Monday, May 16, 2016

வெற்றி ?

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஓன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.

இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை பிறரது தோல்வியை தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஓன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஒன்று வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஓரு புதிர் போட்டாள். 'அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். 'அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு' என்றார் மகளிடம். ';... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை. ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது இலட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஓரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது.

உடனே அம்மாவிற்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும்.

சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா?

கேட்டது கிடைப்பது வெற்றி. கொஞ்சம் முன் பின்னாகக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாதபடி சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு.

வளர்ந்த பிறகும் இந்தக் குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள்... முதலில் மறுத்துவிட்டுப் பிறகு மனம் மாறிக் கணவன் வாங்கிக் கொடுத்தால் உடுத்தமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் நோகச் செய்து தோற்கடிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைவார்கள்.

நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது? அதனால்தான் பகை வளர்கிறது. தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

குறிப்பு: இந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் ஒருசில அல்லது எல்லாமே உங்களிடம் இருக்குமேயானால் நிதானமாக மனதை ஒருமைபடுத்தி ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் படித்து பாருங்கள் உங்களின் தவறு விளங்கும், அதனை திருத்திக் கொண்டு உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள வழிகிடைக்கும். அதுவல்லாமல் ஆழ்ந்த மற்றும் பரந்த சிந்தனையில்லாமல் படிப்பீர்களேயானால் வெற்றி அடைய முயற்சிப்பதை விட்டுவிட்டு பழைய நிலையைவிட மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்

- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.
- மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.
- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.
- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.
- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

வெற்றி மொழி

வில்லியம் ஆர்தர் வார்டு

1921 ஆண்டு முதல் 1994 வரை வாழ்ந்த வில்லியம் ஆர்தர் வார்டு அமெரிக்க எழுத்தாளர். தனது ஊக்கமூட்டும் மேற்கோள்களின் மூலம் பெரும் பாராட்டினைப் பெற்றவர். மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்புக்களான நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தனது இலக்கிய பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் இவரது நீதிமொழிகள் புகழ்பெற்றவை.
# கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா?
# உங்களால் கற்பனை செய்யமுடியும் என்றால், அதை அடையவும் முடியும். உங்களால் கனவு காணமுடியும் என்றால், அதுவாகவே மாறவும் முடியும்.
# இன்றைய நாள் மிகவும் அசாதாரண நாள். ஏனென்றால், இதற்குமுன் இன்றுபோல் நாம் வாழ்ந்ததில்லை, இதற்குப்பின் இன்றுபோல் வாழப்போவதும் இல்லை.
# சாதாரண ஆசிரியர் சொல்கிறார்; நல்ல ஆசிரியர் விளக்குகிறார்; மேம்பட்ட ஆசிரியர் நிரூபிக்கிறார்; மிக உயரிய ஆசிரியர் ஊக்கமளிக்கிறார்.
# நாம் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததைக் கண்டறிய முற்படும்போது, நம்மிடம் உள்ள சிறந்ததை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும்.
# ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி ஆகிறது.
# ஆர்வம் என்பது கற்றல் என்னும் விளக்கில் உள்ள திரியினைப் போன்றது.
# மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு சிறைதான்.
# மகிழ்ச்சி என்பது ஒரு உட்புற பணி ஆகும்.
# அவநம்பிக்கை புகார் செய்கின்றது; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்கின்றது; யதார்த்தம் சிக்கலை சரிசெய்கின்றது.
# சிக்கல் தற்காலிகமானது மற்றும் நேரம் சக்தியளிப்பது ஆகிய உண்மைகளை கற்றுக்கொண்டவரே விவேகமானவர்.
# வாய்ப்புகள் என்பவை சூரியோதயம் போன்றவை, நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால் அவற்றை இழக்க நேரிடும்.

வெற்றி மொழி

சோபோக்ளிஸ்


சோபோக்ளிஸ், கிமு 496 முதல் 406 வரையிலான காலத்தை சேர்ந்த பண்டைய கிரேக்க நாடக ஆசிரியர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளதாக வரலாற்று ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவற்றில் ஏழு நாடகங்கள் மட்டுமே இப்பொழுது முழுமையாக கிடைத்துள்ளன. அக்கால விழாக்களில் நடைபெற்ற நாடக போட்டிகளில் அதிக முறை வெற்றிபெற்ற பெருமை இவருக்குண்டு. தன்னுடைய படைப்புகளின் மூலமாக, பாரம்பரிய கிரேக்க நாடக உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.


விரைவான முடிவுகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முடிவுகளாகவே உள்ளன.

ஒரு சிறிய கருத்து பெரும்பாலும் அதிக ஞானத்தை கொண்டிருக்கின்றது.

ஞானமிக்க சிந்தனை உடையவர்கள் அனைத்து இடங்களிலும் மேம்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

ஏழ்மையான மனிதன் கூட மரியாதைகளைப் பெற முடியும்.

மகிழ்ச்சியின் மிகவும் உயர்வான பகுதி ஞானமே.

தீய ஆலோசனை வேகமாகப் பயணிக்கின்றது.

அராஜகத்தை விட அதிக கேடானது வேறு எதுவுமில்லை.

அதிகப்படியாக பேசுவது என்பது ஒரு வகை, சரியான தருணத்தில் பேசுவது என்பது மற்றொரு வகை.

ஏமாற்றி வெற்றி பெறுவதைவிட, நேர்மையான தோல்வியையே நான் விரும்புகிறேன்.

பயனுள்ள எதையாவது கற்றுக்கொள்வதற்கு எப்போதும் விருப்பமாய் இருங்கள்.

துன்பங்கள் இல்லாமல் ஒருபோதும் வெற்றி இல்லை.

தவறான ஆலோசனையை விட மோசமான எதிரி வேறு எதுவுமில்லை.

வெற்றி எப்போதும் முயற்சியை சார்ந்தே இருக்கின்றது.

எந்த செயலையும் செய்யாத ஒருவருக்கு, அதிர்ஷ்டம் எந்த உதவியையும் செய்யாது.

யார் தேடிச்செல்கிறார்களோ அவர்களே கண்டடைகிறார்கள்.

Friday, April 29, 2016

சட்டமன்றத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்," என்றார்.

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்; இதனால் நகரம் பிதுங்கிவழிகிறது; உயிரைச் சுமந்துசெல்லும் அவசர ஊர்திகூட சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை; இதனால் நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவை பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு அமைந்தால் தலைநகரை மாற்றி அமைக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 314 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், 49 உத்தேசத் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில...

பசுமைப் பத்தாண்டு
பத்தாண்டுப் பசுமைத் திட்டம் என சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை பற்றியும் சணல்நார்ச் செடி என தனியாகவும் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பற்றிய கவிதை ஒன்றும் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பொறியாளர்
தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தூய்மைப் பொறியாளர் எனக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும் என்கிறது.
வனக் காவலர் வீரப்பன்
சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழர்களின் வனக் காவலர்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 'ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும்'. ‘இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம்செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூஃப், வீரத் தமிழன் முத்துக்குமார், மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காக்க தன்னுயிரை ஈகம்செய்த வீரத்தங்கை செங்கொடிக்கு தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்.

Tuesday, April 26, 2016

எனது தமிழ் பணியில் உங்கள் கருத்துகளும், அறிவுரைகளும் எனக்கு தேவை


உங்கள் கருத்தை எனக்கு பகிரவும்
என்றும் அன்புடன்
சமூக ஆர்வலர்
திருமதி.இரா.ஜான்சிராணி கண்ணன்
மரங்கள் இயற்கையின் வரங்கள்


உயிருக்கும் மேலானது நட்பு

தோள் கொடுக்க தோழனும்..
தோள் சாய தோழியும்..
கிடைத்தால்…
தோழன் எனக்கு தந்தை
தோழி எனக்கு தாய்..
நட்பால் மட்டும் தான்
இது சாத்தியமாகும்..

friends for ever

Friend

F..   First
R..  Relation
I..   in
E..  Earth (which)
N..  Never

D..  Dies….

அம்மா


உனக்கு வலி கொடுத்து
பிறந்த
காரணத்தால் தானோ
எனக்கு வலி
ஏற்படும் போதெல்லாம்
அழைக்கிறேன்
உன்னையே
அம்மா என்று.

கவிதைகள்



நான் ரசித்த சில கவிதைகள்


உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!

காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி 

ஒளிவட்டம் தோன்றும்... 

உலகம் அர்த்தப்படும்... 

ராத்திரியின் நீளம் 

விளங்கும்.... 


உனக்கும் 

கவிதை வரும்... 

கையெழுத்து 

அழகாகும்..... 

தபால்காரன் 

தெய்வமாவான்... 


உன் பிம்பம் விழுந்தே 

கண்ணாடி உடையும்... 

கண்ணிரண்டும் 

ஒளிகொள்ளும்... 


காதலித்துப்பார் ! 



தலையணை நனைப்பாய் 

மூன்று முறை 

பல்துலக்குவாய்... 


காத்திருந்தால் 

நிமிஷங்கள் வருஷமென்பாய்... 

வந்துவிட்டால் 

வருஷங்கள் நிமிஷமென்பாய்... 


காக்கைகூட உன்னை 

கவனிக்காது 

ஆனால்... 


இந்த உலகமே 

உன்னை கவனிப்பதாய் 

உணர்வாய்... 

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம் 

இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும் 

ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்! 



இருதயம் அடிக்கடி 

இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில் 

உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி 

உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின் 

திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள் 

நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்... 

பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்! 


சின்ன சின்ன பரிசுகளில் 

சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும் 

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்... 

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்... 

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே 

வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்... 

காதலித்துப் பார்!

உலகின்
படைப்புகளெல்லாம்
உழைப்பின்
சிதறல்களே..!
உலகத்திலிருந்து
உழைப்பை
கழித்தால்
வெறும்
மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..! 
அதனால், 
உழைப்பாளிகளை
மதிப்போம்..! 
உலகத்தை காப்போம்.!


கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி?
1 . முதல் படி - முன்னுரை 
உங்கள் கதை எதைப் பற்றியதாக இருக்கும் என்பதற்கான அடிப்படையை நீங்கள் இங்கே கொடுக்கலாம் 
* என்ன நேரம்?
* என்ன சூழ்நிலை?
* யார் நிலையிலிருந்து கட்டுரை வருகிறது?
எ-கா -
அப்போது மாலை நேரத் தென்றல் மிகவும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. செடிகளில் பூத்துக்குளுங்கிக்கொண்டிருந்த மலர்கள் இலைதழைகளோடு சேர்ந்து தலை அசைத்துக்கொண்டு நடனம் ஆடின. அது மட்டுமாடூ அவற்றின் நறுமணமும் காற்றோடு சேர்ந்து கலந்து அப்பூங்கா எங்கும் பரவிக்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது. 
மாலை நேரத்தில், ராமு என்ற பையன் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கிறான், அவன் துன்பங்களை மறப்பதற்காக பூங்காவில் காற்று வாங்குகிறhன்.  பின்னர் என்ன நடக்கிறது?
 2 . இரண்டாம் படி - கட்டுரை வளர்ச்சி
* ராமுவுக்கு என்ன கஷ்டம்?
* அது, அவை எதனால், யாரால், எப்படி உண்டானது?
* அவற்றைச் சமாளிக்க ராமு என்ன செய்தான்டூ யாராவது உதவி செய்தார்களா?
* இறுதியில் என்ன நடந்ததுடூ ராமு கஷ்டங்களிலிருந்து விடிக்கப்பட்டானாடூ இல்லையா?
 3 . மூன்றhம் படி -  முடிவு
* இறுதியில் ராமுவுக்கு மன நிலை எப்படி இருந்தது?
* இச்சம்பவத்திலிருந்து ராமு என்ன கற்றுக்கொண்டான்?
சரி... இப்போது, நீங்கள் இந்தத் தொடக்கத்தை  வைத்துக் கொண்டு எனக்கு ஒரு கதையை எழுதிக் காட்டுங்கள் பார்க்கலாம்.
கதை அல்லது கட்டுரை எழுதும் பொழுது, நீங்கள் அழகிய சொற்கள், இனிய வாக்கியம், பழமொழிகள், திருக்குறள் அனைத்தும் புகுத்தி எழுத மறக்க வேண்டாம்

உங்களின் படைப்புகளுக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே…

உடல் உறுப்பு தானம்


உடல் உறுப்பு தானம்


 'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
 தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

Summer Tips


வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!


விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.
பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்
இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
காய்ச்சல் குணமாகும்
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.
நினைவுத் திறன் கூடும்
மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழகு சாதனப்பொருள்
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே...!


தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி... குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
இந்த கலரான குளிர்பானங்களால் உடலில் தேவையற்ற கலோரிதான் சேருமே தவிர, வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் டாக்டர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகியவையும் அமோகமாக விற்பனையாகின்றன. இவற்றை தவிர்ப்பதும் நல்லது.
எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.
வெளியில் சென்றால் கையோடு ஒரு பாட்டிலில் சுத்தமான குடிநீரை எடுத்து செல்லுங்கள். இல்லையென்றால், இயற்கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.
மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகியவையும் நல்லதுதான். அதேநேரம், அவற்றில் சேர்க்கப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்தவரை, அவற்றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொள்வதுதான் சிறந்தது.
கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்!
கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.
கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.
நோய்க்கான அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.
குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.
கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.
உணவுகள்:
இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.
கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

சாவு - என்ன டா உலகம் இது

உயுருடன் இருக்கும் போது
ஒரு வாய் தண்ணீர் கொடுக்க 
உறவுகள் இல்லா உலகத்தில் 
செத்த பிறகு 
ஒப்பாரி வைக்கவும் ஓலமிடவும் 
ஓடி வருது உறவுகள்.


தாய் மொழி


'அ' எழுதும் போது என்னுள் பிரவகிக்கும் அன்னியோன்யம் 
அன்பாய்ச் சுட்டிச் செல்கிறது என் தாய் மொழி தமிழ் என்று.

இரசிக்க மறந்தேன்


ஒரு அழகியை 
இரசிக்க மறந்தேன் 
மனைவி என்பதால்!

புதுக் கவிதை



மானுடத்தைக் காக்க வா! கண்ணா!!

குழலிலே இசையானாய் கண்ணா
அலையிலே துயிலானாய் கண்ணா
சலங்கையிலே ஆடலானாய் கண்ணா
தென்றலிலே சுகமானாய் கண்ணா
மழையிலே தண்ணானாய் கண்ணா
தீயிலே ஒளியானாய் கண்ணா
விண்ணிலே ஒலியானாய் கண்ணா
மண்ணிலே உயிரானாய் கண்ணா
வேதத்தின் பொருளானாய் கண்ணா
பார்தனுக்குச் சாரதியானாய் கண்ணா
பாவையரின் கனவானாய் கண்ணா
தேவகியின் தவமானாய் கண்ணா
யசோதையின் நிதியானாய் கண்ணா
கம்சனின் இறுதியானாய் கண்ணா
கீதையின் நாயகனானாய் கண்ணா
காக்கும் கடவுளானாய் கண்ணா
காத்திருக்கிறோம் கண்ணா
காப்பாற்ற வா
லஞ்சமெனும் பூதகியை
அஞ்சிடாமல் அழிக்கா வா 
ஊழலெனும் காளிங்கன் மேல்
ஊழிக்கூத்து ஆட வா
மற்றும் ஒரு கீதை பாடி வா
கற்றும் அறியா பாமரனை
திருத்தி ஆட்கொள்ள வா
நாடு காக்காமல் மக்கள்
நலம் நாடாமல் தன் நலம்
நாடும் புல்லர்களிடமிருந்து
மறுபடியும் ஒரு சுதந்திரம் பெற்றுத்தா
பலபல நரகாசுரர்களைப்
பாங்காய் வதம் செய்ய வா
மோகினி ஆட்டம் ஆடி வா
மற்றும் ஒரு புது தீபாவளி
மறக்காமல் தந்திட வா
இனிய சுதந்திரம் கண்டும்
இன்ப வாழ்வு வாழ மறந்தோம்
அடிதடியில் இன்பம் கண்டோம்
ஆறாத்துயருற்ற பூமி மாதாவும்
நாடு கொண்ட மகான் பூமியிலே
பேர் சொல்ல நல்ல பிள்ளை இல்லை என
பெயரளவிளா சுதந்திரம்
பெற்றோம் என நடுங்கி விட்டாள் நிலத்தாயும்,
கொடுமை கண்ணா.
வள்ளலே வந்து விடு
வளமான வாழ்வு கொடு
வறுமை நீக்கிவிடு
வன்முறை இல்லை என செய்துவிடு
அன்பின் பெருமை அறியச்செய்
அன்னை பூமி மகிழ ஆவனச் செய்
அவலங்கள் ஒழியட்டும்
ஆறுதல் பெருகட்டும்
சோதரி மணவாளன்
சேர்ந்து வருகைப் புரியட்டும்
நெற்றிக் கண்ணால் தீமை
எறியட்டும், அவன் மகன்
மயில் ஏறி வந்து வீணர்களை
மறு ஒரு முறை சூரசம்காரம் செய்யட்டும்
புலவர்கள் புது ஆற்றுப்படைப்
படைக்கவும் அந்நிய நாட்டினர்
பலர் நம் நாடு வந்து
பல்லாயிரம் விந்தை
கற்கவும் பாரதத்தில்
கல்லான் என்பான் இல்லை என செய்திடுவாய்
அன்றோ கெளரவர்கள் ஒரு நூறு
இன்றோ ஆயிரமாயிரம் ஆனார்கள்
கண்ணா மணிவண்ணா
வந்திடுவாய் மிக விரைவினிலே
வில்லான் அர்சுனனுடன் வந்து
புனிதப் போர் செய்து மீட்டிடுவாய்
புல்லர்களிடமிருந்து மானிடத்தைக் காத்திடுவாய்.

விவசாயம்


பழையது போக்கி புதியன வரும் போகியும்,
தைமாதத்தில் கொண்டாடும் பொங்கலையும்,
பசுக்காக கொண்டாடும் மாட்டுப்பொங்கலையும்,
குடும்பமாகக் கொண்டாடும் காணும்பொங்கலையும்,
நமக்காக உழைக்கும் விவசாயிகளின் விவசாயத்தையும்,
விளைநிலைங்கள்,பசுக்கள், மற்றும் மரங்கள் அனைத்தையும்,
இனிவரும் காலத்தில் உயிர் என காப்பாற்றுவோம்,
நம் மழலை போல் விவசயாத்தை போற்றி காப்பாற்றுவோம்
வாழ்க விவசாயம் !

மழை நீர்


பல்லாயிரம் நெஞ்கங்களை ஆனந்தத்தில் திளைக்கின்ற 
ஆனந்த நீர் நீ ...
மண்ணை செலிமை படுத்துகிற 
வலிமை நீர் நீ ...
தாவரங்களுக்கு உயிர் கொடுக்கின்ற 
அன்னை நீ ...
வரண்ட குளம் ,குட்டைகளுக்கு பெயர் சுட்டுகின்ற 
தந்தை நீ ...
பூமியல் கொடுக்க முடியாத வானத்தில் தோன்றுகின்ற 
அன்பின் பொக்கிஷம் நீ ...

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...