Monday, February 27, 2017

இயற்கையின் அற்புதம்  வேம்பு
கிராமங்களின் மருத்துவச்சாலை
மனித வாழ்வின் அமுத சுரபி

இந்தியாவின் எல்லா இடங்களிலும் கடற்கரை ஒரங்களை தவிர்த்து மிதமான மழை பெய்யும் இடங்களில் வளரும் ஒரு எண்ணெய் வித்து மரம் வேம்பு. நீண்ட நெடு மரமான இது இயற்கை நம்மண்ணிற்களித்த வரம். அத்தகைய அற்புதம் நிறைந்த வேம்பினை பற்றிய சிறு தொகுப்பினை தற்போது காணலாம்
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட வேம்பு, சங்க இலக்கியங்களில்தெய்வம் சார்ந்த பராரை வேம்புஎன்று சிறப்பிக்கப்படுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த வேம்பிற்கு அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி என வேறு பெயர்களும் உண்டு. நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தன்னிகரற்ற வேம்பனாது இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள மூலிகை மரமாகும்.
அதாவது, வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை. நன்றh தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும். இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு. இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின்  போது
வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஓசோன் கலந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதிலும், பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் பெற்ற வேம்புமூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாகிஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. அதாவது, 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு  2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. இதனையடுத்து 2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது.
ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரமான வேம்பு, சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம். பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் வேம்பு பயன் படுகிறது.
ஜூன்ஜூலையில் கனிகள். மார்ச்சுஏப்ரலில் பூக்கள் என பல்லாண்டு வாழும் மரமான வேம்பானது கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் அழைக்கின்றேhம். ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது இந்த வகை வேம்பின் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை.. ஜுரத்தைப் போக்கவும் பயன்படுகிறது. எண்ணெய்.. மூலம், பலவீனம், கருத்தடை, தோல்நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை, புற்றுநோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது.
இவ்வாறh, மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை ,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய்வேப்பம் பழம்பூஇலைஇலையின் ஈர்க்குவேப்பங்கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில், வேம்பின் இலையானது நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது..
இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள் . இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும். அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள் . இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் . இதை தடுக்கவே இவ்வாறு செய்கிறhர்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்கு தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றh அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசி பின் உடம்பை கழுவுவார்கள்.
மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக கருதப்படும் வேம்பை நாமும் கோயில்கள், குளக்கரை மற்றும் பொது இடங்களில் நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்..


தகவல்கள்  தொடரும்… 

துயரம் தரும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்களின் போராட்டம் தொடங்கியிருக்கிறது. இப்படி பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அந்த திட்டம் குறித்தும், அதன் பின்னணி பற்றியும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம் இத்தொகுப்பில்
கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை மற்றும் சாண எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட 31 இடங்களில் தமிழகத்தில் நெடுவாசலும் ஒன்று.
நெடுவாசலில் கடந்த 2006-ஆம் ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. நெடுவாசலை மையமாகக்கொண்டு வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி ஆகிய ஊர்களில் துளையிட்டு ஆய்வுப்பணிகள் நடந்திருக்கின்றன.
இந்த திட்டத்தில் 6,000 அடிக்கு ஆழ்துளையிட்டு பூமிக்கடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதற்காக படிப்படியாக ஒவ்வொரு கட்டங்களாக ஆழ்துளையிடப்படும். இதன் காரணமாக கடல் நீர் உட்புகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே அந்த கிராம மக்களின் அச்சம்.
இதன் காரணமாக 21 லட்சம் ஏக்கர் நிலம், உப்பு நிலமாக மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் மிக அதிகம் உள்ளது என்ற அப்பகுதி மக்கள், நெடுவாசலை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று  கோரிக்கையும் வைத்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பனிற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு. எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்றும் அழைப்பதுண்டு.
மீத்தேனின் வேதியியல் அமைப்பான இது விஷத்தன்மை பொருந்தியதாகும். இலை, மரங்கள், உயிரின உடல்கள் மக்கி பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறி, காற்று மாசிலுள்ள ஹைட்ரஜனுடன் சேர்ந்து மீத்தேனாக மாறுகிறது. பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயுவானது தொடர்ச்சியாக நகரும் பண்புள்ளது, இவ்வாறு நகரும் மீத்தேன் இறுதியில் பூமிக்கு அடியில் உள்ள   படிவுப்பாறைகளில் தங்கிவிடுகிறது. இந்தியாவில் இது போன்ற வாயு படிவுப்பறைகள் கங்கை சமவெளியில் மிகுந்து காணப்படுகிறது. பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில்  அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல் வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக் கொள்ளும். இவை போதாதென்று பூமியின் மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.
2011-இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜp கார்பரேசன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த திட்டத்தின் படி பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள் முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அப்பொழுது,அது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்  மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசும் மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தது.
ஆனால் தற்போது, புதுக்கோட்டை மாவட்டம்  வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது நாம் முன்னரே பார்த்த, ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுப்பதுதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்று பிரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமில்லாமல், எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கை வசமாகவும் பூமியில் 1,000 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறhர்கள் அவர்கள். இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை.
ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது தான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம். காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் வளம் முற்றிலும் அழிந்து விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என்கிறhர்கள் பலர்.
குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு எடுக்கக்கூடாது என்ற விதிகள் இல்லையென்றhலும், கடலோர, மக்கள் வாழாத இடங்களில் இம்முயற்சியை செய்யலாம், மாற்று வழியாக இதே மீத்தேனை சாண எரிவாயு மூலம் எடுப்பதை ஊக்குவிக்கலாம் என்ற விவசாயிகளின் மனக்குமுறலையறிந்த   இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 2013 ஆண்டிலேயே மீத்தேன் திட்டதிற்கான மாற்று திட்டத்தை கூறியிருக்கிறhர். அந்த மாற்றுத்திட்டம் குறித்து நம்மாழ்வார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அந்த வீடியோவில், மீத்தேன் திட்டத்திற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு கலன் அமைத்து அதன் மூலம் சமையல் எரிவாயு , மின்சாரம் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம் . இதற்காக அரசு நிதி ஓதுக்கினாலே போதும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த மண்ணில் உள்ள வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமல்ல மண்ணின் வளங்கள் அரசாங்கத்தின் சொத்து என அரசியல் சாசனத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு தௌpவாக எச்சரிக்கை செய்தும் இருக்கிறது அப்படி இருந்தும் இவர்கள் இந்த இயற்கை எரிவாயு திட்டங்களை கொண்டுவர காரணம் ஏன் என்பது குறித்தும் உரையாற்றியிருக்கிறhர்.
(breeth…) நம்மாழ்வார் வீடியோ
தமிழக மக்களுக்கு விருப்பமில்லாத இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தை மத்திய அரசுக்கும் அனுப்பலாம், இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகள் காலம் முடிவடைந்த நிலையில், அதற்கு என தமிழக அரசு நியமித்துள்ள சிறப்பு அதிகரிகள் மூலம் மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பது சிறந்த முறை என்றே கூற முடியும்..
ஆக்கப்பூர்வமான திட்டம் என்றhலும் அதன் ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை நிறைவேற்றும் போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அரசின் முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.

தகவல்கள்  தொடரும்… 

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...