துயரம் தரும் நெடுவாசல்
ஹைட்ரோ
கார்பன்
திட்டம்
புதுக்கோட்டை
மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க
அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து
அப்பகுதி பொதுமக்களின் போராட்டம் தொடங்கியிருக்கிறது. இப்படி பொதுமக்களின் எதிர்ப்பை
சம்பாதித்துள்ள அந்த திட்டம் குறித்தும்,
அதன் பின்னணி பற்றியும் கொஞ்சம்
விரிவாக பார்ப்போம் இத்தொகுப்பில்…
கார்பன்
மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ
கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள்
ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை மற்றும் சாண
எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா,
ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த
வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான்.
பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள்
புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில் தமிழகத்தில் நெடுவாசலும் ஒன்று.
நெடுவாசலில்
கடந்த 2006-ஆம் ஆண்டே இதற்கான
பணிகள் தொடங்கிவிட்டன. நெடுவாசலை மையமாகக்கொண்டு வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு,
கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு
ஆய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன.
இந்த திட்டத்தில் 6,000 அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில்
இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது.
இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும்.
இதன் காரணமாக கடல் நீர்
உட்புகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே
அந்த கிராம மக்களின் அச்சம்.
இதன் காரணமாக 21 லட்சம் ஏக்கர் நிலம்,
உப்பு நிலமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள்
மிக அதிகம் உள்ளது என்ற
அப்பகுதி மக்கள், நெடுவாசலை சுற்றி
100 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் பெரிதும்
பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த திட்டத்தை கைவிட
வேண்டும் என்று கோரிக்கையும்
வைத்துள்ளனர்.
ஹைட்ரோ
கார்பனிற்கு சதுப்பு நில வாயு
என்ற பெயரும் உண்டு. எரியும்
பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும்
இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு
நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது
பார்ப்பதற்கு திடீர் என்று ஒரு
தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால்
இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்றும் அழைப்பதுண்டு.
மீத்தேனின்
வேதியியல் அமைப்பான இது விஷத்தன்மை பொருந்தியதாகும்.
இலை, மரங்கள், உயிரின உடல்கள் மக்கி
பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறி, காற்று மாசிலுள்ள
ஹைட்ரஜனுடன் சேர்ந்து மீத்தேனாக மாறுகிறது. பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயுவானது
தொடர்ச்சியாக நகரும் பண்புள்ளது, இவ்வாறு
நகரும் மீத்தேன் இறுதியில் பூமிக்கு அடியில் உள்ள படிவுப்பாறைகளில் தங்கிவிடுகிறது. இந்தியாவில் இது போன்ற வாயு
படிவுப்பறைகள் கங்கை சமவெளியில் மிகுந்து
காணப்படுகிறது. பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த
பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில் அதனை
சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல்
வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக்
கொள்ளும். இவை போதாதென்று பூமியின்
மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே
செல்ல வாய்ப்பு மிக அதிகம்.
2011-இல்
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு
மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தைச்
சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜp
கார்பரேசன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம் போட்டது. இந்த திட்டத்தின் படி
பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை
டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி
மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம்.
இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள்
முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச்
சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக
எதிர்ப்புத் தெரிவித்தன. அப்பொழுது,அது தொடர்பாக தேசிய
பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மீத்தேன்
திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர்
குழு ஒன்றை அமைக்க வேண்டும்
என்று தமிழக அரக்கு பசுமைத்
தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின்
பரிந்துரையின் பேரில் தமிழக அரசும்
மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தது.
ஆனால் தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு
அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான
திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த
15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான்
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன்
எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி
வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம்
என்பது நாம் முன்னரே பார்த்த,
ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில்
அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களான மீதேன்,
ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின்
கலவையை பூமியில் துளையிட்டு எடுப்பதுதான். இவற்றை ஷேல் காஸ்,
டைட் காஸ் என்று பிரிக்கலாம்
எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிலத்தில்
இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது
சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன்
காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும்
என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின்
குற்றச்சாட்டு. அதுமட்டுமில்லாமல், எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கை வசமாகவும் பூமியில்
1,000 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி
நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறhர்கள் அவர்கள். இதுபோன்ற
திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள
பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள
நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை.
ஆனால் தற்போது விவசாயப் பகுதியில்
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது தான்
முக்கிய எதிர்ப்புக்குக் காரணம். காவிரி நீர்,
கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா
மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை
மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே
விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால்
நிலத்தடி நீர் வளம் முற்றிலும்
அழிந்து விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம்
முற்றிலும் அழிந்து போகும் என்கிறhர்கள் பலர்.
குடியிருப்பு
மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு
எடுக்கக்கூடாது என்ற விதிகள் இல்லையென்றhலும், கடலோர, மக்கள்
வாழாத இடங்களில் இம்முயற்சியை செய்யலாம், மாற்று வழியாக இதே
மீத்தேனை சாண எரிவாயு மூலம்
எடுப்பதை ஊக்குவிக்கலாம் என்ற விவசாயிகளின் மனக்குமுறலையறிந்த இயற்கை
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 2013 ஆண்டிலேயே மீத்தேன் திட்டதிற்கான மாற்று திட்டத்தை கூறியிருக்கிறhர். அந்த மாற்றுத்திட்டம்
குறித்து நம்மாழ்வார் பேசிய வீடியோ ஒன்று
இணையத்தில் உலா வருகிறது. அந்த
வீடியோவில், மீத்தேன் திட்டத்திற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும்
சாண எரிவாயு கலன் அமைத்து
அதன் மூலம் சமையல் எரிவாயு
, மின்சாரம் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம் . இதற்காக அரசு நிதி
ஓதுக்கினாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மண்ணில் உள்ள
வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமல்ல மண்ணின் வளங்கள் அரசாங்கத்தின்
சொத்து என அரசியல் சாசனத்தில்
எங்குமே குறிப்பிடவில்லை என உச்ச நீதிமன்றம்
மத்திய அரசுக்கு தௌpவாக எச்சரிக்கை
செய்தும் இருக்கிறது அப்படி இருந்தும் இவர்கள்
இந்த இயற்கை எரிவாயு திட்டங்களை
கொண்டுவர காரணம் ஏன் என்பது
குறித்தும் உரையாற்றியிருக்கிறhர்.
(breeth…)
நம்மாழ்வார் வீடியோ
தமிழக மக்களுக்கு விருப்பமில்லாத இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஒவ்வொரு
பஞ்சாயத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தை மத்திய அரசுக்கும் அனுப்பலாம்,
இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகள் காலம் முடிவடைந்த நிலையில்,
அதற்கு என தமிழக அரசு
நியமித்துள்ள சிறப்பு அதிகரிகள் மூலம்
மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பது சிறந்த முறை என்றே
கூற முடியும்..
ஆக்கப்பூர்வமான
திட்டம் என்றhலும் அதன்
ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள
வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை
நிறைவேற்றும் போது இயற்கைக்கும் பாதிப்பு
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே
சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அரசின்
முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.
தகவல்கள் தொடரும்…
No comments:
Post a Comment