Wednesday, January 18, 2017

மந்திரமான ஆர்கானிக்
மின்னுவதெல்லாம் ஆர்கானிக் அல்ல
பளிச்சிடும் வெள்ளை? உஷhர்…
அளவு மட்டுமே அளவுகோல் அல்ல


ஆர்கானிக் இன்றைய வணிக உலகின் மந்திரச்சொல். ஆர்கானிக் என்று சொல்லி விற்கப்படும் பொருளுக்கு இன்றைய விலை மற்றவற்றேhடு ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். ஆனாலும் விலை எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை என்று மக்களும் ஆர்கானிக் பொருட்களை அதிகம் வாங்குவதை பெருமையாக நினைக்கின்றனர். ஆர்கானிக் என்ற சொல் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் எப்படி இருக்கும் என்று பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் வியாபாரிகளும் தங்கள் தொழில் உத்தியை பயன்படுத்தி மக்களை எளிதில் ஏமாற்றுகின்றனர். ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அதில் இந்த  விஷயங்கள் மிகவும் முக்கியம்.
உதாரணமாக, காய்கறிகள் கண்களைக் கவரும் வண்ணம் பளபளப்பாக இருந்தால், அது ஆர்கானிக் அல்ல. இயற்கை பொருட்களின் தோல் மென்மையாக சற்று சுருங்கி இருக்கும். இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரே வடிவத்திலும், ஒரே நிறத்திலும் இருக்காது. தக்காளி ஒருவாரம் வரை கெடாமல், தோல் மட்டும் சுருங்கினால் அது ஆர்கானிக்.
அதே போல, நாம் வாங்கும் ஆர்கானிக் காய்கறிகளில் 20ு முதல் 25ுவரை வண்டுகள், பூச்சிகள் இருக்கத்தான் செய்யும். வண்டுகளே ஒதுக்கிய பழங்களையும், காய்கறிகளையும் நாம் வாங்குவது நம் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வண்டுகள் தாக்கிய பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு காய்கறிகளை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக, அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் வண்டுகள் இருந்தாலோ அல்லது பழுப்பு நிறமாக இருந்தாலோ அந்த பொருட்களை தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேமித்து பயன்படுத்தலாம். சிறுதானியங்கள் பளீர் என வெள்ளையாக இருந்தால் அதில் பச்சரிசி கலக்கப்பட்டிருக்கலாம். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஆர்கானிக் அரிசிகளில் தயாரிக்கப்படும் உணவு மறுநாள் வைத்தாலும் கெட்டுப்போன மணம் வராது.
அதே போல, ஆர்கானிக் தேனை சுவைக்கும்போது சிறிது துவர்ப்புச்சுவையும் இருக்கும். தற்போது கடைகளில் சர்க்கரை, வெல்லப்பாகை சேர்த்து வேகவைத்த தேன்களே அதிகமாக கிடைக்கிறது.
தொடர்ந்து… முக்கியமாக அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துவதே ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என பிரத்யேக மணம் இருக்கும். சுவையும் நன்றhக இருக்கும்.
அடுத்ததாக, செக்கில் ஆட்டிய எண்ணையாக இருந்தால் சற்று விலை அதிகமாக இருக்கும். எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு விற்கப்படும் நல்லெண்ணெய், எள்ளை விட விலை குறைவு. செக்கில் ஆட்டிய எண்ணையானது நல்ல மணமாகவும், உணவுக்கு சுவையூட்டக் கூடியதாகவும் இருக்கும்.
இதே போல, கீரைகள் பார்ப்பதற்கு பச்சை நிறமாகவும், செழிப்பாகவும் இருந்தால், அதில் மருந்து வாசனை இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். கீரைகள் பார்ப்பதற்கு பளீர் என பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் போதாது. பச்சை மணமும் அதில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து…பொதுவாக அளவினைப் பொறுத்து மட்டுமே ஆர்கானிக் காய்கறி என  நிர்ணயித்து விடக்கூடாது. வீரிய ரக காய்கறிகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருக்கும். பயிர்களுக்கும், கனிகளுக்கும் கொடுக்கப்படும் ரசாயன உரங்களை பொறுத்தே ஆர்கானிக் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
அடுத்ததாக, ஆர்கானிக்கில் பொதுவாக கருப்பட்டி கருப்பாக இருக்கும், நாட்டுச்சர்க்கரை சுவைத்தால் நாக்கு எரியக் கூடாது.
அதே போல, நீங்கள் ஆர்கானிக் கடைகளுக்கு சென்று காய்கறிகள் வாங்குவதாக இருந்தால் எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்ற விபரங்களை விசாரிக்கலாம். விபரங்களை சொல்லாத கடைக்காரர்களிடம் காய்கறிகளை வாங்குவதை தவிர்க்கலாம். பெரிய ஆர்கானிக் கடைகளில் காய்களை வாங்குவதை விட சிறிய வியாபாரிகளிடம் விசாரித்து வாங்குவதே சரியானது.
ஆக…முடிந்தவரையில் ஆர்கானிக் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடமோ அல்லது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்தோ உற்பத்தி செய்துகொள்ளலாம். இதனால் நம் செலவு குறைவதோடு, ஆரோக்கியமும் அதிகரிக்கும்

தேடல்கள்  தொடரும்…
கலையுலகம் தந்த கவிமணி      
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

தேசிக விநாயகம் பிள்ளை 20 நு}ற்றhண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். இவர் 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமி தம்பதியருக்கு மூன்றhவது பிள்ளையாக பிறந்தார். இவர் தனது ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின்னர் ஆசிரியர் பயிற்சி படித்து தான் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901-ல் திருமணம் முடித்தார்.
நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். அதுமட்டுமில்லாமல், குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.
எட்வின் ஆர்னால்டின் எழுதிய ஆசிய ஜோதி-யைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறhர். 1922-இல் மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நு}ல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறhர். காந்தளூர்ச்சாலை பற்றிய ஆய்வு நு}லை எழுதினார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லு}ரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றhர். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். 24 டிசம்பர் 1940-ல் சென்னை பச்சைப்பன் கல்லு}ரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்களால் இவருக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1943-ல் அண்ணாமலை அரசர் இவருக்கு ஆத்தங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும், பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்கவும் இவர் மறுத்து விட்டார். கவியால் இக்கவியுலகை ஆட்சிய செய்த கவிமணி அவர்கள் 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கி புறப்பட்டார்.  அந்த வருடமே அவரது சொந்த ஊரான தேரூரில் அவருக்கு நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. மேலும், அவரை சிறப்பிக்கும் விதமாக அக்டோபர் 2005-ல் இந்திய அரசு முத்திரையை வெளியிட்டுச் சிறப்பித்தது நமது அரசு.

தேடல்கள்  தொடரும்…

வரலாற்றை எழுதினார்.. வரலாறhய் நின்றhர்…

வரலாற்றை எழுதி வரலாறhனார்…எழுத்துத்துறையின் இமயம்…

வரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர் சாண்டில்யன் நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றேhர் பெயர் , சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி.
திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லு}ரியில் படித்த  சாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி பெயர்  ரங்கநாயகி.  சில வருடங்களில் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார். சென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையை மாற்றியது.  அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை திராவிடன் பத்திரிக்கையில் பணியாற்றிய  நண்பர் சுப்பிரமணியன்  சிறுகதை எழுதத் தூண்டினார்.  சாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன். அந்தச் சிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப் படித்த எழுத்தாளர் கல்கி  எழுத்து நடையும்., சிறுகதையின் யுத்தியும் வித்தியாசமாக இருந்ததால்  அவரது பத்திரிக்கையில் (ஆனந்த விகடனில்)  சிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார். கண்ணம்மாவின் காதலி , அதிர்ஷ்டம் போன்ற சிறுகதைகள் கல்கி அவர்களது பத்திரிக்கையில் (ஆனந்த விகடனில்) வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக, அது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,  சுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .  1935 முதல்  1945 வரை  நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி சாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும் சாண்டில்யனுக்கு உண்டு.
எழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,  அதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார். அம்மா, தியாகய்யா,  என் வீடு போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதைகள் எழுதினார். சினிமா சார்ந்த தனது அனுபவங்களை சினிமா வளர்ந்த கதை என்ற பெயரில் எழுதவும் செய்தார்.  தொடக்கத்தில் சமூகக் கதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த கதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர நாவல்களின் பக்கம் நகர்ந்தார்.  அவரது சரித்திர கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின.
48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறhர் சாண்டில்யன். இதுதவிர, புரட்சி பெண் என்ற அரசியல் புதினத்தையும், நிறைய சிறுகதைகளும் கூட  எழுதியுள்ளார். கடல் புறh, யவன ராணி, கன்னி மாடம்,ராஜ திலகம், ராஜ பேரிகை போன்ற நு}ல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் உள்ளன.  
சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய விவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச் செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது.
கடல் புறhவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும் சாண்டில்யனின் வரிகளில் அது புலப்படும்…
அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது அவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில் எங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு விட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக் கப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின. அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம் செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றhள் கடாரத்தின் இளவரசி.
இந்த (ஆம்.. அந்த அத்தியாயத்தில் அவரது ) வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின் இளவரசியோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும்.
இந்த யுத்தி தான்  நெடுங்காலம் கடந்தும் சாண்டில்யனின் எழுத்துகளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

தேடல்கள்  தொடரும்…

உறுப்புகள் இல்லாவிட்டாலும் உயிர் வாழமுடியும்


உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் வௌ;வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் மட்டுமில்லை. அவை ஒவ்வொன்றின் தேவையும், அவசியமும் தான் வேறுபட்டுள்ளது.

உதாரணமாக, நம் உடலில் அப்பெண்டிக்ஸ் என்னும் உறுப்பு உள்ளது. இதை நீக்கிவிட்டால் கூட எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதுப்போன்று நம் உடலில் உள்ள பல உள்ளுறுப்புக்கள் இல்லாமலும் நம்மால் உயிர் வாழ முடியும் என்பது தெரியுமா?

நாம் அனைவரும் நுரையீரலின் இரண்டு பகுதியும் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என்று தவறhக நினைத்துக் கொண்டிருக்கிறேhம். ஆனால் மனிதன் உயிர் வாழ நுரையீரலின் ஒரே ஒரு பகுதியே போதுமானது. ஆனால், நுரையீரலின் இரண்டு பகுதிகள் பிரித்து செய்யும் வேலையை நுரையீரலின் ஒரு பகுதி மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். மேலும் நுரையீரலின் ஒரு பகுதியை மட்டும் கொண்டவர்களால், மிகவும் கடினமான செயல்களை செய்ய சிரமமாக இருக்கும்.

தற்போது பலருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. அதில் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. எஞ்சிய ஒரு சிறுநீரகத்தைக் கொண்டே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். எனவே ஒரு சிறுநீரகம் கொண்டு உயிர் வாழ முடியுமா என்ற சந்தேகமே உங்களுக்குத் தேவையில்லை.

ஒருவரது உடலில் பெருங்குடல் நீக்கப்பட்டால், அந்நோயாளியின் உடலில் கழிவுகளை சேகரிக்க வெளிப்பகுதியில் ஒரு பை பொருத்தப்படும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டவர்களது உடலில் கழிவுகள், ஆசனவாய் நோக்கி செல்லாமல், நேரடியாக பையில் சேகரிக்கப்படும். இப்படி பெருங்குடல் நீக்கப்பட்டவர்கள், இனிமேல் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண மனிதனைப் போன்று வாழ்க்கையை வாழலாம்.

அந்தரங்க உறுப்புக்கள் மிகவும் அவசியமானது தான். ஆனால் அவைகள் இல்லாமலும் உயிர் வாழ முடியும். உதாரணமாக, ஒரு பெண் மற்றும் ஆணுக்கு அந்தரங்க உறுப்புகளில் புற்றுநோய் வந்தால், சிகிச்சை அளிக்கும் போது விதைப்பை மற்றும் கருப்பையையே நீக்க வேண்டியிருக்கும். இதற்கும் உயிருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

கழுத்தில் அமைத்துள்ள முக்கிய சுரப்பியான தைராய்டு வளர்ச்சி, மெட்டபாலிசம் மற்றும் இதர செயல்பாடுகளுடன் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருந்து ஹhர்மோன் கட்டுப்பாடின்றி அளவுக்கு அதிகமாக சுரக்கப்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தைராய்டு சுரப்பி நீக்கப்படும். இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

மண்ணீரல் கடுமையாக பாதிக்கப்பட்டால், அதனை நீக்க வேண்டி வரும். மண்ணீரலை நீக்கினால் ஆபத்து உண்டோ என்று பலரும் அஞ்சுவார்கள். ஆனால் மண்ணீரல் செய்யும் பெரும்பாலான செயல்பாட்டை இதர உறுப்புக்கள் செய்வதால், இதன் அவசியம் தேவையில்லை. மண்ணீரல் உடலுக்கு பாதுகாப்பை வழங்கும் பணியை செய்வதால், இதனை நீக்கிய பின், அந்நோயாளி கடுமையான நோய்த்தொற்றhல் அவஸ்தைப்படக்கூடும். இதனைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளை அவ்வப்போது போட்டுக் கொண்டால் போதும்.

தேடல்கள்  தொடரும்…


வாழ்வின் ஒளி மேரி க்யூரி

பெண்களின் வெற்றிப்பாதைகள் ஏராளம் என்றhலும், அதற்காக அவர்கள் கொடுத்த உழைப்பு அதை விட அதிகமாகத்தான் இருக்கும்.
இன்று புற்றுநோயில் இருந்து பலர் மீள, மேரி க்யூரி கண்டறிந்த ரேடியம் வெளிப்படுத்தும் காமாக் கதிர்கள் தான் முக்கியக் காரணம். தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களைத் தாண்டி அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள், பலருடைய வாழ்க்கைக்கான வெளிச்சமாக அமைகின்றன. அத்தகைய அறிவியல் மேதையான மேரி க்யூரி பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்.
1867ம் வருடம் நவம்பர் மாதம் 7ம் தேதி, போலந்தின் தலைநகரான வார்சாவில் பிறந்தார் மேரி க்யூரி. இவருடைய இயர் பெயர்... மரியா ஸ்லொடஸ்கா. 
தன்னுடைய பத்தாவது வயதில் nஜ.சிகொர்ச்கா என்னும் உறைவிடப் பள்ளியில் சேர்ந்த மரியா (மேரி க்யூரி),  அப்பள்ளியில் சிறப்பாகக் கல்வி கற்று, தங்கப்பதக்கம் பெற்று பள்ளிப்படிப்பை முடித்தார். மரியாவின் தந்தை இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர். எனவே, அப்பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்பது மரியாவின்  விருப்பம். இதனால் இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன்,  1891ல் பாரிஸுக்குப் பயணமானார்.
தன்னுடைய காந்தம் பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால் ஐரோப்பா முழுவதும் பெருமையாகப் பேசப்பட்டவர்  பியரி க்யூரி (Pநைசசந ஊரசநை). இவரை 1895ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் மரியா. திருமணத்துக்குப் பின் மேடம் மேரி க்யூரி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
பியரி க்யூரி,மேரி க்யூரி இருவரும் இணைந்து கதிரியக்கச் செயல்பாடுகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள்  இரண்டு புதுவகைத் தனிமங்களைக் கண்டறிந்ததாக 1898ல் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டனர். அந்தத் தனிமங்களுக்கு பொலோனியம் (Pடிடடிnரைஅ), ரேடியம் (சுயனரைஅ) என்று பெயரிட்டனர். மேரி க்யூரி தன் தாய்நாடான போலந்தைக் கௌரவிக்கும் வகையில் பொலோனியம் என்றும், லத்தீன் மொழியில் ஒளிக்கதிர் என்று பொருள் கொண்ட ரே(சயல) என்ற சொல்லில் இருந்து ரேடியம் என்றும் பெயரிட்டார்.
 1903ம் ஆண்டு கதிர் இயக்கத்தையும், அதை வெளிப்படுத்தும் பொருட்களையும் கண்டுபிடித்தற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றபோது, அறிவியல் வரலாற்றின் மிக முக்கியமான பக்கத்தில் மேரி க்யூரியின் பெயர் அழுத்தமாகப் பதியப்பட்டது.
1906ம் ஆண்டு பியரி ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். இது மேரிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. சொர்போன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பியரியின் பணியை, அவர் இறப்புக்குப் பிறகு அந்தப் பல்கலைக்கழகம் மேரிக்கு வழங்கியது. ஓர் உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் நினைவாக உருவாக்க வேண்டும் என்ற கனவுடன், மேரி அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். மேரி, சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்து, ரேடியத்தை தனியே பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததுக்கான கௌரவமாக, 1911ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றhர் மேரி க்யூரி. நோபல் பரிசு பெற்ற முதல் பெண், இயற்பியல், வேதியியல் என இரு வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர், இரண்டு நோபல் பரிசுகளை பெற்ற முதல் நபர் போன்ற சிறப்புகள் மேரிக்குச் சொந்தம்.
மேரியின்  வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1914ம் ஆண்டில் நடந்த  முதல் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில்  எக்ஸ் ரே  கருவிகளைப் பொருத்தி மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தார் மேரி.
பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் க்யூரி என்ற பெயரில் மருத்துவ நிறுவனங்களை உருவாக்கியுள்ளார் மேரி க்யூரி. இவை இன்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான முக்கிய மையங்களாகத்  திகழ்கின்றன. கதிர்வீச்சின் வெளிப்பாட்டுக்கு அதிகமாக ஆளாகியிருந்ததால், அப்பிலாஸ்டிக் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட மேரி க்யூரி, 1934ல் இறந்தார்.
மனித இனம், மேரி க்யூரிக்கும் அவரின் கண்டுபிடிப்புகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது…

தேடல்கள்  தொடரும்…
உணவே  மருந்து 


அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு - என்ற முதுமொழிக்கேற்ப சில பொருட்களை அளவோடு நமது அன்றhட வாழ்வில் சேர்க்க வேண்டும். அதே போல, சில உணவு பொருட்களுடன் சிலவற்றை சேர்த்து உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம் இன்று... ஆம்...
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகி விடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் சாப்பிட வேண்டும்.
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
* பழங்களைத் தனியே தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
* ஆஸ்துமா மற்றும் சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.
* நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ அருந்தக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் அருந்தலாம்.
* அல்சர் மற்றும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
* பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.
* கோதுமையை நல்லெண்ணெய் சேர்த்து சமைத்துச் உண்ணக் கூடாது.
* மூட்டுவலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

தேடல்கள்  தொடரும்…

சாண்ட்விச் உருவான கதை   -  #SANDWICH DAY

தமிழர்களின் வாழ்வியல் உணவு அரிசிச் சோறும், இட்லி, தோசையும் தான் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் பீட்ஸh, பர்கர், சாண்ட்விச்களின் டைம் இது என்ற நிலை தற்போதுள்ளது.
அதிலும் இந்த சாண்ட்விச் இருக்கிறதே... முக்கால் வாசி குடும்பங்களில் இன்றைக்கு காலை உணவே அது தான். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் ஜhம் தடவியோ, காய்கறிக் கலவையை வைத்து டோஸ்டரில் பொறித்தோ உள்ளே தள்ளி விட்டு அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கின்றhர்கள் பலர்.
அந்த அளவிற்கு வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கும், அலுவலகம் செல்லும் பெண்களுக்கும், பேச்சுலர்களுக்கும் காலை நேர பரபரப்பில் கைகொடுக்கும் சாண்ட்விச்சைக் கொண்டாடும் ஒரு நாளும் வழக்கத்தில் உள்ளது. ஆம்... மகளிர் தினம், அன்னையர் தினம் கொண்டாட நாம் கேள்விப்பட்டிருக்கிறேhம்.. அப்படியிருக்க சாண்ட்விச்சிற்கும் ஒரு தினமா என்று சாப்பிட்டுக்கொண்டே யோசிப்பவர்கள் எல்லாம் இதை மறக்காம கேளுங்க.
சாண்ட்விச் உருவானதே ஒரு செம சுவாரசியமான கதை. இங்கிலாந்தில் உள்ள சாண்ட்விச் என்னும் ஊரினை 1762ல் ஜhன் மாண்டேகு என்னும் நிலப்பிரபு ஆட்சி செய்து வந்தார். சீட்டாட்டத்தில் உயிரையே வைத்திருந்த மாண்டேகுவிற்கு சீட்டு விளையாடும் போது சோறு, தண்ணி கூட வேண்டாம். ஆனால், வயிற்றுக்கு வேண்டுமே...பசிக்குமே..
அப்படி பசிக்கும் போது கைகளில் ஒட்டிக் கொண்டு சீட்டுகளைப் பிடிக்கவிடாமல் தடுக்கும், கரண்டி, கத்தி வைத்து சாப்பிடுவதால் சீட்டாட்டத்தை டிஸ்டர்ப் செய்யும் உணவு வகைகளை அவர் வெறுத்தார். இந்த பிரச்னைக்கான தீர்வாக அவர் கண்டுபிடித்த ஒரு செமத்தியான ஐடியா தான் ’சாண்ட்விச்’. ஏற்கனவே மக்கள், ரொட்டி - பாலாடைக்கட்டி, ரொட்டி - காய்கறி என்றெல்லாம் சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால், மாட்டிறைச்சி, இலை, தழை, பொடி வகைகளையெல்லாம் சேர்த்து புதுப்புது சாண்ட்விச் வகைகளை கண்டுபிடித்த பெருமை, ஜhன் மாண்டேகுவிற்குத் தான்.  ஒரு கையில் சீட்டுக் கட்டு, மறு கையில் சாண்ட்விச்... இதுதான் ஜhன் மாண்டேகு.
மாண்டேகு தலைவராகப் பதவி வகித்த நகரத்தின் பெயரும் அதுவே என்பதால் அவரை சாண்விட்ச் பிரபு என்று தான் மக்கள் அழைப்பார்களாம். அதனாலேயே ரொட்டித் துண்டுடன் விதவிதமான உணவுப் பொருட்களை இணைத்துச் சாப்பிடும் பதார்த்தத்துக்கும் அந்தப் பெயர் சூட்டப்பட்டது . ஜhன் மாண்டேகுவின் பிறந்தநாளான நவம்பர் 3-ந் தேதி தான் ஒவ்வொரு வருடமும் ‘சாண்ட்விச் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. இதுதான் சாண்ட் விட்ச்-ன் வரலாறு பாஸ்.
அதான் ’சாண்ட்விச் டே’ ஹிஸ்ட்ரி தெரிஞ்சுபோச்சே. வேகமா போய், மழைக்கு இதமா பிரெட்டுக்கு நடுவில் சீஸ் தடவி, புதினா சட்னி, தயிர், வெங்காயம், தக்காளி, கரம் மசாலாவெல்லாம் போட்டு சூடா ஒண்ணு சாப்டலாம் வாங்க
அப்பறம் இன்னொரு விஷயம்.. நம்ம மிஸ்டர் வேர்ல்ட் ரோஹித் கண்டேல்வால் இதத்தான் சாப்பிடுவாராம்.. பார்த்துக்கங்க

தேடல்கள்  தொடரும்…

தமிழனும்… தாமிரமும்…


தமிழர்கள் பண்டைய காலத்தில் இலக்கியமும் வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். ஏனெனில், இப்படித்தான் சமைக்க வேண்டும் என்பதிலிருந்து.. அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும்.. எவ்வாறு சாப்பிட வேண்டும்.. என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்... உதாரணமாக.. நாம் குடிநீர் அருந்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் முதல் சமைக்க பயன்படுத்தும், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் வரை அனைத்துமே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவையே.. ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்பு பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100 சதவீதம் ஆரோக்கிய நன்மைகள் தருபவையாகவே இருக்கின்றன. இந்த செப்பு பாத்திரத்தில் அறிவியல் சார்ந்த உண்மைகள் ஏதேனும் உள்ளதோ என அறிவோம் இத்தொகுப்பில்..
இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம், பித்தம் மற்றும் வாதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும் என்பது...
அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும் என்பதாகும்.
அவ்வாறு தாமிர பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..
முதலாவதாக.., தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
அடுத்ததாக, தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது என்பதால், கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
மேலும், புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
அதுமட்டுமில்லாமல், மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
அடுத்ததாக… வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளதால், செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
மேலும், நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
அடுத்ததாக... கர்ப்ப காலத்தில் பெண்களையும், அவர்களது குழந்தையையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம் என்பதோடு,
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளதால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
அடுத்ததாக, தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும் என்பதோடு, கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
மேலும், தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
எனவே, ஆரோக்கிய வாழ்விற்கு தமிழர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தாமிர கலனிலிருக்கும் நீரை அருந்;துங்கள்…

தேடல்கள் தொடரும்… இரா.ஜhன்சிராணி கண்ணன்.

அழிவின் விழிம்பில் கிராமிய கலைகள் 


பண்டைக் காலத்தில் இருந்தே சுடும் வெயிலும் கடும் குளிரும் உடல் நடுங்க வைத்த நியதி ஒன்று இருந்திருக்கிறது. அங்கே உழைப்பும், ஓய்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே வந்திருக்கின்றது. பசிக்காக மட்டுமே உழைத்து வாழ்ந்தவர்கள் தங்கள் ரசனையையும் மறந்ததில்லை. கற்கால பதிவுகள் சிதைந்து போயிருக்கலாம். பொற்கால சுவடுகளாய் உருமாறி அமைந்திருக்கலாம். ஆனால், உலகமும் உலோகமும் ஒருங்கிணைந்து முயன்றhலும் நம் மூத்தோர்களின் உணர்வுகளையும், உணர்வின் வெளிப்பாடுகளையும், யாரால் மறைக்க முடியும்? பழந்தமிழரின் உள்ளத்திலே ஏற்படும் மகிழ்ச்சி, அன்பு, கோபம், துக்கம், கவலை, ஏக்கம், காதல், கனிவு, போட்டி என உணர்வுகள் பலவும் வௌ;வேறhனாலும் உண்மை, நீதி, அன்பு, சமத்துவம் என உரிமைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்றhரிடமிருந்து உணரும் போது தான் எதிர்ப்பு கிளம்பி போர்க் குணமாகப் பரிணமிக்கிறது. அத்தகைய பரிணாமங்கள் தான் நம் மூத்த குடிகளின் கைவரிசைகளாகவும், இம் மண்ணின் கலைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கிராமியக் கலைகளில் இருந்தே நம் சாஸ்திரிய நடனமான பரதநாட்டியம் தோற்றம் பெற்றுள்ளது என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. இக்கிராமியக் கலைகள் ஒரு சில கிராமங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இக்கலையை காசுக்காக ஆசைப்பட்டு கலை சேவை செய்வதாக சிலர் நம் மண்ணில் கலைகளை கடைச்சரக்காகவும் கையாளுகின்றhர்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில் தமிழர் வாழ்வையும் அவர்தம் உரிமை மொழியும் கலைவழி மீட்டெடுக்க இந்த மண்ணில் கலைகளையே ஆயுதமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்தவொரு கலை வடிவமும் அது உயிர் வாழ்வதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை தான் உயிர் வாழும். சமூகக் காரணங்கள் மாறும்போது அக்கலைகள் தானாகவே அழிந்துவிடும். எனவே, இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக கிராமியக்கலைகள் தென்னிந்தியாவில் மட்டுமன்றி மேலை நாடுகளிலும் சில சமூக ஆர்வலர்களாலும், கலைஞர்களாலும் கொண்டு செல்லப்பட்டது. இக்கலைகளின் பிரிவுகளாக கும்மியாட்டம்,கோலாட்டம், ஒயிலாட்டம், லெசீம் ஆட்டம், கரகாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் என பல ஆடல் வகைகள் உள்ளன. இக்கிராமியக் கலைகள் அனைத்திலும் ஆண்கள் தார்ப்பாச்சி, மஞ்சள் நிற ஜpப்பா சட்டை அணிந்து கொள்வார்கள். பெண்கள் சாரியை கிராமத்து முறையில் கட்டிக் கொள்வார்கள். காலில் சலங்கைகள் கட்டி ஆடுவார்கள். இந்த கிராமியக்கலைஞர்களுக்கு இன்று முறையான அங்கீகாரம் என்று எதுவும் முறைப்படி கிடைக்கவில்லை. அதிலும் இக்கலையில் ஈடுபடும் பெண்களுக்கு பெரும்பாலும் பாதுகாப்பு கிடையாது என்பதே வேதனைக்குரிய நிஜம். அரசின் பல அமைப்புகள் கலைஞர்களின் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொண்டாலும், கலை நிகழ்த்தும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்திற்கு யார் பாதுகாப்பு அளிக்க முடியும். இப்படியான Nழ்நிலையில், கிராமியக்கலைஞர்கள் தங்கள் வாரிசுகளிடம் கலை அடையாளத்தை இழக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாகவே கூறி வருகிறhர்கள் என்பது தமிழராகிய நம்மை கூனி குறுக வைக்கிறது. நடிகைக்குக் கோயில் கட்டுகின்ற, நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்கள் வாழ்கின்ற மாநிலத்தில் தான் இந்த கிராமியக் கலைஞர்களும் வாழ்கின்றனர் என்பதுதான் வினோதமானது. இந்த கிராமியக் கலைஞர்களும், அவர்களது கலையும் பொலிவுறுமா…?   போற்றப்படுமா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…

தடையை தகர்த்தெறியுமா ..? சண்டை சேவல் 


ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றhக இருக்கும் இந்த சேவல் சண்டைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றhலும், இந்த சேவல் சண்டை  உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் பலர் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறhர்கள்.
2000 ஆண்டுகள் பழமையான இந்த சேவல் சண்டையானது, சேவல் கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வௌ;வேறு இடத்துக்கு ஏற்ப வௌ;வேறு விதிகளுக்கு ஏற்ப வௌ;வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதே போல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாக பெண் கோழி ஆதிக்க உரிமைக்காகப் பிற ஆண் கோழிகளோடு சண்டையிட்டுக் கொள்ளும். இந்தச் சண்டையை யாராலும் விலக்க முடியாது. இந்த கோழிச்சண்டையை ஒரு விளையாட்டாக புகார் நகரத்து மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்து வந்ததாகவும் பின்னர் நாளடைவில் அது போட்டியாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
சேவல் சண்டையானது மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் பழமையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
சேவல்களை சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டை பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகிறது. இதே போல இரையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமான உணவை விட உடலை வலுப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம்,பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.
சேவல் சண்டையில் வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை என்றும், கத்திகால், கத்தி கட்டு சேவல் சண்டை என்றும் இருவகை உண்டு. இந்த இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வௌ;வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது ஆனால் சேவல் சண்டை காரர்களுக்கு எளிதாகவே தெரிந்து விடும்.
சென்னை, தஞ்சாவூர், பெரம்பலு}ர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நிகழ்த்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அணைத்து வெப்போர் சேவல்களே.
வெப்போர் சேவல்களை அசில்(Aளடை அல்லது Aளநநட) என்றேஅலைகின்றனர். காரணம் “அசில்” என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே. அதன் அர்த்தம் “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்பதே. இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சேவல் சரியாக சண்டையிடும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம். பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும் போதே சண்டைபோடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன. இவற்றிற்கு சண்டை பயற்சியளிக்கும்போது அந்த குணம் மேலும் மெருகெற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்கவேண்டும் என்று அவற்றிற்கு தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம். காலில் உள்ள நெகங்கல் மட்டும் அல்லது கட்டை விரலுக்கு மேல் மாட்டு கொம்பினை ஒத்த நேகமும் வளர்கிறது. இதனை “முள்” என்பர். இந்த “முள்” அம்பின் முனைபோன்று பயிற்சியின் போது கூர்ப்பாக்க படுகின்றது. சிறந்த சேவல்கள் அந்த முள்ளை பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்தி விட முடியும்.
சேவல் சண்டை என்பது ஒரு மணி நேரம் 45 நிமிடம் நடைபெறுகிறது. இதில் 15 நிமிடங்களுக்கு இடைவேளை. அதனைத் தான் தண்ணிக்கு எடுப்பது என்பர். அப்போது சேவலின் காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம், குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் தெம்பூட்டப்படுகிறது. நல்ல தரமான சேவல் வகைகள் எதிர் சேவலை 3 நிமிடங்களில் கூட கொல்லமுடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது. அதே போல, சேவலின் அலகு அதாவது மூக்கு மண்ணில் பட்டுவிட்டாலும், எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரு சேவல், லட்ச ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். அதுமட்டுமில்லாமல் வெற்றி பெற்ற சேவலை, போர் வீரனைப் போல் கொண்டாடுவர்.
இவ்வகை சேவல்கள் பலவகைகள் உண்டு.. அவை பொதுவாக ரேஜh என்றழைக்கப்படும் குள்ளமான சேவல்கள், கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வனங்களை பொறுத்தே அழைக்கபடுகின்றன. இவை மட்டுமின்றி பேட்டை போன்று காட்சியளிக்கும் “பேட்டை மாதிரி” தாடியுடன் இருக்கும் “கல்வா” ஆகிய வகைகளும் உள்ளன.
வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களை சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.
ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலதுகாலில் இதற்காக சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜhக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு ஆக்ரோஷமாக்கி சேவல்களை மோதவிடுகின்றனர். கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.. வால் நீளமாக இருக்கும் கத்தி சேவல்களில், பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாக கருதப்படுகின்றது. நிறத்தை பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை…கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காக பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக்கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு,சித்திரப்புள்ளி, நு}லாவள்ளுவர், ஆந்தை, மயில் என்பன.
கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல். கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள். கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை  காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.
வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு. பழுப்பு நிறத்தை உடையவை பொன்(நி)றம்;. சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள்.
கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் என சேவல்களில் பல இரகமுண்டு. அதேபோலக் கால்களைப் பொறுத்தும் வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் என நீண்டு கொண்டே போகிறது அதன் பட்டியல்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர். இதன் பெயரே நடவு போடுதல்;. நடவு போடுதல் செய்த பின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது. பின்னர், சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். இதுவே முகைய விடுதல் என்பதாகும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியை பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது. போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்கு கிடைக்கிறது. இதனையே “கோச்சை” எனபர்.
இத்தகைய வீர விளையாட்டாக கருதப்படும் சேவல் சண்டை அண்மை காலமாக Nதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் தடையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், பண்டைய இலக்கியங்களில் 64 கலைகளுள் சேவல் சண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் இத்தனை பெருமைக்குரிய அறிய விஷயமான சண்டை சேவல்களையும், அக்கலையையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.

தேடல்கள்  தொடரும்…
தைத்திருநாளாம் பொங்கலுக்கு பிறகு நடைபெறும் 1500 ஆண்டுகளை கடந்த, நம்மை போன்ற தமிழர்களுடைய பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடை செய்தது சரியா? தவறh? ஏன் தடை செய்யப்பட்டது? எதற்காக என்பதைப் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பே இது…
ஜல்;லிக்கட்டு…காதலும் வீரமுமாய் வாழ்ந்த தமிழர்களின் வீர விளையாட்டு இந்த ஜல்லிக்கட்டு. இலக்கியங்களில்;; ஏறுதழுவுதல் என்று போற்றப்படும் இந்த பாரம்பரிய விளையாட்டில், முரட்டுக் காளைகளை அடக்குகிற ஆண் மகனைத்தான் பெண்களுக்கு மணமுடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அப்படி வீரத்தின் நிறமாக, கலாச்சாரத்தின் அடையாளமாக , சங்க கால கல்வெட்டில் இடம் பெற்ற இந்த ஜல்லிக்கட்டிற்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. ஆம், மிருகவதை என்ற பெயரில் அப்படியான விளையாட்டு கூடாது என்கின்றனர் அதற்கான ஆர்வலர்கள். அவர்களின் ஆர்வம் பாராட்டக்கூடிய ஒன்று. ஆனால் இதில் மிருகவதை எங்கே இருக்கிறது. 15 அடி முதல் 20 நிமிடம் வரை காளையின் திமிலை பிடித்து சென்றhல் அவன் காளையை அடக்கியவனாய] ஆவான். இப்படி ஓரிரு நிமிடங்களில் முடியக்கூடிய விளையாட்டில் வதை எங்கிருக்கிறது என்பது புரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஸ்பெயின், துருக்கி போன்ற மேலைநாடுகளிலும் இப்படியான காளைகளை அடக்கும் வீர விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடு கின்றனர். இங்கு இது போன்ற கொடுமைகள் நடப்பது இல்லை. அதையெல்லாம் விட மிக நேர்த்தியாக தகுந்த பாதுகாப்புடன் சில நிமிடங்கள் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு எந்த வகையில் வதைக்கப்படுகிறது என்பதே ஆர்வலர்களின் கேள்வி. தொடக்ககாலத்தை விட இப்போது அரசும், தகுந்த அதிகாரிகளும் மேற்பார்வையிட்டு, கட்டுப்பாடுகளை விதித்து நடத்தும் போது எப்படி வதை செய்யப்படுகிறது என்ற கேள்வியும் வருகிறது. அப்போது ஏன் விலங்குகளின் ஆர்வலர்கள் என்று கூறி தடை செய்ய நினைக்கிறhர்கள் என்றhல் வேறு அரசியல் உள்ளே நிலைக்க பார்க்கிறது. அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை நாங்கள் பொறுப்பேற்கிறேhம் என்று தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழையும் அபாயமும் இருக்கிறது அதற்கான முனைப்பு கூட இதன் பின்னனி அரசியலாக இருக்கலாம் என்ற எதிர் தரப்பு கருத்துக்களும் இருக்கிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படும் எத்தனையோ சம்பவங்கள், நடவடிக்கைகள்இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு விட்டு இந்த விளையாட்டை தடை செய்ய காரணம் என்ன? இது உலக அளவில் தமிழனின் பெருமை சொல்லும் விழாவாக இருப்பதாலா? ..
ஜல்லிக்கட்டு குறித்த தகவல்களை சங்க கால இலக்கிய நு}லான கலித்தொகை தௌpவாக எடுத்துக்  கூறினாலும், இது ஏறுதழுவுதல் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது. பண்டைய தமிழர்களின் நாகாPகத்தில் முக்கியமானதாக இடம் பெற்றிருக்கும் இந்த ஜல்லிக்கட்டு பாண்டிய நாட்டு கிராமப்புறங்களில் பெருமளவில் அரங்கேறி வந்துள்ளன. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே ஜல்லிக்கட்டு அங்கிருக்கும் அலங்காநல்லு}ரில்  முனியாண்டி சுவாமி, காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய கிராம தெய்வங்களுக்கும், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமிக்கும் நேர்த்திக்கடனாகவே நடைபெற்று வந்திருக்கிறது. பொதுவாக, ஆடி 18ம் பெருக்கு முதல் இப்பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பிக்கப்படும். விவசாய பணிகளுக்கு  பயன்படுத்தப்படும் காளைகளுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் இருந்து  பொங்கல் வைப்பது வழக்கம். பின்னர் விளைச்சலுக்கு காரணமாக இருந்த காளைகளை அலங்கரித்து கழுத்துமணி, கால் சலங்கை அணிவிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம்  பூசப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை கிராம மந்தை திடலில் வரிசையாக நிறுத்தி வைத்து கிராம மக்களின் சார்பில் தங்களுக்காக  உழைத்த காளைகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து மரியாதை செய்யப்படும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட காளைகளை  கிராம மந்தை திடலில் அவ்வூரை சேர்ந்த இளைஞர்கள், விரட்டிப் பிடித்து விளையாடி மகிழ்வர். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட காளை விரட்டு,  பின்னாளில் ஏறு தழுவுதலாக மாறியது. அப்போது காளைகளுக்கு பிடி கயிறு இருக்கும். காளைகளும், காளையர்களும் களைப்பு ஏற்படும் வகையில்  விரட்டிப் பிடித்து மகிழ்ந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் உழவுக்கு பயன்படுத்தப்படும், உழவு மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்படும்.  ஜல்லிக்கட்டுவுக்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு ஆண்மை தன்மை நீக்கப்பட மாட்டாது. பின்னாளில் ஒரு இடத்தில் மாட்டை நீண்ட  கயிற்றில் கட்டி வைத்து வடமாடு மஞ்சு விரட்டு என அழைக்கப்பட்டு, தற்போது ஜல்லிக்கட்டாக மாறியது. இதற்காக அலங்காநல்லு}ரில் முனியசாமி கோயில் திடல், பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடல் ஆகிய இடங்களில் கோயில்  திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக நிரந்தர வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தே காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆரம்ப காலங்களில் 20 முதல் 40 காளைகள் வரையே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இதை சின்ன மஞ்சு விரட்டு என்றே குறிப்பிட்டுள்ளனர்.  சின்ன மஞ்சுவிரட்டுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது  ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் 600க்கும் குறையாத காளைகள் பங்கேற்கின்றன. துவக்க காலத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் 2005 வரையே  திறந்தவெளி ஜல்லிக்கட்டாக நடந்து வந்துள்ளது. இதன் பின்னர் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், காண வரும் கூட்டத்தை  கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் சிறிய அளவிலான பாதுகாப்பு வேலிகளை அமைத்து நடத்தி வந்தனர். தற்போது  முழு அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டு முறைகளின் கீழும், மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு உயர்  அதிகாரிகள், மிருகவதை பாதுகாப்பு அமைப்பினர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தின் ஏராளமான ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த போதும், அலங்காநல்லு}ரில் நடைபெறும் ஜல்லிக்கட்டே உலக புகழ் பெற்றது. இந்த உலகப்பெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காகவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,  இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அலங்காநல்லு}ர் வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவர்களில் பல சாதாரண கூலி வேலை செய்பவர்கள் என்றhலும், அவர்கள் தங்களின் குடும்பத்தில் ஒரு  உறுப்பினராகவே காளைகளை கருதுகின்றனர். தாங்கள் உணவின்றி தவித்தாலும், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.  அதுமட்டுமில்லாமல் வயது முதிர்ந்து இறக்கும் காளைகளை முறைப்படியாக நல்லடக்கம் செய்து சமாதிகள் அமைத்து கோயில் போல் வழிபட்டு வருகின்றனர். இது  போன்ற சமாதிகள் அலங்காநல்லு}ர் அருகே பாலமேடு, பொந்துகம்பட்டி, வெள்ளையம்பட்டி போன்ற இடங்களில் உள்ளன.
இத்தகைய பாரம்பரியமும், தமிழனின் உணர்வும் கலந்த இந்த வீர விளையாட்டு வருங்கால சந்ததியினரால் காக்கப்படுமா..?

பயணம்  தொடரும்… 
தமிழகத்தின் நேரு மாமா

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். குழந்தைகள் உலகம் தான் அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். அதில் வண்டாகச் சுற்றி வந்து, தேன் கவிதைகளைக் குழந்தைகள் நெஞ்சில் தௌpத்தவர்; மற்றும் அழகழகான கவிதைகள், பாடல்களுக்குச் சொந்தக்காரர் அழ.வள்ளியப்பா. அதுவும் இன்று பல குழந்தைகள் தொலைக்காட்சியே கதி எனக்கிடக்கும் நிலையில் இவரை நினைவுகூர்வது முக்கியம்.
இவர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் என்ற ஊரில், 1922-ம் ஆண்டு நவம்பர் ஏழாம் நாள் பிறந்தவர். இவரது பெற்றேhர், அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி. தன் ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி கற்று வந்தார். பள்ளிக்குப் போகும் வழியெல்லாம் பறந்து திரிந்த பறவைகளோடு பாடிப் பரவசம் அடைந்தவர். தனது 13-ம் வயதிலேயே கவிதை இயற்றும் திறன் கைவசமாக பெற்றhர்.
                      வட்ட மான தட்டு.
                      தட்டு நிறைய லட்டு.
                      லட்டு மொத்தம் எட்டு.
                      எட்டில் பாதி விட்டு,
                      எடுத்தான் மீதம் கிட்டு.
                      மீதம் உள்ள லட்டு
                      முழுதும் தங்கை பட்டு
                      போட்டாள் வாயில், பிட்டு.
                      கிட்டு நான்கு லட்டு;
                      பட்டு நான்கு லட்டு;
                      மொத்தம் தீர்ந்த தெட்டு
                      மீதம் காலித் தட்டு என்ற
இவர் இயற்றிய லட்டும் தட்டும் என்ற தலைப்புடைய பாடல், லட்டின் இனிப்பையும் தங்கையின் அன்பையும் அழகாகச் சொல்கிறது.
                அணிலே, அணிலே ஓடி வா
                அழகு அணிலே, ஓடி வா.
                கொய்யா மரம் ஏறி வா.
                குண்டுப் பழம் கொண்டு வா.
                பாதிப் பழம் உன்னிடம்;
                பாதிப் பழம் என்னிடம்;
                கூடிக் கூடி இருவரும்
                கொறித்துக் கொறித்துத் தின்னலாம் என்ற பாடல் குழந்தைகளிடையே பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், அணிலை நண்பனாகப் பாவிக்கும் லாகவம் குழந்தைக் கவிஞருக்கு மட்டுமே சாத்தியமானது.
1940-ல் சென்னைப்பட்டணம் வந்த கவிஞர், சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளர் பணியில் சேர்ந்து, பிறகு சக்தியில் எழுத ஆரம்பித்தார். இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். 1941-ல் இந்தியன் வங்கியில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைக்க, அதில் இருந்துகொண்டே கவிதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கினார். வங்கிப் பணி ஓய்வுக்குப் பின்,1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், 1983ல் இருந்து 1987 வரை கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.
குழந்தைகளுக்காக எழுதிவரும் எழுத்தாளர்களுக்கெல்லாம் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருந்ததோடு, அவர்களை ஊக்குவிப்பவராகவும் இருந்த வள்ளியப்பா, தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்கவும், எழுதுபவர்கள் பெருகவும் 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். தமிழிலும் மற்றைய திராவிட மொழிகளிலும் குழந்தைகளுக்கான தரமான நு}ல்கள் வெளிவர வள்ளியப்பாவே காரணம்.
1981-ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் அதே தலைப்பில் சொற்பொழிவாற்றினார். குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச்செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட இவர், 1982-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்று கௌரவிக்கப்பட்டார். குழந்தைகளுக்காக இவர் 50-க்கும் மேலான நு}ல்களையும், ஆயிரத்துக்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நு}லை, தேசீய புத்தக டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது பெமைக்குரியது.
ரோஜhச் செடி, உமாவின் பூனை, அம்மாவும் அத்தையும், மணிக்கு மணி , மலரும் உள்ளம், கதை சொன்னவர் கதை, மூன்று பரிசுகள், எங்கள் கதையைக் கேளுங்கள், பர்மா ரமணி, எங்கள் பாட்டி, மிருகங்களுடன் மூன்று மணி, நல்ல நண்பர்கள், பாட்டிலே காந்தி கதை, குதிரைச் சவாரி, நேரு தந்த பொம்மை, நீலா மாலா, பாடிப் பணிவோம், வாழ்க்கை வினோதம், சின்னஞ்சிறு வயதில், பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ஆகிய படைப்புகள் என்றும் புகழ்பெற்றவை. 1944-ல் ‘மலரும் உள்ளம் ’ எனும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1961-ல் அவர் வெளியிட்ட ‘சிரிக்கும் பூக்கள் ’ எனும் கவிதைத் தொகுப்பு, ‘குழந்தைக் கவிஞர்’ எனும் பட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது.
குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இவரதுச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.

தேடல்கள்  தொடரும்…

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...