ஆங்கிலேயக் கனவான் கார்வர் மார்ச் என்பவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அவர்தான் வால்பாறையைத் தேயிலைத் தோட்டம் ஆக்கியவர். காலமாற்றத்தால், இன்று அவர் காட்டின் அழிப்பாளராகக் கருதப்படுகிறhர். அந்த சிலைக்கு அருகிலிருந்து பார்த்தால், மலைத்தொடர்களுக்கு அப்பால் உள்ள பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்தைக் காணமுடியும்…
மலைத்தொடர்களிலேயே, தொடர்ந்து சென்றhல், வால்பாறை நகரம் வருகிறது. ஒரு திரையரங்கு கூட இல்லாத தமிழக தாலுகா வால்பாறை தான். இன்றும் வால்பாறையில் ஒன்றிரண்டு எரிநெய் சாவடிகளே(பெட்ரோல் பங்க்) உள்ளன. வால்பாறை நகராட்சியானது குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டது. அங்கே மூன்று பேருந்துகள் மட்டுமே நிறுத்தத்தக்க சிறிய பேருந்து நிலையம் உண்டு. தற்போது தங்குவதற்கு எண்ணற்ற விடுதிகள் தோன்றியிருக்கின்றன.
இங்குள்ள தோட்டங்களுக்கு இடையே ஒரு பெருமாள் கோயிலும் உண்டு. மலையின் உச்சியில் அழகாகக் கட்டப்பட்டுள்ள அக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாகக் கழிக்கலாம். அத்துடன், இப்பகுதிகளில் நாம் நகரங்களில் காணும் அணில் செந்நிறத்தில் இருப்பதை காணலாம்.
அந்த அணில்களின் படங்கள் கூட அரியதாக இருக்கிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மான் குட்டிகள் துள்ளி ஒடும் காட்சியும் அருமையானது. வால்பாறை அழகை ரசித்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி இறங்கும் மலைப்பாதை 30க்கும் அதிகமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. ஒரு இருபது வளைவுகளைக் கடந்த பின்னர் கீழேயுள்ள ஆழியாறு அணையின் எழிலைக் காணலாம். அற்புதமான காட்சி அது.
ஆழியாறை நெருங்குவதற்கு முன்பு, அங்கு ஓர் அருவி உள்ளது. அது தான் குரங்கருவி, மிகச் சிறிய அருவிதான் என்றhலும், அருவிக்கு சற்று முன்னால் குளம் போல நீர் தேங்கி இருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு சுகமாகக் குளிக்கலாம்.
வால்பாறை மலைத்தொடர்களில், நீராறு அணை, தூணக்கடவு அணை, பரம்பிக்குளம் அணை, சின்ன கல்லாறு அணை, சோலையாறு அணை என பல அணைகள் உள்ளன. இவற்றுள் நீராறு அணை, உள்ளார்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் அழகிய அணை ஆகும். சுற்றிலும் பச்சைத்தாவரங்கள் பல்கிப் பெருகியிருக்க அவ்வணையின் தோற்றமே ஒரு மாயவனத்தில் அமைந்திருப்பது போல் இருக்கும். அப்பகுதியில் அட்டைகள் மிகுதியாக ஊர்ந்து திரியும். அட்டைக்கடியிலிருந்து தப்பிக்க, புகையிலைத்தூளைக் கால்களில் தடவிக்கொள்கிறhர்கள். புகையிலை வாசனைக்கு அட்டைகள் கிட்டே நெருங்காதாம்.
வால்பாறையில் எண்ணற்ற நீரோடைகள் இருக்கின்றன. வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் அமைந்திருப்பது, சோலையாறு அணையாகும். ஆசியாவின் மிக உயரமான அணைக்கட்டுகளில் இதுவும் ஒன்று. இவ்வணை முழுக்கொள்ளளவோடு இருக்கையில் காண்பத என்பது வாழ்வில் மறக்க முடியாத காட்சியாகும்.
7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயிலை, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாச சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
இத்தனை எழில் நிறைந்த வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது. வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது. இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது. வால்பாறையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. அனைத்துமே பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்.
வால்பாறை என்பது, சிறு மலைமுகடுகளால் ஆன அழகிய மலைத்தொடர். அணைகளும் மலைமுகடுகளும் மேகத்தவழ்வுகளும் ஓடைகளும் என அப்பகுதியின் காட்சியின்பத்தை நேரில் கண்டுதான் உணர முடியும். அந்த அளவிற்கு ரம்மியமான காட்சி முனை வால்பாறை.. வால்பாறை தரும் பச்சை பசேல் பயண அனுபவம் என்பது வயதையும், மனதையும் இளமையாக்கும்..
இப்படி இங்கு ஏராளமான இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், மனதை மயக்கும்.. பார்க்க தவறக்கூடாத இடங்களை பற்றி தற்போது நாம் காணலாம்..
பாலாஜp கோயில் பூங்கா
வால்பாறையில் இருந்து கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் நடந்து சென்றhல் பாலாஜp கோயில். கோயிலை சுற்றி பூத்து குலுங்கும் மலர்கள் கண்களை கவரும். சிறுவர் பூங்கா ரம்மியமானது.
அக்காமலை புல்வெளி
பாலாஜp கோயிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பச்சை பட்டாடை உடுத்தியது போன்ற அழகிய புல்வெளி. இதை காண வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
வெள்ளமலை குகை
கருமலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சிறுகுன்றh சாலையில் அமைந்துள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையை குடைந்து 4 கி.மீ. தூரம் அமைக்கப்பட்ட குகை, கால்வாய் ஆகியவற்றை காணலாம்.
அருவிகள் : தலநார் என்ற இடமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கிறது. வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் கவர்க்கல் என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் சிற்றருவிகளும், இயற்கை காட்சிகளும், சோலைகளும், தவழும் மேகமூட்டமும், தொடர்பனியும் நிறைந்த பகுதியாக இது காட்சி அளிக்கிறது.
லோயர் நீராறு வால்பாறையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் லோயர் நீராறு அணை உள்ளது. இயற்கை கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த லோயர் நீராறு அணை, தற்போது நிறைந்த கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த லோயர் நீராறு அணை நு}ற்றுக்கணக்கான நிலங்களையும் செழிக்கவைத்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.
சித்தி விநாயகர் கோயில் : வால்பாறையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் முழுவதும் பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெள்ளை விநாயகர் திருக்கோயில் என்றும் பெயர். கோவிலை சுற்றிலும் அழகிய ரோஜh செடிகளால் பூங்கா அமைத்துள்ளனர். இந்த விநாயகர் ரோஜh மலர் பூங்காவுக்கு நடுவில் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறhர்.
நல்லமுடி பள்ளத்தாக்கு நல்லமுடி பள்ளத்தாக்கு காட்சியில் மலைவாழ் மக்களான முதுவர் இனத்தவர் அதிக அளவில் வசித்து வருகிறhர்கள். அதுமட்டுமில்லாமல் இங்கு நீர்வீழ்ச்சியும், புல்வெளியும், எழில்கொஞ்சும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. இது தவிர எண்ணற்ற சுற்றுலா தலங்கள் வால்பாறை பகுதியில் உள்ளன.
சின்னக்கல்லார் அணை வெள்ளமலை குகையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னக்கல்லார் அணை. வெள்ளமலை குகையின் நுழைவாயிலும் இங்கு தான் உள்ளது. அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம்.
சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி
சின்னக்கல்லார் அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. மர தொங்கு பாலம் வழியாக தான் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டும். தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என பெயர் பெற்றது.
கீழ்நீராறு அணை
சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அடர் வனப்பகுதிக்குள் அமைந்த இந்த அணை.
கூழாங்கல் ஆறு
கீழ்நீராறு அணையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த ஆறு. இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறு கூழாங்கற்கள் நிறைந்தது. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வால்பாறையை அடையலாம்.
வில்லோனி பள்ளத்தாக்கு
வால்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உருளிக்கல் ரோட்டில் உள்ளது இந்த பள்ளத்தாக்கு. ஆங்கிலேயர்கள் வால்பாறைக்கும் வில்லோனிக்கும் இடையில் விஞ்ச் அமைத்து பயணித்துள்ளனர். வில்லோனியில் விஞ்ச் அமைத்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன. இங்கிருந்து வால்பாறைக்கு செல்லும் வில்லோனி குதிரைப்பாதையையும் கூட காணலாம். ஆனால், அதற்குள் செல்ல அனுமதி இல்லை.
மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம்
வில்லோனியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உள்ளது இந்த நீர் மின் உற்பத்தி நிலையம். சோலையார் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு செல்லப்படும் நீரை கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்து வெளியேற்றப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் மீன்பாறை ஆறhக பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. மானாம்பள்ளி நீர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்பாறை செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.
சோலையார் அணை மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். ஆக்டோபஸை போல் 75 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது சோலையார் அணை.
தமிழகத்திலேயே உயரமானது. 345 அடி உயரமுள்ள அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம்.
அதிரப்பள்ளி அருவி
சோலையார் அணையில் இருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. புன்னகை மன்னன் படத்தில் இடம் பெற்ற அருவி இதுவே. அருவியும், அருவிக்கு முன்பாக நீண்ட சமவெளி ஆறும் பிரமிக்க வைப்பவை.
நல்லமுடி பூஞ்சோலை
சோலையார் அணையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முடீஸ் ரோட்டில் உள்ளது இந்த பூஞ்சோலை. இயற்கை எழில் சூழ்ந்த இடம். பள்ளத்தாக்கில் யானைகள், காட்டெருமைகளை காணலாம்.
ஹை பாரஸ்ட் நம்பர் பாறை காட்சி முனை
நல்லமுடி பூஞ்சோலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த காட்சி முனைப்பகுதி. அந்த காலத்து தமிழக, கேரள சமஸ்தான எல்லை சின்னங்களை காணலாம். இங்கிருந்து கேரளா மலைவாழ் குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகள், இடைமலையாறு, இடைமலையாறு அணை ஆகியவற்றை காணலாம்.
புதுத்தோட்டம்
வால்பாறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது இத்தோட்டம். காட்டெருமைகள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் கடந்து செல்லுமிடம்.
கவர்க்கல்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் உயர்வான பகுதி. வால்பாறையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்பகுதி பெரும்பாலும் அடர்த்தியாக பனி சூழ்ந்திருக்கும். வாகனத்தில் விளக்கை எரிய விட்டு பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல வேண்டும். யானைகள் கடக்கும் பகுதி.
வாட்டர்பால்ஸ்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குளிக்க வசதியில்லை. பார்த்து ரசிக்கலாம். இங்கு நறுமணம் மிக்க ஜகருண்டா வகை மலர்கள் பூத்துக்குலுங்கும். ஒரிஜpனல் டீ கிடைக்கும்.
டைகர் காட்சி முனை
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் வனப்பகுதிக்குள் அமைந்த காடம்பாறை கிராமம், ஆதிவாசி குடியிருப்புகளை காணலாம்.
லோம்ஸ் வியூ
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் மொத்தமுள்ள 41 ஹேர்பின் வளைவுகளில், கீழிருந்து மேலாக உள்ள 9வது வளைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆழியார் அணையை மட்டுமல்ல பொள்ளாச்சி வரை தெரியும் பசுமையையும் காணலாம்.
மங்கி ஃபால்ஸ்
வால்பாறை க்ஷ பொள்ளாச்சி மலைப்பாதையில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிக்க மற்றும் புகைப்படம் எடுக்க அருகேயுள்ள வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் டிக்கெட் வாங்க வேண்டும். அருவியில் குரங்குகள் அதிகம்.
ஆழியார் அணை
வால்பாறை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 120 அடி உயரமுள்ள அணை. ஆண்டு முழுவதும் 100 அடிக்கு குறையாமல் நீர் இருக்கும். அணைக்கட்டில் பூங்கா உள்ளது. படகு சவாரியும் செய்யலாம். சுடச்சுட பொரித்த மீனை இங்கு சுவைக்கலாம். அணையின் எதிரே உள்ள மீன்காட்சியகத்தில் வெளிநாட்டு மீன்கள் உள்ளன. அணையை ஒட்டி வேதாத்ரி மகரிஷியின் அறிவுத்திருக்கோயில் உள்ளது.
மாசாணியம்மன் கோயில்
பொள்ளாச்சியில் இருந்து டாப்சிலிப் செல்லும் வழியில் ஆனைமலை ஊர் உள்ளது. இங்குள்ள மாசாணியம்மன் கோயில் பிரபலமானது.
பரம்பிக்குளம் அணை
பரம்பிக்குளம் அணை கேரளாவில் இருந்தாலும், அணை நிர்வாகம் தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலையார் அணையில் இருந்து வரும் நீர் இங்கு தேக்கமாகிறது. டாப்சிலிப்பில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கேரள எல்லையில் இருந்து கேரள வனத்துறை வாகனத்தில் பரம்பிக்குளம் அணை வரை வன உலா செல்லலாம்.
அடுத்ததாக… புறப்படுங்கள்.. டாப்சிலிப்
பொள்ளாச்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் சமதளத்திலும், 13 கிலோ மீட்டர் மலைப்பாதையிலும் சென்றhல் டாப்சிலிப்பை அடையலாம். கடல்மட்டத்துக்கு மேல் சுமார் 450 மீட்டர் உயரத்தில் உள்ளது. டாப்சிலிப்பில் யானை சவாரி செல்லலாம். வனத்துறையின் வாகனத்திற்கு கட்டணம் செலுத்தி சுற்றி பார்க்கலாம். இங்கு மூலிகை பண்ணையும் உள்ளது.
தமிழக – கேரள எல்லையில் உள்ள டாப் ஸ்லிப்பை நோக்கி. இந்திராகாந்தி தேசியப் பூங்கா என்று அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு உட்பட்டது டாப் ஸ்லிப். இங்குள்ள பெரிய மரங்களை வெட்டி உருட்டிவிடுவார்களாம். தடையேதும் இன்றி அந்த கட்டைகள் மலையடிவாரத்திற்கு வந்து விழுமாம். அதனால் டாப் ஸ்லிப் என்று பெயர் வந்தது.
இவ்விடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை. மறைத்துக் கொண்டு போய் சிக்கனால் சிறைதான்.
டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம். அங்குள்ள தமிழ்நாடு வனத்துறையின் விருந்தினர் மாளிகைகளில் தங்கும் வாய்ப்பு கிடைத்தால் இரவில் உலா வரும் கரடியில் இருந்து சிறுத்தை வரை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
டாப் ஸ்லிப்பில் இருந்து காட்டிற்குள் சென்று சுற்றிப்பார்க்க யானை சவாரி வசதி உள்ளது. இங்கிருந்து மேலும் சிறிது தூரம் சென்றhல் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகனத்தில் சென்றhல் தமிழகமும், கேரளமும் இணைந்து நிர்வகித்து வரும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் 3 அழகிய அணைக்கட்டுகளைப் பார்க்கலாம்.
ஒன்று பெருவாரிப்பள்ளம், மற்றெhன்று தூணக்கடவு, எல்லாவற்றுக்கும் மேல் இறுதியாக அந்த சாலையின் முடிவாக மலையின் உச்சியில் பரம்பிக்குளம் தண்ணீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணை. 2700 அடி உயரத்தில் இந்த அணை உள்ளது.
இப்பகுதி மிக அருமையான பொழுதுபோக்கிடமாகும். மலையும், நீரும், பறவைகளின் ஒலியும், காற்றும் சுகமான அனுபவங்கள்.
வேட்டைக்காரன் புதூரில் இருந்து பரம்பிக் குளம் அணை வரை செல்லும் பாதையில் ஆங்காங்கு நின்று நிதானமாக அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியை ரசித்துப் பார்க்கலாம்.
வால்பாறை சுற்றுலா தலமாக தமிழ்நாடு வரை படத்தில் அறிவிக்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதிக்கு தாவரவியல் பூங்காவும், சிறிய படகு இல்லமும் இருந்தால் வால்பாறை சுற்றுலா துறையில் தன்னிறைவு பெறும்...
இரா.ஜhன்சிராணி கண்ணன்
No comments:
Post a Comment