இயற்கையின் அற்புதம் வேம்பு
கிராமங்களின் மருத்துவச்சாலை
மனித வாழ்வின் அமுத
சுரபி
இந்தியாவின்
எல்லா இடங்களிலும் கடற்கரை ஒரங்களை தவிர்த்து
மிதமான மழை பெய்யும் இடங்களில்
வளரும் ஒரு எண்ணெய் வித்து
மரம் வேம்பு. நீண்ட நெடு
மரமான இது இயற்கை நம்மண்ணிற்களித்த
வரம். அத்தகைய அற்புதம் நிறைந்த
வேம்பினை பற்றிய சிறு தொகுப்பினை
தற்போது காணலாம்…
தமிழர்களின்
பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும்,
வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட வேம்பு, சங்க
இலக்கியங்களில் “தெய்வம் சார்ந்த பராரை
வேம்பு” என்று சிறப்பிக்கப்படுகிறது. அத்தகைய பெருமை
வாய்ந்த வேம்பிற்கு அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம்,
பிசுமந்தம், வாதாளி என வேறு
பெயர்களும் உண்டு. நிலத்தின் அமிலத்
தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தன்னிகரற்ற வேம்பனாது இந்தியா, இலங்கை, பர்மா போன்ற
நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள
மூலிகை மரமாகும்.
அதாவது,
வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு
வகை மருத்துவ குணம் கொண்டது. இது
உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக்
கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள்
அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள்
பரவுவது போல் பரவுவது இல்லை.
நன்றhக தழைத்து வளர்ந்து
இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும்
பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி
உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில்
அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும்.
உடல் உபாதைகளும் நீங்கும். இதனால் தான் மன
நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம்
வேப்ப மரங்களை காண முடியும்.
இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள்
குணமடைய வாய்ப்பு உண்டு. இயற்கையாகவே வேப்பமரத்தின்
இலைகளின் நுனி பகுதிகள் பூமியை
பார்த்த படியே கீழ் நோக்கி
இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின்
போது
வெளியாகும்
ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஓசோன்
கலந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும்,
பராசக்தி மூலிகை என்ற சிறப்புப்
பெயர் பெற்ற வேம்புமூலிகைகளில் பெரும்
சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின்
பூர்விகம் இந்தியாவும் பாகிஸ்தானும் தான். பின் உலகம்
முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது.
அதாவது, 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம்
வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு
வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம்
காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக
இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது.
இதனையடுத்து 2000ல் இந்தியாவிற்கு சாதகமாக
யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.
ஆலமரத்தைப்
போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள்
வளரக்கூடிய மரமான வேம்பு, சாதாரணமாக
30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது.
நல்ல வளமான களிமண்ணில் 50 அடி
முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது
எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக
வளர்ந்து நல்ல நிழல் தரும்
மரம். பொதுவாக வேப்ப மரத்தைப்
பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும்
நல்ல மன அமைதியை மக்கள்
பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும்
வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர்
பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம்
தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது.
கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக்
கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு
சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும்,
எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம்.
இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும்
அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு,
மகளிர் அழகு சாதனப் பொருட்கள்
மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும்
பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள்
மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை,
காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல்
வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் வேம்பு பயன் படுகிறது.
ஜூன் –
ஜூலையில் கனிகள். மார்ச்சு – ஏப்ரலில்
பூக்கள் என பல்லாண்டு வாழும்
மரமான வேம்பானது கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல
வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக்
அழைக்கின்றேhம். ஏறக்குறைய 400 ஆண்டுகள்
வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது
இந்த வகை வேம்பின் எண்ணெய்
உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும்
பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு
விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி
வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை.. ஜுரத்தைப் போக்கவும்
பயன்படுகிறது. எண்ணெய்.. மூலம், பலவீனம், கருத்தடை,
தோல்நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை,
புற்றுநோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது.
இவ்வாறhக, மனித உடலில்
உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும்
மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக
வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை
,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல்
ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின்,
வேப்பங்காய், வேப்பம்
பழம், பூ, இலை, இலையின்
ஈர்க்கு, வேப்பங்கொழுந்து
போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த
, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப்
பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், வேம்பின் இலையானது நச்சினை முறிக்கும் தன்மை
மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும்
அழிக்கும் தன்மை உடையது..
இதனால்
தான் அம்மை கண்டுள்ள வீட்டின்
வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள்
. இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல்
இருக்கும். அம்மை நோய்க்கு ஆளானவர்களை
வேப்பிலை மீது தான் படுக்க
வைத்திருப்பார்கள் . இது அம்மை நோய்
இறங்கும் போது உடம்பில் ஒரு
வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் . இதை தடுக்கவே இவ்வாறு
செய்கிறhர்கள். அம்மை நோய்
இறங்கிய பின் தலைக்கு தண்ணீர்
விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும்
சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை
ஒன்றhக அரைத்து எடுத்த
விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசி
பின் உடம்பை கழுவுவார்கள்.
மரங்கள்
அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக
கருதப்படும் வேம்பை நாமும் கோயில்கள்,
குளக்கரை மற்றும் பொது இடங்களில்
நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான
ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பல
நன்மைகளை பெற்று வாழலாம்..
தகவல்கள் தொடரும்…
No comments:
Post a Comment