சிறுதானியங்களை ஒதுக்கினோம் !!
பெரு வியாதிகளில் சிக்கினோம்!!
நமது முன்னோர்கள் 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்வு வாழ காரணமாக இருந்தது சிறுதானியமே! அதன் அருமையை இன்றளவும் நமக்கு உணர்த்தும் விதமாக அன்றைய காலக் கட்டத்தில் சிறுதானியத்தை ஆலய கோபுர கலசங்களில் வைத்து பாதுகாத்தனர். ஆனால் தற்பொழுது உணவின் பெரும்பகுதி பட்டை தீட்டப்பட்ட வெள்ளை நெல் அரிசியாகவும், ரசாயன இடு பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்து விளைவிக்கபட்டவைகளாக அமைவதால் பெருவியாதிகளாக கருதப்படும் சர்க்கரை, புற்றுநோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு இன்னும் பல நோய்கள் வர காரணமாகிறது. ஆனால் சிறுதானியத்தை நம் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் உறுப்புகள் நோயின்றி திறன்பட வேலை செய்ய அனைத்து நுண்ணூட்ட சத்துக்களை வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, நார் சத்து, தாது உப்புக்கள், மாவுச்சத்து, புரத சத்து போன்றவற்றை தேவையான அளவு நமக்கு கிடைக்கிறது. எனவே சிறதானியமானது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை
No comments:
Post a Comment