Friday, November 8, 2019

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன்

இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட்டையில் போரிட்ட தியாகிகளில் ஒருவரும், மூத்த பத்திரிக்கையாளரும், முதுபெரும் பெரியார் தொண்டரும், தனது தள்ளாத வயதிலும் தளராத தேசப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர் சூறாவளி லெட்சுமணன். 
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தனது சுதந்திர வேட்கையையும், அதற்காக அவர் எடுத்த ஆயுதமாம் எழுத்தின் மீதான காதலும் இன்று வரை தணியவில்லை. 
தள்ளாத வயது என்று நாம் சொன்னாலும், தளரவில்லை அவரது தன்னம்பிக்கை. தன்னை கிறுக்கன் என்று சொல்பவர்களை தனது ஆயுதமாம் தமிழால் கீறல் பேர்வழிகள் எனக்கூறி துச்சமென அவர்களை தூக்கியெறிந்து தன்னம்பிக்கை நடைபோடுபவர். நமது தெற்கு சீமை தந்த தங்க புதல்வன் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தனது இறப்பை சரித்திரமாக உலகிற்கு விட்டுச்சென்றது போல தனது வாழ்வையும் தன்னோடு போரிட்டு மடிந்த தியாகிகளது தியாகத்தையும் சரித்திரத்தில் நிரந்தரமாக பதிவு செய்ய வேண்டும். அதைக்கண்ட இளைஞர்களது இதயத்தில் நமது தேசத்தின் மீதான காதல் துளிர் விட்டு ஆணி வேராய் ஊடுருவி அகிலமெங்கும் விருட்சமாக விசாலமாக பரவி அதன் விழுதுகளில் வருங்கால தலைமுறைகள் ஊஞ்சலாட வேண்டும் என்ற கனவுகளுக்கு சொந்தக்காரர். 
பார்க்க பாட்டாளி மகனாய் தெரிந்தாலும் பரந்த மனதில் செல்வந்தர், வயதோ 92 ஆனால் எண்ணமோ 29, காலத்தால் முதியவர் கருத்தில் முதுபெரும் கலைஞர், தனது கருத்திலோ, எண்ணத்திலோ சிறிதும் தளர்வு கொள்ளாதாவர், தளர்த்திக் கொள்ளாதவர். தனது பெயருக்கேற்ப சூறாவளி தான் இன்றும், என்றும்… 
சுதந்திரம் என்பது சுதந்திரதினத்தன்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வதும், மரியாதை செய்வதிலும் அல்ல: சுதந்திரம் என்பது பல மாமனிதர்களின் தியாகத்தால் கிடைத்தது என்றுணர்த்தும் விதமாக தனது எழுத்தால் உலகம் உணர செய்ய வேண்டும் என்பதற்காக சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்ற புத்தகத்தை தனது நீதி நிலையம் பதிப்பகத்தின் வாயிலாக துணிந்து வெளியிட்டவர். சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் மறைக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, தியாகிகளை பற்றிய தொகுப்புகளை நூலாக வெளியிட்டவர். 
ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் போராடி வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்திற்காக நடைபெற்ற போராட்டங்களில் பங்குபெற்ற தியாகிகளில் ஒருவரும், ஓய்வறியா உழைப்பாளியான தியாகி சூறாவளி என்ற லெட்சுமணன் 1942 ல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்ட தியாகி. நாடு விடுதலை அடைந்தபிறகு, பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவாளராக இன்றும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திவரும் இவர் ஏராளமான நூல்களுக்குச் சொந்தக்காரர். 
நமது தலைமுறையில் தொலைந்து போய்விட்ட நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு, தியாகம், பொதுநலம், சத்தியம், தேசியம், நேர்மை இவற்றை எல்லாம் கொழுந்து விட்டெறியச் செய்யும் விதமாக வளமான வாழ்வு என்ற நூலில் 38 தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ள இவர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனத்தின் மூத்த பத்திரிக்கையாளராகவும் வலம் வந்தார். மேலும், அச்சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு.இரவீந்திரதாஸ் அவர்களின் உண்மையான நண்பனாகவும் திகழ்ந்தார். சுயமரியாதை இயக்கத்தில் பெரியாரின் தொண்டராக விளங்கிய இவர் இலக்கியச் செம்மல், எழுத்துவேந்தர் என்ற பெயர்களுக்குச் சொந்தக்காரர். உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொற்கிழி பெற்ற எழுத்தாளரான இவர் சிறுவர், சிறுமிகளுக்கான பச்சைக்கிளி, தீபாவளி பரிசு, மகாபுத்திசாலி, ஏமாறாதே என்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதே போல் விதியா, சதியா, இதுவா புராணம், இரத்தக்கறை, நாடுகாத்த நல்லவர்கள், கல்லினுள் தேரையோ (நாடகம்), சும்மாவரவில்லை சுதந்திரம் என்ற பல நூல்களை நீதிநிலையம் என்ற அவருடைய பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். தினகரன், தமிழ்சுடர் போன்ற பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்று அதன் மூலம் வரும் பென்ஷனையே வாழ்வாதாரமாக கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வரும் இவர் புதிய பார்வை, தமிழ் சுடர் பத்திரிக்கைகளில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும், அப்பச்சி மலர் என்ற மாத இதழ் ஆரம்பித்த காலம் முதல் 2018 வரை பல தலைவர்களை பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல பத்திரிக்கைகளில் கவுரவ ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக மற்றும் விழா மேடைகளில் தனது உரையை நிகழ்த்திய இவரை பல நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகவும் கவுரப்படுத்தியுள்ளனர். 
தேவகோட்டை திரு.இராம.வெள்ளையன் காலத்திய திராவிட இயக்கத்து தோழரான லெட்சுமணன், சாதிப்பேயின் கோரத்தாண்டவம் நிகழக்கூடாது என்ற முயற்சியின் தேடலில் ஒத்துழைத்தவர் மற்றும் 17 ஆகஸ்ட் 1942ல் நடைபெற்ற தேவகோட்டை போராட்டத்தில் பங்குபெற்ற 82வது குற்றவாளி என யாழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேரும் போரும் நூலின் ஆசிரியர் பிஆர்.சந்திரன் அவர்கள் தனது புத்தகத்தில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். 
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ரோசையா வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பாக வழங்கிய பாராட்டு சான்றிதழ். திருவள்ளுவர் தமிழ் மன்றம் சிறப்பு விருது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மூத்த நிருபரான இவருக்கு வழங்கப்பட்ட கவுரவ விருதுகள் என பட்டியல் ஒருபுறம் நீண்டு கொண்டிருக்க தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பத்திரிக்கையாளராக பணியாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே தனது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் தியாகி லெட்சுமணன், விடுதலைப்போராட்ட தியாகிகளுக்கான பென்ஷனைக்கூட வேண்டாமென மறுத்து, சிறந்த தேசபக்தராக நம்முன் வாழ்ந்து வருவது நமக்கு பெருமையே!
தியாகி சூறாவளி லெட்சுமணன் அவர்களது சுதந்திர போராட்ட நினைவுகள் இங்கே சிறு தொகுப்பாக பகிரப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1927ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பொன்னையா – பெரியநாயகி தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தார் லெட்சுமணன். தனது 15 ஆவது வயது முதல் தமிழ் புத்தகங்கள், கட்டுரைகளை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினார். அப்பொழுது வெளிவந்த சுதேசமித்திரன் வாயிலாக போராட்ட குணம் தொற்றிக் கொண்டது லெட்சுமணனுக்கு. அதிலிருந்தே ஆங்காங்கே போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளார். 1942 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள தியாகிகள் பூங்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த ஆங்கிலேய அலுவலர்கள் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 27 பேர் கொல்லப்பட்டனர். அந்த துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்டு காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு பல இன்னுயிர்களை இழந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் வாடி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தின் பெருமை சிதறடிக்கப்பட்டுள்ளதாக இன்றளவும் கண்ணீர் மல்க கூறுபவர். 
சுதந்திர தாகத்துடன் சூறாவளியாய் சுற்றித்திரிந்த அவருக்கு வீட்டில் கிடைத்த பரிசு தண்டச்சோறு, வெட்டிப்பய போன்ற கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் அவரது சுதந்திர வேட்கைக்கு முன் அந்த கடுஞ்சொற்களால் தன் மனதை சிறிதும் அசைக்க முடியாது என புன்னகை பூக்க சொல்பவர். ஆனால், எந்த கனவுடன் சுதந்திரம் பெற வெள்ளையர்களை எதிர்கொண்டோமோ, சுதந்திரத்திற்கு பின் அக்கனவு சுக்குநூறாகி போனதென இன்றளவும் கவலைக் கொள்கிறார் லெட்சுமணன். 
இந்திய நாடு எந்த தலைவர்களின் செயல்பட்டாலும் முன்னேறவில்லை என துணிந்து குற்றம் சுமத்தும் இவர், போராடிப்பெற்ற சுதந்திரத்தால் நம் நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டமேற்படிப்பு வரை ஒரே தரமான இலவச கல்வி, பணமில்லா மருத்துவம், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மொழி வளர்ச்சி, நாளைய நாட்டின் தலைவர்களாம் இளைஞர்களின் வளர்ச்சி, அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையிலான வேலைவாய்ப்பு என அதீத ஆசையில் மிதந்த லெட்சுமணனுக்கு எல்லாம் வெறும் கனவாகியது தாங்க முடியாத இழப்பு என கவலைக் கொள்கிறார். 
போராட்டத்திற்கு பின் கிடைத்த சுதந்திரம் தனக்கொரு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்ததாக மகிழ்வுடன் இன்றளவும் தெரிவிக்கும் லெட்சுமணன், அந்த மகிழ்ச்சி சிறிது காலம் கூட நிலைக்கவில்லை என்றும், சுதந்திரம் அடைந்த பிறகு எந்த தலைவர்களும் தங்களைப் போன்ற கீழ் மட்ட தொண்டர்களை மதிக்கவில்லை என்றும், இதனால் தொண்டர்களுக்கு வறுமையே வாழ்க்கையாகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார். 
தான் நினைத்த சுதந்திரம் இதுவல்ல என்று கூறும் லட்சுமணன், தொண்டர்களை மதிக்காமல், கடமைக்காக தியாகத்திற்கு விலை வைத்து அவர்கள் கொடுக்கும் பென்ஷனை நாம் ஏன் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அரசு தியாகிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் பென்ஷனையை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். தற்போது பத்திரிக்கையாளனுக்குரிய பென்ஷன் தான் தனது வாழ்வாதாரம் எனக் கூறும் லெட்சுமணன், நாட்டின் ஜீவாதாரமான நதி நீர் இணைப்பு ஒன்று தான் தனது வாழ்நாள் கனவு என்றும் காலத்தின் ஓட்டத்திற்கேற்ப தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். 

தொகுப்பு
திருமதி. இரா. ஜான்சிராணி கண்ணன்

Monday, May 7, 2018

நலன் தரும் நாட்டு ஓடுகள்


ஓட்டு வீடு என்றாலே வெயில் காலத்தில் அனலாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் சீமை ஓடுகள் எனப்படும் மங்களூர் ஓடுகள் தான் அதிக வெப்பத்தை கடத்தி வீட்டினுள் பரவ செய்யும். வெப்பத்தை குறைப்பதில் நாட்டு ஓடுகள் சிறந்தவை. இவற்றை அதன் வடிவத்தால் அரை வளைய ஓடு எனவும் அழைப்பர். கையோடு என்றும் சொல்வர். இவை ஐந்து அடுக்குகளை கொண்ட மண் தடுப்பால் ஆனவை. ஒவ்வொரு அடுக்கிற்கும் இடையே உள்ள காற்றுவெளி, ஒரு வெப்ப தடுப்பானாக செயல்படும். அதனால், வெளியில் இருக்கும் வெப்பத்தை, வீட்டுக்குள் அனுமதிப்பது இல்லை என்பது சிறப்பு.

Wednesday, May 2, 2018

சிறுதானியம்

சிறுதானியங்களை ஒதுக்கினோம் !!
பெரு வியாதிகளில் சிக்கினோம்!!

நமது முன்னோர்கள் 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வு வாழ காரணமாக இருந்தது சிறுதானியமே! அதன் அருமையை இன்றளவும் நமக்கு உணர்த்தும் விதமாக அன்றைய காலக் கட்டத்தில் சிறுதானியத்தை ஆலய கோபுர கலசங்களில் வைத்து பாதுகாத்தனர். ஆனால் தற்பொழுது உணவின் பெரும்பகுதி பட்டை தீட்டப்பட்ட வெள்ளை நெல் அரிசியாகவும், ரசாயன இடு பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கபட்டவைகளாக அமைவதால் பெருவியாதிகளாக கருதப்படும் சர்க்கரை, புற்றுநோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு இன்னும் பல நோய்கள் வர காரணமாகிறது. ஆனால் சிறுதானியத்தை நம் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் உறுப்புகள் நோயின்றி திறன்பட வேலை செய்ய அனைத்து நுண்ணூட்ட சத்துக்களை வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, நார் சத்து, தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரத சத்து போன்றவற்றை தேவையான அளவு நமக்கு கிடைக்கிறது. எனவே சிறதானியமானது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை

Wednesday, May 3, 2017

உணவே மருந்து

உணவே  மருந்து 
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - என்ற முதுமொழிக்கேற்ப சில பொருட்களை அளவோடு நமது அன்றhட வாழ்வில் சேர்க்க வேண்டும். அதே போல, சில உணவு பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம் இன்று... ஆம்...
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
* பழங்களைத் தனியே தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ அருந்தக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் அருந்தலாம்.
* அல்சர் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்துச் உண்ணக் கூடாது.
* மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.
தேடல்கள்  தொடரும்…
மேலும், பல தகவல்கள் அறிய… இணைந்திருங்கள் ..

வெனிஸ்

கடலில் மிதக்கும் கம்பீர நகரம் - வெனிஸ்

மத்திய தரைக்கடலின் மகாராணி

அது கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம். அதன் அகன்ற தெருக்களிலும், குறுகலான தெருக்களிலும் வலம்வருகிற கடல் ஒருகணம் சீறியவாறு ஏறும், மறுகணம் சிணுங்கியவாறு இறங்கும். அதன் அரண்மனையின் பளிங்குக் கல்லில் கடற்பாசி அமர்ந்தபடி அடம்பிடிக்கும் என ஆங்கிலக்கவிஞர் சாமுயல் ரோஜர்ஸ்-ஆல் விவரிக்கப்பட்டுள்ள அந்த கம்பீரமான நகரம் தான் வெனிஸ்.
மிகப் பெரிய குடியரசு ஒன்றின் முன்னாள் தலைநகரான வெனிஸ், நில மற்றும் கடல் பேரரசை பல நு}ற்றhண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள வெனிஸ் நகரம் இன்று பலருக்கும் தெரிந்த நகரம். இந்நகரத்தின் வணிகன் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் பற்றியும் அதில் வரும் ஷைலாக் எனும் வட்டிக்காரன் பற்றியும் பலரும் அறிந்திருப்பர்.   அதுமட்டுமில்லாமல் நீரின் மேல் இந்நகரம் கட்டப்பட்டதா? அல்ல.. நகரம் கட்டப்பட்டபின் நீர் சூழ்ந்ததா? என புருவங்களை உயர வைக்கும் இந்நகரிலுள்ள தண்ணீர்த் தெருக்களில் செல்ல முடிகிற ஒரே மோட்டார் வாகனம் படகுகளே... படகை இங்குள்ளவர்கள் கண்டோலா எனவே அழைக்கின்றனர். இங்கு வீடுகளுக்கு விதவிதமான வண்ணங்கள் அதில் குடியிருப்பவர்கள் பூசுகிறhர்கள். அதனால் நகரமே வண்ணமயமாக உள்ளது. மேலும், இங்கு பிரமாண்டமான, நவீனமான கட்டிடங்களைக் கட்டினால் அந்நகரின் பழமையான தோற்றம் போய்விடும் என்று அம்மக்கள் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய பாரம்பரிய வரலாறு கொண்ட வெனிஸ் நகரம் முழுவதும் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கிறன.
வெனிஸுக்கு விஜயம் செய்யும் அநேகருக்கு இரண்டு, மூன்று நு}ற்றhண்டுகள் பின்னோக்கிச் சென்றது போல் இருக்கும். அந்தளவிற்கு இந்நகரத்தின் சூழல் தனித்தன்மையுடையதாக அமைந்திருக்கிறது. ஏனெனில், அமைதியே அங்கு காணப்படுகிற ஒரு முக்கிய அம்சம்.
பாதசாரிகளுக்கான குறுகிய நடைபாதை பெரும்பாலும் கால்வாய்களிலுள்ள போக்குவரத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கால்வாயை ஒட்டியுள்ள பாதைகளும், கால்வாயுக்குக் குறுக்கே செல்லும் வளைந்த கற்பாலங்களின் பாதைகளும் இதற்கு விதிவிலக்கு.  கண்கவர் காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும் இந்த வெனிஸ் நகரில், தேவாலயத்தோடு கூடிய புனித மார்க் சதுக்கம், மணிக் கூண்டு, பச்சைக் கடற்கழியில் சூரிய ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கிற பிரம்மாண்ட கடற்பகுதி ஆகியவை ஓவியர்களின் மனதைத் துரிகை பிடிக்கத் தூண்டுகின்றன.
இங்கிருக்கும் முக்கிய சதுக்கத்தில் எப்போதும் பிஸியாக காணப்படும் கஃபேக்கள் சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் ஒரு சேர சுண்டி இழுக்கின்றன. சிறிய ஆர்கெஸ்ட்ராக்கள் இசைக்கும் பாரம்பரிய இன்னிசையைக் கேட்டுக்கொண்டே நீங்கள் ஒரு பானத்தையோ அல்லது  ஐஸ்கிரீமையோ ருசிக்கலாம். அங்கு உட்கார்ந்து, வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டும், சுற்றியுள்ள பிரமாதமான கட்டடக் கலையை ரசித்துக் கொண்டும், இதுவரை எந்தக் காரையும் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டும் இருக்கையில், ஏதோ பல காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போன்றே நாம் உணரக்கூடும்.
கலைப் பொக்கிஷங்களைத் தேடுவோரை இந்நகரம் சுண்டி இழுக்கிறது. ஆம்.. இங்குள்ள எண்ணற்ற அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், தேவாலயங்கள் போன்றவற்றில் பல பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் குடி கொண்டிருக்கின்றன. ஆனால் பார்வையாளர்கள் சிலர், குறுகலான பாதைகளில் சுதந்திரமாக நடந்து சென்று, தங்களைச் சுற்றியுள்ள வித்தியாசமான காட்சிகளைப் பார்ப்பதிலேயே திருப்தியடைந்து விடுகிறhர்கள். சுற்றுலாப் பயணிகளுக்கென்றே எண்ணிலடங்கா கடைகள் இங்கு உள்ளன. கடற்கழித் தீவான பூரானோவின் லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைகள், முரானோவின் கிரிஸ்டல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. இவற்றிற்காக இந்நகரம் புகழ்பெற்று விளங்குகிறது.  மோட்டார் படகுகளில் கொஞ்ச நேரம் சவாரி செய்து இத்தீவுகளுக்குச் செல்லலாம், அங்கே இந்தப் பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். இப்படகுகளில் சிறிது நேரம் சவாரி செய்வதே ஓர் அலாதியான அனுபவம் தான்.
கூரிய முகடுள்ள வளைவுகளோடு கூடிய பிரம்மாண்டமான அரண்மனைகள், கடந்த காலத்து கிழக்கத்திய செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன. இந்நகரத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையான கிராண்ட் கேனாலின் மீதுள்ள புகழ்பெற்ற ரியால்டோ பாலத்தையும், அதன் கீழே அமைதியாக நீந்திச் செல்லும் பளபளப்பான கருப்புப் காண்டோலா படகுகளையும் நின்று வேடிக்கை பார்க்க அநேகர் கூட்டம் கூட்டமாக நிற்பர். பலாடியோ, டிஷன், டின்டாரெட்டோ போன்ற பிரபல கட்டடக்கலை நிபுணர்களாலும் ஓவியர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்த வெனிஸ் நகரம், லாஸேரே நிசீமா என அழைக்கப்படுகிறது. அதாவது “மிக அமைதியானது” அல்லது “அழகானது” என்பதே அதன் அர்த்தம். “நாகரிக உலகின் மிகவும் செல்வச் செழிப்பான வியாபார மையமாக கொடிகட்டிப் பறந்த” இந்நகரம் “மத்தியதரைக் கடல் மகாராணி” என்று அழைக்கப்படுவது மிகப் பொருத்தமானதே. பல நு}ற்றhண்டுகளுக்கு அது அவ்வாறே இருந்தது. ஆனால் 16-ம் நு}ற்றhண்டில் முக்கிய வியாபார தடம் அட்லாண்டிக்கிற்கும் மேற்கே அமெரிக்க கண்டங்களுக்கும் மாற ஆரம்பித்த போது அதன் ஆதிக்கம் மங்க ஆரம்பித்தது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதுமாகச் சிதறியிருந்த வெனிஸ் குடியேற்றங்கள் அருகருகே அமையவில்லை. ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபடவில்லை. ஒன்றhகச் சேர்ந்து ஒத்துழைக்கவுமில்லை. இதனால் குடியேற்றங்களை இழக்க வேண்டிய கட்டாயம் வெனிஸுக்கு ஏற்பட்டது. அருகிலிருந்த அரசுகள் வெனிஸின் பிராந்தியங்களை ஒன்றன் பின் ஒன்றhகக் கைப்பற்ற ஆரம்பித்தன. கடைசியில், நெப்போலியன் இந்தக் கடற்கழி நகரத்தை 1797-ல் கைப்பற்றி ஆஸ்திரியாவின் ஆளுகைக்கு உட்படுத்தினார். 1866-ல் வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பாகமானது.
 “கடலில் மிதக்கும் கம்பீரமான நகரம்” ஆர்வத்தைத் தூண்டுகிற கடந்த காலத்துக்குச் சாட்சி பகர்கிறது. ஆனால் வித்தியாசமான எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளபடி, “வெளியாட்கள் இந்நகர மக்களின் தேவைகளை உதாசீனப்படுத்தி, இங்கிருந்து துரத்திவிட்டுக்கூட இந்நகரை ஓர் அருங்காட்சியகமாக” மாற்றும் ஆபத்திருக்கிறது. பல காலமாக வெனிஸ் மோசமான இயற்கைச் சூழலோடு போராட வேண்டியிருந்தது. இந்நகரை “சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் புதுப்பித்து, குடியேற்றி, உயிரூட்டினால் தவிர மற்றபடி வெறும் தண்ணீரிலிருந்து இதைப் பாதுகாப்பது வீணான ஒன்றhகவே இருக்கும்.”

பயணம்  தொடரும்…



கம்பீரமாக நிற்கிறது… கல்லணை

கம்பீரமாக நிற்கிறது… கல்லணை

உலகிலுள்ள அணைகளிலேயே மிகவும் பழமையானதும், தற்போதும் புழக்கத்தில் உள்ளதுமான அணை என்றhல் அது நம் தமிழ் மன்னனாகிய கரிகாற் சோழன் கட்டிய கல்லணையே.. காலத்தை வென்று கம்பீரமாக காட்சியளிக்கும் கல்லணையை பற்றிய சிறு தொகுப்பே இது…
திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உலகின் மிக பழமையான அணைகளில் ஒன்றhன கல்லணை. இந்த அணை பழமையானது என்பதைக்காட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள ஒரு அணை என்ற பெருமைக்குரியது.
கி.பி.இரண்டாம் நு}ற்றhண்டில் கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக பழந்தமிழனனின் கட்டிடக்கலையை, பாசன மேலாண்மையை பறைசாற்றுகிறது.
தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தவர்கள் சோழர்கள். அந்த சோழர்களின் வழி வந்த பிற்கால சோழர் என அழைக்கப்படும் கரிகாற்பெருவளத்தான் கட்டிய அணையே கல்லணை.
காண்போரை கவர்ந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை கரை புரண்டு ஓடும் நீரின் குறுக்கே எப்படி கட்டியிருப்பார்கள்…
ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கரையோர விளைநிலங்களை நீர் அடித்து சென்று கடலில் வீணாக கலந்தது. விவசாயிகள் வேதனைக்குள்ளாயினர். இதனால் அக்காலகட்டத்தில் நாட்டில் நிலவும் வறுமை, மக்களின் துயர் கண்டு காவிரியின் குறுக்கே ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தார் கரிகாற் சோழன். ஆனால், அது சாதாரன விஷயம் அல்ல.. இருப்பினும் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். அது என்ன வழி?.. நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். அதன்படி, காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறெhரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணை தான் கல்லணை.
கல்லணைக்கு கட்ட தேவைப்பட்ட பெரிய கற்களையெல்லாம் திருவெறும்பூர் பகுதியிலிருந்து கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.வடக்கு புறத்திலுள்ள கொள்ளிடத்தையும், காவிரியையும் இணைக்கும் உள்ளாற்றில் அமைந்தது கல்லணை.
இந்த கல்லணை காலத்தின் போக்கில் நீரோட்டமின்றி மணற்மேடுகளாக காட்சியளித்த காலங்களும் உண்டு..  அக்காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியான வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். கல்லணையை பல ஆண்டு காலம் ஆராய்ந்த இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் இவர் மணற்திட்டை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்தும் நோக்கில், கல்லணையில் தைரியமாக  சிறு சிறு பகுதிகளாக பிரித்து எடுத்து மணற்போக்கிகளை அமைத்தார். அப்போது கல்லணையை ஒட்டி 12 அடி ஆழம் தோண்டிய போது தான் ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் இந்த அணை எப்படி கட்டப்பட்டது என்ற கேள்விக்கு பல ஆண்டு காலம் கழித்து விடை கிடைத்தது. காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து பழந்தமிழரின் அணைகட்டும் முறையையும், பாசன மேலாண்மையையும் உலகிற்கு எடுத்து கூறினார். கல்லணைக்கு  தி கிராண்ட் அணைக்கட்  என்ற பெயரையும் Nட்டினார். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. பிரிந்த காவிரி ஆறு கல்லணையை வந்தடைகிறது. இவ்வாறு வந்தடையும் காவிரியை கல்லணையானது காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காக பிரிக்கிறது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.
இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவு அடைந்துள்ள இந்த கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன. கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும், கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன. கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழளாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. கல்லணையிலேயே பிரிந்த வெண்ணாறும், வடவாறு, வெட்டாறு, வெள்ளையாறு, கோரையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3,000 சதுர மைல் பகுதியைச் செழிக்கச் செய்துவிட்டு, கிளைகளில் சில ஆறுகள் மீண்டும் ஒன்று சேர்கின்றன. அவ்வாறு சேர்ந்து இனிப் பயன்படுத்த முடியாது என்றுள்ள கடை கோடிக் கழிவு நீரையும் மழைத் தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
இன்றைக்கு உருவாகும் அணையின் ஒவ்வொரு கல்லும் உலகின் தொன்மையான அணைகளில் ஒன்றhன கல்லணையின் பிரதிபிம்பமே. இத்தகைய பிரம்மாண்ட அணையை கட்டிய கரிகாற்சோழனுக்கு அந்த அணைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் மணிமண்டபத்தால் சோழ மன்னிற்கு கூடுதல் பெருமை. இம்மண்டபத்திலுள்ள யானை சிலையின் மீது அமர்ந்திருக்கும் கரிகாற்சோழனது சிலை காலம் கடந்து நிற்கும் கல்லணையின் பெருமையையும், தமிழர்களின் கட்டுமான திறமையையும் கம்பீரமாக பறை சாற்றுகிறது…


தேடல்கள்  தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்…

சண்டை சேவல்

தடையை தகர்த்தெறியுமா ..? சண்டை சேவல்


ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றhக இருக்கும் இந்த சேவல் சண்டைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றhலும், இந்த சேவல் சண்டை  உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் பலர் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறhர்கள்.
2000 ஆண்டுகள் பழமையான இந்த சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வௌ;வேறு இடத்துக்கு ஏற்ப வௌ;வேறு விதிகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. இந்த கோழிச்சண்டையை ஒரு விளையாட்டாக புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்து வந்ததாகவும் பின்னர் நாளடைவில் அது போட்டியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சேவல் சண்டையானது மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
சேவல்களை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
சேவல் சண்டையில் வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை என்றும், கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை என்றும் இருவகை உண்டு. இந்த இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வௌ;வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்து விடும்.
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலு}ர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்களே.
வெப்போர் சேவல்களை அசில்(Aளடை அல்லது Aளநநட) என்றேஅலைகின்றனர். காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே. அதன் அர்த்தம் “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்பதே. இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சேவல் சரியாக சண்டையிடும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்பர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று பயிற்சியின் போது கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.
சேவல் சண்டை என்பது ஒரு மணி நேரம் 45 நிமிடம் நடைபெறுகிறது. இதில் 15 நிமிடங்களுக்கு இடைவேளை. அதனைத் தான் தண்ணிக்கு எடுப்பது என்பர். அப்போது சேவலின் காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம், குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் தெம்பூட்டப்படுகிறது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. அதே போல, சேவலின் அலகு அதாவது மூக்கு மண்ணில் பட்டுவிட்டாலும், எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சேவல், லட்ச ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற சேவலை, போர் வீரனைப் போல் கொண்டாடுவர்.
இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக ரேஜh என்றழைக்கப்படும் குள்ளமான சேவல்கள், கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. இவை மட்டுமின்றி பேட்டை போன்று காட்சியளிக்கும் “பேட்டை மாதிரி” தாடியுடன் இருக்கும் “கல்வா” ஆகிய வகைகளும் உள்ளன.
வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜhக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு ஆக்ரோஷமாக்கி சேவல்களை மோதவிடுகின்றனர். கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. வால் நீளமாக இருக்கும் கத்தி சேவல்களில், பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நு}லாவள்ளுவர், ஆந்தை, மயில் என்பன.
கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல். கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள். கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை  காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.
வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம்;. சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள்.
கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் என சேவல்களில் பல இரகமுண்டு. அதேபோலக் கால்களைப் பொறுத்தும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் என நீண்டு கொண்டே போகிறது அதன் பட்டியல்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதன் பெயரே நடவு போடுதல்;. நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. பின்னர், சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். இதுவே முகைய விடுதல் என்பதாகும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதனையே “கோச்சை” எனபர்.
இத்தகைய வீர விளையாட்டாக கருதப்படும் சேவல் சண்டை அண்மை காலமாக Nதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், பண்டைய இலக்கியங்களில் 64 கலைகளுள் சேவல் சண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இத்தனை பெருமைக்குரிய அறிய விஷயமான சண்டை சேவல்களையும், அக்கலையையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.

தேடல்கள்  தொடரும்… இரா.ஜhன்சி ராணி கண்ணன்.

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...