Tuesday, April 26, 2016

சிந்தனைக்கு சில வரிகள்

* வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையாயினும் அதற்கு வளைந்து கொடுங்கள்; முறிந்து விடாதீர்கள். 

* உங்களின் திறமைகளைக் கட்டியெழுப்பி அவற்றை மேற்கொண்டுவரப் பாருங்கள். அயர்ந்துவிடாதீர்கள். 

* உங்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக் கோளை ஏற்படுத்தி அதற்கேற்ப துடுப்பினை களைக் காது, சலிக்காது வெற்றியடைய வேண்டும் என்ற நோக் கோடு கப்பலை பெரும் புயலின் வழியே நகர்த்துங்கள். 

* குறிக்கோளினை அடையும் போது தோல்விகள் குறுக் கிட்டால், நீங்கள் அவமானப்பட்டுவிட்டதாக எண்ணா தீர்கள். உங்களிடம் முயன்று பார்க்கும் துணிவு துளிர்விட்டிருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

* நீங்கள் வெற்றிபெற வேண்டுமாயின் தன்னம்பிக் கையையும், விடா முயற்சியையும் கைவிடாதீர்கள். நம்பிக்கையும், முயற்சியும் தான் வெற்றிக் கிரீடத்தின் ஒளிமிகு இரு வைரங்கள். 

* உங்களின் கடந்தகால அனுபவங்கள்தான் உங்கள் வழிகாட்டிகள், அவற்றைப் பின்பற்றி புத்திசாலித்தனமாக, விவேகமாக முன்னேறுங்கள். வாழ்க்கை உங்கள் நண்பன். வரலாறு உங்கள் வழிகாட்டி.

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...