Wednesday, January 18, 2017

கலையுலகம் தந்த கவிமணி      
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை 20 நு}ற்றhண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். இவர் 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமி தம்பதியருக்கு மூன்றhவது பிள்ளையாக பிறந்தார். இவர் தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின்னர் ஆசிரியர் பயிற்சி படித்து தான் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901-ல் திருமணம் முடித்தார்.
நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். அதுமட்டுமில்லாமல், குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.
எட்வின் ஆர்னால்டின் எழுதிய ஆசிய ஜோதி-யைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறhர். 1922-இல் மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நு}ல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறhர். காந்தளூர்ச்சாலை பற்றிய ஆய்வு நு}லை எழுதினார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லு}ரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றhர். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். 24 டிசம்பர் 1940-ல் சென்னை பச்சைப்பன் கல்லு}ரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்களால் இவருக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1943-ல் அண்ணாமலை அரசர் இவருக்கு ஆத்தங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்கவும் இவர் மறுத்து விட்டார். கவியால் இக்கவியுலகை ஆட்சிய செய்த கவிமணி அவர்கள் 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கி புறப்பட்டார்.  அந்த வருடமே அவரது சொந்த ஊரான தேரூரில் அவருக்கு நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. மேலும், அவரை சிறப்பிக்கும் விதமாக அக்டோபர் 2005-ல் இந்திய அரசு முத்திரையை வெளியிட்டுச் சிறப்பித்தது நமது அரசு.

தேடல்கள்  தொடரும்…

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...